Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவராத்திரி நாயகியே!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவராத்திரி நாயகியே!

முத்தமிழாய் இனிக்கின்ற முப்பெரும் தேவியரின் விந்தைகளை வித்தைகளைக் கொண்டாடும் நாள் வருது!

இத்தரையில் பிறந்துவிட்ட அத்தனை பேரினுள்ளும் சக்தி என்றே ஒன்றேதான் இயக்கங்கள் நடத்திடுது!

"அன்னை" என்ற சொல் ஒன்றே அன்பை அள்ளி வழங்குதல் தான் தேவைகளைத் தான் அறிந்து கொடுக்கின்ற உறவு அவள் தான்!

முதல் மூன்று நாட்களும் மன உறுதி வீரம் தனை அள்ளித் தருகின்ற மலைமகளாய்!அடுத்த மூன்று நாட்களிலும் குறையாத வளம் நிறைவாகத் தரும் செல்வி திருமகளாய் நிறைவாய் மூன்று நாட்களிலும் அறிவுக்கண்ணைத் திறந்து கல்விஞானம் கொடுக்கின்ற கலைமகளாய் அருள் வழங்கும் சக்தி அவள்!

அவல்,கடலை,சுண்டல் என இந்து வீடெங்கும் களைகட்டும்! பாடல்களும் பண்ணுமங்கே மனசுக்கு சுகம் கூட்டும்! விண்ணாளும் தேவியரோ மண்ணில் நடமாட வந்தது போல் கோயிலிலும் பூஜைகளோ உள்ளத்தில் களிப்பூற்றும்!. "என்ன வேண்டும் கேளுங்கள்?" நல்லதையே நாடுங்கள் நவராத்திரி நாயகியரின் நாமம் சொல்லிப் பாடுங்கள்! இருள் நீங்கி ஒளி பெருக பாதத்தை பணியுங்கள் அனைத்துமே நலமாகும் அனைவரும் வணங்குங்கள்!...

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் உரித்தாகட்டும் சோதரி!!!

தமிழ் தங்(கை) அக்கா..கா..நவராத்திரியுடன் உங்கள் தரிசனும் கிடைத்தமை சந்தோஷம்..நலமா தமிழ் தங்(கை) அக்கா..??. :(

மற்றது எனக்கு 9 நாளும் விரதம் இருக்க ஏலா..லா ஆனபடியா ஒரு நாள் விரதம் இருக்க நான் தயார் மூன்று பேரில நான் யாருக்கு விரதம் இருக்கிறது எண்டு ஒருக்கா சொன்னா.. :)

நன்னா இருக்கும் தமிழ் தங்(கை) அக்கா..கா..!! :wub:

கல்வியா,செல்வமா,வீரமா இதில எது கிடைத்தா நன்னா இருக்கும்..ம் எனக்கும் வீரதிற்கும் தான் ரொம்ப தூரம் போல கிடக்குது..(இந்த இரகசியத்தை யாரிட்டையும் சொல்லிடாதையுங்கோ).. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு சந்தேகம் கூடிக்கொண்டு போகுது போல. இந்த பாட்டை கேளுங்கோ எல்லாம் சரியா போகும்.

கல்வியா செல்வமா வீரமா

அன்னையா தந்தையா தெய்வமா

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா

இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதம்மா

கல்வியா,செல்வமா,வீரமா இதில எது கிடைத்தா நன்னா இருக்கும்..ம் எனக்கும் வீரதிற்கும் தான் ரொம்ப தூரம் போல கிடக்குது..(இந்த இரகசியத்தை யாரிட்டையும் சொல்லிடாதையுங்கோ).. :)

ஜம்மு, உங்கள் வீரத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும் தானே. அதனால் முதல் மூன்று நாட்களும் விரதம் இருங்கோ. ஒரு நாள் காணாது. ( நான் ஒன்பது நாளும் இருக்கவேணும் போல கிடக்கு.. hmmm... என்ன செய்ய எல்லாம் விதி...)

என்ன ஜம்மு சந்தேகம் கூடிக்கொண்டு போகுது போல. இந்த பாட்டை கேளுங்கோ எல்லாம் சரியா போகும்.

கல்வியா செல்வமா வீரமா

அன்னையா தந்தையா தெய்வமா

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா

இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதம்மா

ம்ம்..கொழந்த வளர..வளர சந்தேகம் எல்லாம் கூடி கொண்டு தானே போகும்..ம்..உது தெரியாதோ..!!. :lol:

பாட்டு நன்னா தான் இருக்கு..கு..ஆனா விரதம் இருந்தா..தா 9 நாள் எண்ட வீட்டிற்கு மூன்று தேவிகளும் வந்து ஜம்மு ஒன் பக்தியை கண்டு மெச்சினோம்..ம்.. :lol:

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் எண்டு கேட்பீனமோ..மோ :lol: ..அப்படி எண்ட இருக்கிறன்..ன்..மூன்று தேவிமார் வராட்டியும்..

நான் டாவடிக்கிற ஆளாவது வருவாவோ...வோ..?? :D

இது எல்லாம் நடக்குமா தங்கச்சி..சி அப்படி எண்டா ஒண்டு செய்வோமா எனக்காக நீங்க விரதம் இருக்கிறத பத்தி என்ன நெனைக்கிறியள்..ள்..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு, உங்கள் வீரத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும் தானே. அதனால் முதல் மூன்று நாட்களும் விரதம் இருங்கோ. ஒரு நாள் காணாது. ( நான் ஒன்பது நாளும் இருக்கவேணும் போல கிடக்கு.. hmmm... என்ன செய்ய எல்லாம் விதி...)

ஒம் அண்ணா..ணா..!!

அட..அட எண்ட வீரத்தை பத்தி எல்லாருக்கும் தெரிந்து போச்சோ..சோ..??..(என்ன கொடுமை இது) :) ...மூன்று நாள் விரதம் இருக்கிறதோ அப்படி எண்டா ஒண்டு செய்யலாமோ..

காலம விரதம் இருந்திட்டு..டு இரவு மச்சம் சாப்பிடலாமோ..??..அப்படி எண்டா கட்டாயம் இருப்பன் இல்லாட்டி ஜம்மு கொழந்தை பாவம் அல்லோ..லோ..!!.. :)

அது சரி நீங்க என்னதிற்காக விரதம் பிடிக்கிறியள் அதை ஒருக்கா சொல்லுங்கோ மற்றது நல்ல காதலி கெடைக்க வேண்டு எண்டா என்ன விரதம் இருக்க வேண்டும்..ம். :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்..கொழந்த வளர..வளர சந்தேகம் எல்லாம் கூடி கொண்டு தானே போகும்..ம்..உது தெரியாதோ..!!. :lol:

பாட்டு நன்னா தான் இருக்கு..கு..ஆனா விரதம் இருந்தா..தா 9 நாள் எண்ட வீட்டிற்கு மூன்று தேவிகளும் வந்து ஜம்மு ஒன் பக்தியை கண்டு மெச்சினோம்..ம்.. :lol:

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் எண்டு கேட்பீனமோ..மோ :) ..அப்படி எண்ட இருக்கிறன்..ன்..மூன்று தேவிமார் வராட்டியும்..

நான் டாவடிக்கிற ஆளாவது வருவாவோ...வோ..?? :D

இது எல்லாம் நடக்குமா தங்கச்சி..சி அப்படி எண்டா ஒண்டு செய்வோமா எனக்காக நீங்க விரதம் இருக்கிறத பத்தி என்ன நெனைக்கிறியள்..ள்..?? :D

கொழந்த வளர வளர டவுட்டு வருகுதோ..... வரும் வரும் எல்லாம் வரும் :lol::lol:

டாவடிக்கிற ஆளின்ட அண்ணா அல்லது அப்பா உங்கட வீட்ட வாராம இருக்கிறதே நல்ல காலம் என்டு நினையுங்கோ அண்ணா :(

ஐயோ என்னால விரதம் இருக்க முடியாது 9 நாளும். ஒவ்வொருவருக்கும் 1 நாள் விரதம் இருக்க தான் தெரியும் ஆனால் 9 நாளும் சைவம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்து பார்த்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

தமிழ் தங்(கை) அக்கா..கா..நவராத்திரியுடன் உங்கள் தரிசனும் கிடைத்தமை சந்தோஷம்..நலமா தமிழ் தங்(கை) அக்கா..??. :unsure: <<<

நலமே, ஜம்மு,

ஓமோம் நீண்ட மாதமாகிப்போச்சு... ஐரோப்பிய சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொண்டு விட்டு வந்தனான்...அதுக்குப் பிறகு வேலைக்கு மேல வேலை இன்னும் ஓயவில்லை...அதனால் தான் இந்தக் களம் வரமுடியாமல் இருக்கு...

"எந்தச் சாமியும் விரதம் இருங்கோ எண்டு சொல்லேல்லை" அதனால கவலைப் படாதீங்க...பட்டினி கிட அப்பதான் கேட்டதெல்லாம் தருவன் எண்டு ஒரு நாளும் அம்மா சொல்லமாட்டா...

நல்லாச் சாப்பிடுங்கோ. நல்ல பிள்ளையாவும் இருங்கோ :o

<<<<<<கல்வியா,செல்வமா,வீரமா இதில எது கிடைத்தா நன்னா இருக்கும்..ம் எனக்கும் வீரதிற்கும் தான் ரொம்ப தூரம் போல கிடக்குது..(இந்த இரகசியத்தை யாரிட்டையும் சொல்லிடாதையுங்கோ).. :D <<<

"வீரம் தூரம் "எண்டு டி.ராஜேந்தர் பாணியில் கதைக்கிறீங்கள் :o...

கல்வி இருந்தால் செல்வம் வரும் இரண்டும் இருந்தால் வீரம் வரும்..முதலில் ஞானக்கண்ணைத் திறக்கோணும் அதுதான் முக்கியம்..

உங்களுக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்கள்... :)

மற்றது நல்ல காதலி கெடைக்க வேண்டு எண்டா என்ன விரதம் இருக்க வேண்டும்..ம். :)

இதுக்கு நான் ஒரு ஆச்சிரமம் அமைத்து ஆசி வழங்கத்தொடடங்கப்போகிறேன். எல்லாரும் காணிக்கையை ரெடியாக்குங்கோ. கிறெடிட் கிறஞ்ச் நடக்கேக்க இப்படியெல்லாம் செய்தாத்தான் கட்டுப்படியாகும். காதலன், காதலி, கணவன், மனைவி கிடைக்கவேண்டுவோருக்கு ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழித்தங்கையே நலமா?

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

கொழந்த வளர வளர டவுட்டு வருகுதோ..... வரும் வரும் எல்லாம் வரும்

டாவடிக்கிற ஆளின்ட அண்ணா அல்லது அப்பா உங்கட வீட்ட வாராம இருக்கிறதே நல்ல காலம் என்டு நினையுங்கோ அண்ணா

ஐயோ என்னால விரதம் இருக்க முடியாது 9 நாளும். ஒவ்வொருவருக்கும் 1 நாள் விரதம் இருக்க தான் தெரியும் ஆனால் 9 நாளும் சைவம்

ம்ம்.."டவுட்டு" மட்டும் தான் வருது வேற ஒண்ணும் வரல்ல தங்கச்சி..சி..(வந்தா உங்கட்ட கேட்கமாட்டனா என்ன)..எனக்கு இன்னொரு சந்தேகம் தங்கச்சி..சி.. :o

அது என்னவெண்டா..டா

ஒராள் வந்து ஏன் ஒருத்தியை மட்டும் கல்யாணம் கட்ட வேண்டும் அது தான் எண்ட சந்தேகம் அதை ஒருக்கா தீர்த்து வைக்கிறியளோ..ளோ..?? :wub:

சா..சா நான் டாவடிக்கிற ஆளின்ட அப்பா,அண்ணா யாரும் எண்ட வீட்ட வரமாட்டீனம் ஏன் தெரியுமோ..??..அவைக்கு தான் எண்ட வீட்டு விலாசம் தெரியாது..(இதில எல்லாம் நாம கெட்டி)..

விளங்கிச்சோ..சோ..!! :lol:

சரி..சரி அப்ப நீங்க சனிகிழமை காக்காவிற்கு விரதம் இருக்கிறனியளோ..நான் இருக்கிறனான் அல்லோ ஏன் எண்டா காக்காவும் நானும் சரியான "பிரண்ட்ஸ்"..

நீங்க எள்ளுசட்டி எரித்திட்டியளோ..??..(நான் என்னும் எரிக்கல அடுத்த கிழமை நீங்க அங்க எரியுங்கோ எனக்காக நான் இங்க எனக்கா எரிக்கிறன் அப்ப தான் என்னும் கூட வரம் தருவார் அவர்).. :wub:

எனக்காக இத கூட செய்யமாட்டியளா..?? :o

அப்ப நான் வரட்டா!!

கல்வி இருந்தால் செல்வம் வரும் இரண்டும் இருந்தால் வீரம் வரும்..முதலில் ஞானக்கண்ணைத் திறக்கோணும் அதுதான் முக்கியம்..

ஓ..அப்படியோ தமிழ் தங்கை அக்கா..கா "ஞானகண்ணை திறக்க" என்ன திறப்ப பயன்படுத்துறது அத ஒருக்கா கோவிக்காம சொல்லி தாறியளே.. :lol:

கள்ள சாவி ஏதாச்சும் பாவிக்கனுமோ..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இதுக்கு நான் ஒரு ஆச்சிரமம் அமைத்து ஆசி வழங்கத்தொடடங்கப்போகிறேன். எல்லாரும் காணிக்கையை ரெடியாக்குங்கோ. கிறெடிட் கிறஞ்ச் நடக்கேக்க இப்படியெல்லாம் செய்தாத்தான் கட்டுப்படியாகும். காதலன், காதலி, கணவன், மனைவி கிடைக்கவேண்டுவோருக்கு ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.

ஓ..நீங்களுமோ..!!. :wub:

அப்ப நம்ம முனி மாமுவுக்கு ஆப்பா..பா..??..சரி நான் முதலில வாரன் உங்க ஆச்சிரமதிற்கு எனக்கு காதலி மட்டும் வேண்டும் ஆனா..னா. :lol:

அவா மனைவி ஆக கூடாது..இதற்கும் ஏற்பாடு செய்து தருவியளோ..!!. :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராள் ஒருத்தியை தான் கட்ட வேணும் ஏனென்டா அதுதான் எங்கட கலாச்சாரம் பாருங்கோ. அதோட ஒரு குடும்பத்தையே பராமரிக்கிறது இந்த காலத்தில பெரிய விசயம் பாருங்கோ ஒன்டுக்கு மேல கட்டினா தாங்காது :o

இல்லை ஜம்மு எங்களுக்கு 71/2 சனி இல்லை அதால எரிக்க தேவையில்லை. அதோட நவராத்திரி காலத்தில எரிக்க கூடாது என்டு அம்மா சொல்லுறவ எதுக்கும் உங்கட அம்மாவையும் ஒருக்கா கேட்டுட்டு எரியுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..நீங்களுமோ..!!. :lol:

அப்ப நம்ம முனி மாமுவுக்கு ஆப்பா..பா..??..சரி நான் முதலில வாரன் உங்க ஆச்சிரமதிற்கு எனக்கு காதலி மட்டும் வேண்டும் ஆனா..னா. :lol:

அவா மனைவி ஆக கூடாது..இதற்கும் ஏற்பாடு செய்து தருவியளோ..!!. :wub:

அப்ப நான் வரட்டா!!

அட நம்மள விடமாட்டியள் போல . :o ............என்னது ஆப்பா எனக்கேயா நடக்கவே நடக்காது ஜம்மு :wub:

எதுக்கும் கவனமாக இருப்பேன் ஈஸிடம் ஈஸ் உங்கள் ஆச்சிரமத்திற்கு நான் தான் தலமை முனிவர் சரியா :lol:

அட நம்மள விடமாட்டியள் போல . :o ............என்னது ஆப்பா எனக்கேயா நடக்கவே நடக்காது ஜம்மு :wub:

எதுக்கும் கவனமாக இருப்பேன் ஈஸிடம் ஈஸ் உங்கள் ஆச்சிரமத்திற்கு நான் தான் தலமை முனிவர் சரியா :lol:

காலூன்றிய (புகழ் பெற்ற) முனிவரை சேர்த்துக்கொள்வதில் லாபம் தான். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு ஆப்புத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.