Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற சிங்கள இனவெறி அறவே அகற்றப்படும்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும். என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கும் என தங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

அந்த சமயத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். அக்டோபர் 6-ம் தேதி மாலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரச் சொல்லி எச்சரிக்கச் செய்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 14-ம் தேதி மாலை தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன், இலங்கை நிலவரம் பற்றி கவலை தெரிவித்தார்.

16-ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையிலும், இலங்கை அரசின் செயல்பாடு பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் அனுப்பிய தீர்மானங்களை நன்றாகப் பரிசீலித்து அதனை ஏற்கும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் கூடுகிறது.

கடந்த 18-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர், அப்பாவித் தமிழர் தாக்கப்படுவது பற்றி கவலை தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள்கள் தடையின்றி வழங்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமிழரின் உரிமையும் நலன்களும் பாதிக்கப்படக் கூடாதென்றும் பிரதமர் தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

மேலும், இலங்கையில் உள்ள நிலையை அறிய பிரணாப் முகர்ஜியை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

கடந்த 16-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அனுப்பிய 750 டன் உணவுப் பொருள்கள் இலங்கையின் வடக்குப் பகுதியில் விநியோகிக்க மறுக்கப்பட்ட நிலையில், பிரதமர் பேசியதன் விளைவாக, அதே நாளில் 2.30 லட்சம் பேருக்கு அவை விநியோகம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை உடனடியாக இலங்கைக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பிரணாப் முகர்ஜி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் நல்வாழ்க்கையும் பாதிக்கப்படக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு மத்திய அரசின் செயல்கள், நமது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகிற வகையிலும் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

ஆனாலும் இதுவே நமக்கு முழு மன நிறைவைத் தரக் கூடிய விளைவாகும் என எண்ண முடியவில்லை. தரப்படும் உறுதிமொழிகள் தவறாமல் நிறைவேற்றப்படவும், இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும். இப்போது படிப்படியாக நிறைவேறி வரும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு, முழுமையாக நிறைவேறிடவும் இலங்கைத் தமிழருக்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் நிறைந்திடவும் அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

அதற்கான உந்து சக்திகளில் ஒன்றுதான் மனிதச் சங்கிலி முயற்சி. அதிலே இணைந்திட்ட நாம், இலங்கைத் தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம் என கருணாநிதி கூறியுள்ளார்.

www.tamilwin.com

உண்மை சாதனையாளராக கலைஞர் தன்னை மாற்றுவது, அவரின் இறப்பை கூட சாத்தியம் இல்லாது செய்து அவரை எப்போதும் வாழவைக்கும்....!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞரே,,

நாம் சொல்ல முடியாத அளவு ஏமாந்துவிட்டோம் வலிகள் சுமந்துவிட்டோம். 'ஒரு நம்பிக்கைக் கீற்று உங்களால் தெரிகின்றது அதை நிறைவேற்றி முழுமையான ஒளியேற்றிவிடுங்கள் . வரலாறு உங்களை வாழ்த்தி நிற்கும்.

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவீர்கள்.

கலைஞரின் உறுதியான நிலை எவ்வளவு பலனளிக்கபோகிறது என்பது அச்சத்துக்குரிய கேள்வி??....

1) இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்கான ஆயுத உதவி தொடருமென்ற அறிவிப்பு!

2) தமிழகத்தில் எமக்கு ஆதராவான போராட்டங்கலை திசை திருப்புவதற்காக நடைபெறும் செயல்கள்.(தமிழக பிரிவினை வாத கோஷங்கள், புலிகளுக்கு எதிரான காங்கரஸின் போராட்டங்கள், ராஜீவின் சிலை உடைப்பு, ...)

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் உறுதியான நிலை எவ்வளவு பலனளிக்கபோகிறது என்பது அச்சத்துக்குரிய கேள்வி??....

1) இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்கான ஆயுத உதவி தொடருமென்ற அறிவிப்பு!

2) தமிழகத்தில் எமக்கு ஆதராவான போராட்டங்கலை திசை திருப்புவதற்காக நடைபெறும் செயல்கள்.(தமிழக பிரிவினை வாத கோஷங்கள், புலிகளுக்கு எதிரான காங்கரஸின் போராட்டங்கள், ராஜீவின் சிலை உடைப்பு, ...)

கலைஞர் அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினார்

காலக்கெடு கொடுத்தார்

மனிதச்சங்கிலியும் செய்துவிட்டார்

இப்போ மத்தியஅரசு பதில் சொல்லியுள்ளது

அதாவது இது எதைக்கண்டும் தான் மாறமுடியாது

மாறவும் கூடாது என்று

இப்போ பந்து கலைஞர் பக்கம் உள்ளது

கலைஞரின் பதில் என்ன???

பதவியையும் கூட்டையும் இழக்கப்போகிறாரா????

அல்லது ஈழத்தமிழனை இரையாக்கப்போகிறாரா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சியை கலைப்பதற்கு முண்னர், தமிழருக்கு ஆதரவு தரும் கட்சியே இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற கருத்து நிலையை உருவாக்க வேண்டும், அதற்கான தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், அதற்க்கு இந்த ஆறு மாதங்கள் போதுமானவை, அடுத்த தடவை 40க்கும் அதிகமான இடங்களை பெறவேண்டும் 5 வருட ஆசையில் ஆட்சிக்கு வரும் காங்கிரசுக்கு அப்போது வைக்க வேண்டும் ஆப்பு. இப்போது தமிழ் நாட்டில் நீறு பூத்து இருந்த இன உணர்வு, நீறு ஊதப்பட்டு கங்குகள் தெரிகின்றன அவை பெரும் தீயாக பற்றி எரிய வேண்டும், அதன் பிறகு எவராலும் அதை அணைக்க முடியாது, அதை அணைக்க இன்னொரு ரஜீவ் காந்தி வர வேண்டும், அதற்க்கான தேள்வையும் இனி இல்லை.

ஆட்சியை கலைப்பதற்கு முண்னர், தமிழருக்கு ஆதரவு தரும் கட்சியே இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற கருத்து நிலையை உருவாக்க வேண்டும், அதற்கான தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், அதற்க்கு இந்த ஆறு மாதங்கள் போதுமானவை, அடுத்த தடவை 40க்கும் அதிகமான இடங்களை பெறவேண்டும் 5 வருட ஆசையில் ஆட்சிக்கு வரும் காங்கிரசுக்கு அப்போது வைக்க வேண்டும் ஆப்பு. இப்போது தமிழ் நாட்டில் நீறு பூத்து இருந்த இன உணர்வு, நீறு ஊதப்பட்டு கங்குகள் தெரிகின்றன அவை பெரும் தீயாக பற்றி எரிய வேண்டும், அதன் பிறகு எவராலும் அதை அணைக்க முடியாது, அதை அணைக்க இன்னொரு ரஜீவ் காந்தி வர வேண்டும், அதற்க்கான தேள்வையும் இனி இல்லை.

தமிழகத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு 40 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள்.தற்போதைய நிலையில் தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 15 காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அடுத்த தேர்தலில் எல்லோரும் தமிழின உணர்வாளர்கள் தேர்வு செய்யப்படின் பெரும் பலனை எதிர்பர்க்கலாம்.இல்லாவிட்டா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.