Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதி இலங்கையுடன் இனங்கியது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1_8.jpg

11.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் இருக்குது இழுபறி. கொஞ்சம் பொறுங்க தெரியும்.

பசிலை பாருங்கோ

இந்தியா முடியுமானால் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து போரை நிறுத்தி தமிழ்மக்களின் தேவைகள் உணவு,மருத்துவ தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்ற தமிழ்னாட்டு அரசியல்,மக்கள் போரட்டங்களை காட்டி அல்லது இந்தியா ஒரு பிராந்திய அரசு என்னும் நிலையை வைத்து இனவாத அரசினை ஒரு வழிக்கு கொண்டுவருவதை விட்டு சும்மா பாச்சா காட்டி உலகத்தமிழ்மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை இந்தியாவும் இலங்கையும் கூட்டு சதியாக மேற்கொள்கிறார்கள்...

இலங்கையரசும் இந்தியாவில் குறிப்பிட்ட அரசியல்வாதிகள்,பத்திரிகையாள

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பெரியண்ணன் முதலிலேயே சொல்லிட்டாரே...

அவரை மிஞ்சி எவரும் வாய் திறக்க முடியுமோ.. அவர்தானே உலகத்துக்கே சட்டாம்பி..!

பெரியண்ணன் சொன்னதின் சாரம்..

புலிகள் பலவீனமாகி.. நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. எனவே இதுவே சரியான தருணம்.. சிங்களக் கட்சிகளே ஒற்றுமையாகி.. ஒரு தீர்வை திணித்துவிடுங்கள். அதுதான் புலிகளை ஒரேயடியா நசுக்க உதவும்... அப்பதான் எனக்கு ஜனநாயம் போதிக்க வசதியா இருக்கும். அதற்காக கிழக்கின் விடிவெள்ளியையும் வடக்கின் ஜனநாயகவாதிகளான என் அன்புக் குழந்தைகளையும் பாவித்துக் கொள்ளுங்கள். எம் சொல்லுக் கேட்காத புலிகளை நாங்கள் தேமோபரிக் குண்டுகளோடு கவனித்துக் கொள்கிறோம் என்றிட்டார்.

(புலிகள் பலமாக இருந்தால் சொல்வார்கள்.. புலிகளை பலவீனமாக்காமல் பேச முடியாது என்று. பலவீனமானால் சொல்வார்கள்.. புலிகள் சோர்ந்துவிட்டார்கள்.. ஒரே அடியா அழிக்க.. எதையாவது.. திணியுங்கோ என்று. ஆக.. அடிப்படையில்.. புலி பலமாக இருக்கிறதுதான் இவர்களுக்குப் பிரச்சனையே தவிர.. தமிழனுக்கு தீர்வல்ல அவர்களின் நோக்கம்..! புலி பலமிழந்தால்.. தமிழன்.. ஏதோ காட்டுமிராண்டிக் கூட்டம். கொடுக்கிறதை வைச்சிட்டு.. வாழ வேண்டியதுதான் என்பதுதான் இவர்களின் சித்தாந்தம்..! )

இதை மிஞ்சி.. சோனியா அம்மா போவாவோ..

உடன அவவும் பதிலுக்கு..

800 தொன் அரிசி..

வைத்திய சேவை... (பிச்சை கேட்டதால்.. போட்டது)

அத்தோடு.. 800 தொன் அரிசியும் வைத்திய சேவையும் போகாதிருக்க.. போற வழியெல்லாம் குண்டு போட போதிய அளவு ஆயுதங்கள்.

1987 இல் வடக்குக்கிழக்கு இணைந்திருக்க கேட்ட 13வது சரத்து அமுலாக்கம்.. 2008இல் வடக்குக் கிழக்கை பிரித்து.. மாகாண சபைக்கே அதிகாரம் காணாது என்று சிங்களவனே கத்த.. அதுக்கு அதிகாரம் கொடுத்தல்.

அதாவது புலிகளை அடக்கிட்டால்.. தமிழன் தலையில எதையும் திணிக்கலாம். அதைச் செய்யுங்கோ என்பதற்குத்தான்.. இவ்வளவு ஆர்ப்பாட்டமும்.. பதவி விலகல் நாடகமும்.

தமிழீழத்தை அங்கீகரிக்க போகினம் என்று.. நம்பி... நாங்களும் ஆர்பரித்து.. நன்றி சொல்லி.. கூச்சல் போட்டு... எல்லாம் மத்திய அரசு.. சொல்ல ஆடிய பொம்மைகள் தான் அதிகம்..!

இறுதியில் ஏமாந்தது.. ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழன். இழந்ததும் அவனே..! கிடைத்த ஒன்று.. தமிழகத்திற்கு சில உண்மைகள் போய்ச் சேர்ந்தமை. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதம் என்றால் என்ன இந்திய அரசே? ஒரு இனத்தை திட்டமிட்டு அழிப்பது பயங்கரவாதம் இல்லையா? தமிழ் மக்களை கடத்துவது,கற்பழிப்பது, கொள்ளையிடுவது,கொலைசெய்வது பயங்கரவாதம் இல்லையா? உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துவது பயங்கரவாதம் இல்லையா? என்ன எதற்கெடுத்தாலும் பயங்கரவதத்தை அடக்கிறம் புடுங்குறம் என்று கத்துறிங்கள் நீங்கள் செய்ததும் செய்கிறதும் பயங்கரவாதம் தன் அது உங்கள் கண்ணுக்கு தெரியாதே....... ஏதோ நீங்கள் மட்டும் தன் நாடு என்றும் மற்றைய நாடுகள் எல்லாம் இளிச்சவாய்கள் என்றும் தான் உங்கள் கதை.உண்மையான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாதங்களை அழியுங்கள் ஆனால் மக்கள் போராட்டங்களை பயங்கரவாதம் என்ற போர்வையை போர்த்தி அழிக்கபார்க்காதீர்கள் அது ஒருபோதும் நடக்காது.புலிகளை அழித்துவிட்டால் தனிநாடு கோரிக்கை அடங்கிவிடுமா ? இல்லை இந்த தமிழ் மக்களின் மனதிலே அது நீறு பூத்த நெருப்பு போல் இருக்கும் அது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை அளிக்கவும் தயங்காது.இதுவரைக்கும் இருபத்தோராயிரம் மாவீரர்களை எமது மண்ணுக்காக இழந்திருக்கிறோமே எமது கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு உங்கள் பின்னால் திரிவதற்கா? ஒன்றைமட்டும் எல்லோரும் நினைவில் வைத்துகொள்ளுங்கள் புலிகளை அழிப்பதால் எமது தாகத்தையோ அல்லது விடுதலை வேட்கையையோ அழித்துவிட முடியாது எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் அதுவே உள்ளது அந்த வேட்கையை அழிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் எல்லோரையும் உங்களால் அழிக்க முடிந்தால் அழியுங்கள்?

ஒரு உயிரினம் இந்த உலகத்திலே அழிந்து வருகிறது என்றால் அதை காப்பாற்றுவதற்கு அதை யாரும் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது அப்படி ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனையும் வழங்குகிறீர்கள் அவற்றுக்கு என்று பாதுகாக்கபட்ட பகுதிகளையும் ஒதுக்குகிறீர்கள் நாங்களும் என்ன அதைத்தான் கேட்கிறோம். எங்கள் தமிழினம் பழமையானது நீண்ட வரலாறுகளை கொண்டது எங்களை சிங்கள இனவாத அரசு அழிக்கிறது எங்களை பாதுகாருங்கள் எங்களுக்கு என்று சுதந்திரமாக நடமாடுவதற்கு ஓர் இடத்தை ஒதுக்குங்கள் இதை தானே கேட்கிறோம், உலக நாடுகளே இது உங்கள் காசுகளில் விழவில்லையா?

நீங்கள் அடக்க நினைத்த தமிழன் அழிந்து போய் நீண்ட காலம் ஆகிவிட்டது இது வீறுகொண்டு எழுந்த புரட்சி தமிழன் இவனை அடக்க எவனாலும் முடியாது.எமது தன்னிகரில்லா தலைவன் பிரபாகரனுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் இந்த தமிழனை அடக்க நினைத்தால் அழிவுகள் நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அழுதழுது பிள்ளை அவள்தான் பெற வேண்டும் எந்த எட்டப்பனையும் நம்பி நாம் இருக்க கூடாது நமது கையில் பலமிருந்தால் நாளைக்கு நம்மை நாடி வருவார்கள்.............

Edited by muneevar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.