Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வன்னிக்கு உணவுப் பொருள்களை அனுப்பத் தேவையில்லை: சம்பந்தன்

Featured Replies

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாதவிடத்து, இந்தியா வன்னிக்கு உணவுப் பொருள்களை அனுப்பத் தேவையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

800 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை மோதல்கள் இடம்பெறும் பகுதிக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைக்கு இது போதுமானது அல்ல. தமிழ் மக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்பதை இந்தியா நம்பவில்லையென்பதை இந்த நடவடிக்கை காட்டியுள்ளது” என பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் சம்பந்தன் தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெறும் மோதல்களுக்கு எதிராக தமிழ் நாட்டில் எதிர்ப்பலைகள் தோன்றியிருக்கும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு இந்தியா சென்றுள்ளது.

இந்தக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி உள்ளிட்ட பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

பசிலை படத்திலை பார்த்தாலே ஏதோ வேற்றுக்கிரகவாசியை பார்த்தமாதிரி இருக்கும். அந்தாள் வேற நேரிலை போனால் அவங்கள் என்னப்பா செய்யிறது பயத்திலையே ஓம் என்றிருப்பாங்கள்.

பரணி உங்களுடைய கருத்தை வாசித்ததிலிருந்து நினைத்து நினைத்து சிரித்தேன்.இன்னும் முடியவில்லை

சம்பந்தர் சொன்னதுதான் சரி.... சனம் உயிருக்கும், உரிமைக்குமே போராடுதுகள்.. ஆனால் அதுகளுக்கு வெறும் உணவு கொடுத்து அடக்குவது அவர்களின் உரிமைப்போராட்டத்தை மலினப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் சொன்னது தான் சரி இவளவு நாள் இடிமைத்தனத'துக்கும் இது போதுமானதா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சொல்லலாம் வேண்டாம் என்று ஆனால் அங்குள்ள மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு படும் பாடு அவர்களுக்குதான் தெரியும் அதனால் தரும் உணவை புலிகள் ஏற்றுக்கொண்டு வன்னி மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும்

வருபவர்களை புலிகளின் பகுதிக்கு செல்லாமல் தடுப்பது ஒரு பாதுகாப்பை தரும்[புலநாய்வு கூட்டம் வரலாம் வன்னியின் நிலையை அறிந்து கொள்ள]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அநியாயம்!

சாப்பாடு கொடுத்தால் வேண்டாம் எண்டு சொல்றாங்களே. சம்மந்தரை வன்னியில் போய் இருந்து கொண்டு இதைச் சொல்லச்சொல்லி ஆராவது சொல்லூங்கோவன்.

என்ன அநியாயம்!

சாப்பாடு கொடுத்தால் வேண்டாம் எண்டு சொல்றாங்களே. சம்மந்தரை வன்னியில் போய் இருந்து கொண்டு இதைச் சொல்லச்சொல்லி ஆராவது சொல்லூங்கோவன்.

சாப்பட்டுக்குத் தானே வன்னியில போராடுகினம்.

என்ன அநியாயம்!

சாப்பாடு கொடுத்தால் வேண்டாம் எண்டு சொல்றாங்களே. சம்மந்தரை வன்னியில் போய் இருந்து கொண்டு இதைச் சொல்லச்சொல்லி ஆராவது சொல்லூங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுதினது நாரதருக்கு தெரிஞ்சிருக்கு. வேற ஆரும் தெரியேல எண்டு சொன்னவையோ. திரும்பவும் எடுத்துக் காட்டியிருக்கிறார் சசி

வாசகி சம்பந்தருக்கு ஓரு கடிதம் சங்கரியார் இப்ப எழுதியிருப்பார். 1872 வது கடிதமா இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகி சம்பந்தருக்கு ஓரு கடிதம் சங்கரியார் இப்ப எழுதியிருப்பார். 1872 வது கடிதமா இருக்கும்

சங்கரியார் இப்பிடி எழுதமாட்டார்.

சம்பந்தன் சொல்ல முனைவது.. தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் எறிகணை , விமான தாக்குதள் நிறுதிதினாலே போதும்...அவர்கள் சொந்த இடத்திலே உணவு தேடிக்கொள்வார்கள்....

ஆனால் இந்தியா சொல்கிறது..ஆயுதம் கொடுப்பதை நிறுத்த முடியாதென்று....எனவே. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டினா..

யாருக்கு என்ன பயன்..????

800 தொன் உணவை வைத்து ஆட்டபோகிறார்கள் தமிழனை....?? இது

ஈழமக்களுக்காக கொடுக்கப்படவில்லை.. தமிழ் MP களின் ராஜிநாமாவை ரத்து செய்வதற்க்கு கொடுக்கப்படும் லஞ்சம்.. அவ்வளவே.....!

ஈழமக்களின் உயிரை அடகு வைத்து அரசியலில் இறங்கியிருக்கும் இரு நாடு ...அடகு மீட்கப்போவது யாரு?????????

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சொல்வது சரியே. மீண்டும் ஒரு சோத்துப் பொட்டலக்கதையை நாம் விரும்பவில்லை. ஆயுதம் கொடுத்து தமிழ்மக்களைக் கொல்வதை நிறுத்துவதை விட்டு விட்டு, சாப்பாடு தருகின்றோம் என்று திருப்பி தமிழக மக்களையும், எம்மையும் ஏமாற்ற முனைகின்றார்கள்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் சொன்னதில் நியாயம் இருக்கிறது. உணவு தேவை என்பது தற்காலிகமானது அதற்காக நாம் போராடவில்லை அத்தோடு தமிழ் மக்கள் எல்லோரும் இலங்கையின் மக்கள் என்று சிங்கள அரசு கூறிக்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தான் உணவினை வழங்கவேண்டும் இந்த அவலத்தை தந்தவர்களும் அவர்கள் தானே.எமக்கு தற்காலிகமான தீர்வு தேவையில்லை நிரந்தரமான தீர்வை தந்தாலே எமது தேசம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கும்.தற்போது தமிழகம் போராட்டம் நடத்தியதின் முக்கிய நோக்கமும் மக்களை கொல்லாதே அவர்களுக்கு நிரந்தரமான தீர்வை தா என்று தான் ஆகவே இவர்கள் உணவை தருகிறோம் என்று சொல்லி தமிழகத்தின் கொந்தளிப்பை அடக்க பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

800 டன் உணவு 2 லட்சம் மக்களுக்கு 4 நாலுக்கு போதூமானதாக எங்கோ படித்தேன்

இவர்கள் என்ன தமிழர் உண்ண வழியில்லாத பரதேசிக் கூட்டம் என்றா நினைத்து விட்டார்களா?. உணவு அனுப்பமுன் ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்தட்டும். உண்மையான பிரச்சனையை திசைதிருப்பப் பார்க்கிறார்களா? யாரை ஏமாற்ற இந்த செயல். என்றும் வன்னிச் சனம் பட்டினியில் கிடந்ததில்லை. அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் நிம்மதியாக இருக்கவிட்டால் போதும். உழைப்பாளிகள் அவர்கள் பாட்டைப் தாமே பார்த்துக் கொள்வார்கள். தமது வல்லரசு பேராசையில் பயங்கரவாத கொலைகார அரசுக்கு ஆயுதம் கொடுத்து தமிழரை கொல்வதை முதலில் நிறுத்தட்டும். சம்பந்தர் சொல்வதில் என்ன பிழையிருக்கிறது?

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசே! எங்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறையை நிறுத்து. நாங்கள் எங்களைப் பார்த்துக்கொள்கிறோம். உன்னுடைய நிவாரண உதவிகள் வேண்டாம் எண்டு எவரும் இதுவரை குரல் எழுப்பவில்லையே!

ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்து உரக்க குரலெழுப்புங்கள்.இந்தியர் மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை மாந்த நேயர்களும் எங்களுக்காக அணிதிரள்வார்கள்.

Edited by வாசகி

என்ன வாசகி 1947ம் ஆண்டுக்கு போய் விட்டீர்கள்.சண்டை நடப்பதே அந்த கோரிக்கையை வைத்து தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வாசகி 1947ம் ஆண்டுக்கு போய் விட்டீர்கள்.சண்டை நடப்பதே அந்த கோரிக்கையை வைத்து தானே?

நீங்கள் என்ன சொல்லுறியள்.

Edited by வாசகி

1947- கொஞ்சம் சண்டை இல்லாமல் இருந்த காலம்

இலங்கை அரசே! எங்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறையை நிறுத்து. நாங்கள் எங்களைப் பார்த்துக்கொள்கிறோம். உன்னுடைய நிவாரண உதவிகள் வேண்டாம் எண்டு எவரும் இதுவரை குரல் எழுப்பவில்லையே!

இதை கேட்டுத்தானே 30 வருடமாக சண்டையே நடக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1947- கொஞ்சம் சண்டை இல்லாமல் இருந்த காலம்

இலங்கை அரசே! எங்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறையை நிறுத்து. நாங்கள் எங்களைப் பார்த்துக்கொள்கிறோம். உன்னுடைய நிவாரண உதவிகள் வேண்டாம் எண்டு எவரும் இதுவரை குரல் எழுப்பவில்லையே!

இதை கேட்டுத்தானே 30 வருடமாக சண்டையே நடக்கின்றது

1947 இலிருந்து உன்ரை நிவாரணம் வேண்டாம் எண்டு எத்தனை தரம் திருப்பி அனுபினனாங்கள்.

1947 பிரத்தானியாவுடன் தானே இருந்தோம்.பிரித்தானியாவின் உணவை எதற்கு திருப்பி அனுப்பவேண்டும்.அவர்களுக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியா இலங்கையை விட்டுப் போனபிறகு திருப்பி அனுப்பினனாங்களே. அல்லது அண்டு முதல் இண்டைக்கு வரைக்கும் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழதான் இருக்கிறமோ.

ஓ... இப்பத்தான் எனக்கு விளங்குது. குரல் மட்டும் எழுப்புவினம் சம்மந்தர் போன்ற தமிழர்கள் எண்டு நீங்கள் சொல்லுறியள்.

Edited by வாசகி

ஏன் திருப்பி அனுப்பவேண்டும் என்று சொல்கின்றீர்கள்.நான் தான் சொன்னனே தொழிலுக்கு ஊதியம்.குரல் கொடுப்பவர்களை கூட கொடுக்கவேண்டாம் என்று சொல்கிறீர்கள்?

இலங்கை அரசே! எங்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறையை நிறுத்து. நாங்கள் எங்களைப் பார்த்துக்கொள்கிறோம். உன்னுடைய நிவாரண உதவிகள் வேண்டாம் எண்டு எவரும் இதுவரை குரல் எழுப்பவில்லையே!

இதை வேண்டி நின்று தான் எங்களை தனியாக போகவிடு என்று சொல்;கின்றோம்.நீங்கள் கேட்டதற்கு பதிலும் கூட.

திசைமாறி செல்வது பொல் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.