Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியைக் கைப்பற்றும் அரசின் முயற்சி இனி மூர்க்காகும்.

Featured Replies

ஈழத்தமிழர் தாயகத்தைக் கைப்பற்றும் இலங்கை அரசின் எத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த உணர்வெழுச்சியை, புதுடில்லி அரசுடன் மேற்ககொண்ட தொடர்பாடல்கள் மூலம் சமாளித்து விட்டதில் திருப்பதி கொண்டுள்ள கொழும்புத் தலைமை, இனி கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தனது படை நடடிவக்கைகளைத் தங்கு தடையில்;லாத கருத்தோடு மூர்க்கமாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஷில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுகளை அடுத்து, செய்தியாளர்களுக்குத் தகவல் வெளியிட்ட போதே, கிளிநொச்சி மிதான அரசுப்படைகளின் தாக்குதல் முயற்சி தீவிரமாகும் என்பதை அங்கு வைத்தே கோடி காட்டி விட்டார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது மக்கள் பாதிக்கப்படுவதை இயன்றளவுக்குக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தும் என்றும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் யுத்தம் முன்னேடுக்கப்படும் என்றும் புதுடில்லியில் கருத்து வெளியிட்ட பஷில், கிளிநொச்சியில் இப்போது மக்கள் குடியிருக்கவேயில்லை என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

'கிளிநொச்சியில் பொதுமக்கள் எவருமில்ல. அவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள், ஆழமாக உள்ளே சென்றுவிட்டானர். எங்களது சூட்டு இலக்குகளிலிருந்து அவர்கள் தள்ளிப் போய் விட்டார்கள்

'கிளிநொச்சி மருத்துவமனையைத் தவிர அங்கு வேறு அரச அலுவலகம் ஏதும் இயங்கவில்ல. மருத்துவமனை கூட அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.

'கிளிநொச்சியிலிருந்து அனைத்து மக்களும் இடம் பெயர்ந்து விட்டனர். கிளிநொச்சியில் இனி யாரும் மிச்சமிருந்தால் அவர்கள் விடுதலைப் புலிகள் தாம்.' என்றும் கூறியிருக்கிறார்.

கிளிநொச்சி மீதான படை நடவடிக்கையில இனி யாராவது கிளிநொச்சியில்; பாதிக்கப்பட்டால் காயமடைந்தால் அல்லது கொல்லப்பட்டால் அவர்கள் நிச்சயமாக விடுதலைப் புலிகளே தவிர வேறு யாருமல்லர் என்பதை முற்கூட்டியே இந்தியாவில் வைத்தே தெரிவித்து விட்டு இங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். மஹிந்தனின் விஷேட பிரதிநிதி பஷில்.

இது, கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான அரச படைகளின் நடவடிக்கையை இனித் தீவிரமாக்குவதற்கான முற்கூட்டிய சூழல் தயார் படுத்தல் நடடிக்கை என் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.'

தமிழர் தாயகத்தில் இலங்கை அரசுப் படைகளின் யுத்தம் தொடர்ந்தால் தாங்கள் தங்களது எம்.பி. பதவிகளை இராஜிநாமாச் செய்வார்கள் என்ற தமிழக எம்.பிக்களின் அச்சுறுத்தலை மத்திய அரசைக் கொண்டு வெற்றிகரமாக வாபஸ் பெறச் செய்ததன் பின்னணியில் இனி யுத்த நடவடிக்கைகளை முழு மூச்சாக தீவிரமாக எந்தவித வெளிநாட்டு அழுத்தமுமின்றி தொடரக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதான திருப்தி அரசுத் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நன்றி : சுடர் ஒளி

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா?

இரண்டரைக் கிலோமீற்றர். இதற்கெல்லாம் மூர்க்கமாய் சண்டையிடுவானேன்.

அப்ப இவ்வளவு காலமாய் மூர்க்கமாய் சண்டை போட இல்லையாமோ...???

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு காலமாய் மூர்க்கமாய் சண்டை போட இல்லையாமோ...???

இவ்வளவு காலமாய் மூர்க்கமாய் சண்டை போட இல்லை என்று புலிகளைச்சொல்லுறாரோ???

கிளிநொச்சி நகரை தரைமட்டம் ஆக்கிறதுக்கு இந்தியாவுக்கு முற்கூட்டியே விளக்கம் குடுபட்டிருக்கு.

பணிமனைகள் வங்கிகள் வைத்தியசாலை என்று நிர்வா அலகுகளின் அசையாச் சொத்துகள் தரைமட்டம்? :lol:

scorched earth அணுகுமுறை.

இதைவிட மூர்க்கத்தனமா எண்டா முக்கித்தான் போகவேணும்.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.