Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம்

Featured Replies

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம்

[புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுச்சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன.

கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

இக்குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நான்கு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 16 வீடுகள் சேதமாகியுள்ளன.

இதில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.

இவர்களின் உடலங்கள் சிதைந்துள்ளதால் அவை உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் விவரம்:

இராமையா விஜயதர்சினி (வயது 16)

பரந்தாமன் கௌரி (வயது 03)

செல்லையா யோகராணி (வயது 68)

செபமாலை இந்திராணி (வயது 28)

அருட்சோதி ஆரோக்கியம் (வயது 49)

காந்தரூபன் சிவாஜினி (வயது 28)

தர்மன் கோகுலவாசன் (வயது 04)

கந்தசாமி சத்தியஞானதேவி (வயது 57)

வர்ணகுலசிங்கம் இராஜேந்திரம் (வயது 45)

செல்லையா சுப்பிரமணியம் (வயது 53)

செல்வநாயகம் பெருமாள் (வயது 65)

விக்கினேஸ்வரன் கமலாதேவி (வயது 26)

வேலு லட்சுமிப்பிள்ளை (வயது 68)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலின் சிதறல்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததில் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

புதினம்

சிங்கள கொலைகாரர்கள் திருந்தவே மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கொலைகாரர்கள் திருந்தவே மாட்டார்கள்

அவங்க திருந்தமாட்டங்கள் என்று தானே சண்டை பிடிக்கிறினம். சண்ட பிடிக்கிற ஆக்கள் எல்லோ.. விமானங்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்க வழி பண்ண வேணும். அல்லது விமானங்களைச் சுட்டு வீழ்த்த வழி செய்யனும்.

இப்படியே.. பலி.. காயம்.. என்று எழுதிக் கொண்டிருக்கிறதால.. என்ன பயன்.. இதைத்தானே இப்ப 30 வருசமா எழுதிட்டு இருக்கினம்..! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்க திருந்தமாட்டங்கள் என்று தானே சண்டை பிடிக்கிறினம். சண்ட பிடிக்கிற ஆக்கள் எல்லோ.. விமானங்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்க வழி பண்ண வேணும். அல்லது விமானங்களைச் சுட்டு வீழ்த்த வழி செய்யனும்.

இப்படியே.. பலி.. காயம்.. என்று எழுதிக் கொண்டிருக்கிறதால.. என்ன பயன்.. இதைத்தானே இப்ப 30 வருசமா எழுதிட்டு இருக்கினம்..! :o

எப்படி செய்யலாம் எண்டும் ஐடியா குடுங்கோவன்...

  • கருத்துக்கள உறவுகள்

:o விமானத் தாக்குதல்களை முறியடிக்க முடியுமானால் புலிகள் எப்பவோ அதைச் செய்திருப்பார்கள்.

வெறும் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மிகையொலி விமானங்களைச் சுட்டு வீழ்த்த முடியாது. அதை விடவும் விமானப்படை ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து விமானங்களைப் பாதுகாக்க பொறிமுறைகளையும் விமானத்தில் இணைத்திருக்கிறது. ஆகவே அவற்றைச் சுட்டு வீழ்த்துவதென்பது கடிணம்தான்.

ஆயுதக் கப்பல்களை தருவிப்பதில் உள்ள சிக்கல், நிதி சேகரிப்பில் உள்ள கெடுபிடிகள் என்று புலிகளுக்கு தரமான விமான எதிர்ப்பு ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதனால்த்தான் புலிகள் விமானப்படையை பறப்பில் இல்லாத நேரத்தில் தாக்கியழிக்கிறார்கள். கட்டுநாயக்கா, அநுராதபுரம் போன்ற ராணுவ நடவடிக்கைகள் இதற்கு உதாரணம்.

பறப்பில் உள்ள விமானத்தை தாக்குவதில் புலிகளுக்கு உள்ள சிக்கல்களே விமானப்படையின் எதிர்ப்பின்றிய தமிழ்ப் பகுதிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான விமானக்குண்டு வீச்சுக்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

ரகுநாதனின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.அதோடு புலிகள் விமான இலக்கை அடையாளம் தெரியாமல் செய்வதற்கு தான் மரம் வெட்டுவதற்கு கூட அனுமதிப்பதில்லை.ஒரு கிளையை வெட்ட வேண்டுமானாலும் அனுமதி பெற்றிருக்க வேண்டும் இது கூட ஒரு வகை பாதுகாப்புத்தான் இல்லாவிட்டால் 2 இப்போது 20 ஆகியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.