Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா – பிள்ளையான் முரண்பாடு மீண்டும் உக்கிரம் - கொழும்பு ஊடகம் தகவல்

Featured Replies

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது.

சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருவதால் டி.எம்.வி.பி விடுதலைப்புலிகளுடன் இணையும் வாய்ப்புகள் இருப்பதாக கருணா அணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் கூறுகிறது.

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பாதுகாவலர்கள் அல்லாத இருவர் திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்ற மாகாண சபை கூட்டத்திற்கு நேற்று முன்தினம் (செப்23) கைத்துப்பாக்கியுடன் சென்றுள்ளனர்.

ரி.எம்.வி.பியின் அரசியல் பிரதிநிதிகள் அல்லது பாதுகாவலர்கள் அன்றி வேறு எவரும் ஆயுதங்களுடன் செயற்படுவது, ரி.எம்.வி.பியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையதல்ல என கருணா தரப்புக் கூறியுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக கருத்துக்களை கருணா தரப்பினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும் இது குறித்து ரி.எம்.வி.பியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவிடம் கேட்டபோது, இந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

இது குறித்து ரி.எம்.வி.பியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவிடம் கேட்டபோது, இந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மைக்கு புறம்பானதுதான்! முரண்பாடு எப்படி வரும்? ஒன்றாகவா எச்சிலிலை வழிக்குதுகள் இந்த இரு சொறிநாய்களும், முரண்பாடு வர!

பெயரளவில் இந்தக் கும்பலில் இரண்டு பிரிவு! ஆனால் தன்னிச்சையாக பலதுகளாம்!! யாரை யார் எங்கே போடப்போகிறான் என்று தெரியாத நிலையாம்!

உதுகளை அழிக்க புலி மினக்கெடத்தேவையில்லை!! அதுகள் வெகுவிரைவில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறதை செய்து முடிக்குங்கள்!! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் - கருணா முறுகல்

[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 02:27.58 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவுகள் தோன்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குப் பதிலாக கட்சியின் உப தலைவராக ஜெயம் என்பவர் நேற்று இரவு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலின் உச்சகட்டமே இதுவென அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பேச்சாளராகவும் பிள்ளையானின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டு வரும் அசாத் மௌலானாவின் இடத்திற்கும் வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவாளி என அண்மையில் கருணா குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். இவர் தமது கட்சியில் நடப்பதை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியப்படுத்துவதற்காகவே பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கருணா குற்றம் சுமத்தியிருந்தார்.

கருணா பிரித்தானியா சென்று மீண்டும் திரும்பி வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பிள்ளையானும் அவரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை. இது அவர்களுக்கு இடையிலான முறுகல் தன்மையை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b...cg2h32ccevj0q3e

இது ஒட்டுக்கும்பலின் அடிவருடிகளின் இணையதளத்திலிருந்து ....

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ரகுவுக்கும் (நந்தகோபன் கோகுலன்) விடுதலைப் புலிகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக கருணாஅம்மான் குற்றஞ் சாட்டியுள்ளார் எனவும் விடுதலைப்புலிகளுக்கு தேவையான வகையில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளை இயக்க முற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் எனவும் இந்த நிலைமையின் காரணமாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாஅம்மானிற்கும் பிரதித்தலைவர் பிள்ளையானுக்குமிடையில் முறுகல்நிலை வெடித்துள்ளதென சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி ரகு எனும் நந்தகோபன் கோகுலன் அவுஸ்திரேலிய நாட்டில் இருந்த காலத்தில் புலிகளின் மோகன்குமார் என்பவருடன் இணைந்து செயற்பட்டவரெனவும் அவுஸ்திரேலிய நாட்டில் புலிகளின் வானெலியில் இறுதிவரை (நாடு திரும்பும் வரை) செயற்பட்டவரெனவும் தெரிய வருகிறது.

அப்ப .... நந்தகோபனுக்கு சங்கு ஊதப்படப்போகிறதென்று சொல்லுங்கோவன்! ராமா...கிருட்டினா.. நத்தகோபா கோவிந்தா...கோகோவிந்ததாஆஆஆ....... :lol:

http://www.nerudal.com/content/view/4816/70/

மாறி மாறி போடப்போறங்கள் போலதான் கிடக்கு... இதில சிரிப்பு என்னவெண்டா சிட்னில சிற்ரி ரெயில்ல வேலை செய்தாராம்... நம்மட பொடியார்...

  • கருத்துக்கள உறவுகள்

மாறி மாறி போடப்போறங்கள் போலதான் கிடக்கு... இதில சிரிப்பு என்னவெண்டா சிட்னில சிற்ரி ரெயில்ல வேலை செய்தாராம்... நம்மட பொடியார்...

உங்க கண்ணில படலையே?????????

உங்க கண்ணில படலையே?????????

நான் சிட்னில இல்லை... :unsure::o:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.