Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தனி ஈழம்தான் ஒரே தீர்வு!'' : ஆவேச மன்சூர்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''தனி ஈழம்தான் ஒரே தீர்வு!'' : ஆவேச மன்சூர்...

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட் டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் பேசப்போய் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் சட்ட நடவடிக் கைகளுக்கு உள்ளானார்கள். இதையடுத்து, நடிகர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் 'இந்திய இறையாண்மைக்கு பங்கம் வராமல்' பேசுமாறு சங்கத் தலைவர் சரத்குமார் நடிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

இருந்தும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், தன் பாணியில் மனசில் பட்டதை போட்டுடைத்து பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.

''அகிம்சைப் போராட்டத்தின் மூலம் மட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிப்பாய் கலகம் என்கிற ஆயுதப் புரட்சி, சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் என்று போராட்டம் வெடித்ததை நாம் மறந்துவிட முடியாது. ஆவேசமாக பேசக்கூடாது என்று சொல்கிறீர்கள். அப்ப ஏன் சினிமாவில் ஆவேச வசனங்கள் வைக்கிறீங்க? சண்டைக் காட்சி வைக்கிறீங்க? 'வில்லா.... வில்லா... ஹீரோயினை விட்டுடு'னு வில்லன்கிட்டப் போய் ஹீரோ கெஞ்சாமல் முப்பது நாப்பது பேரை தூக்கிப் போட்டு மிதிச்சு சண்டை போடுறாருல்ல..? அப்ப மட்டும் ஆவேசம் வேணும்... இங்கே தமிழன் கொல்லப்படற விஷயத்தை பேசறதுக்கு மட்டும்

ஆவேசப்படக்கூடாதா? என்னைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு தனி ஈழம்தான்!'' என்று உண்ணாவிரத மேடையில் பேசி நிமிர வைத்தார் மன்சூர் அலிகான்.

உண்ணாவிரதம் முடிந்த பிறகு மன்சூர் அலிகானை சந்தித்தோம். மறுபடியும் ஆவேசமானார்.

''இலங்கையில் என் உறவு அழிக்கப்படும் நிலையில்கூட 'பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், தமிழக அட்டைக் கத்தி ராஜாக்கள். என் சகோதரர்கள் செத்துக் கொண்டிருக் கும்போது அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன். தமிழர்களிடம் ஓட்டு வாங்கி பதவியில் உட்கார்ந்து இருக்கும் அரசியல்வாதிகள், அந்தத் தமிழன் தலையிலேயே மிளகாய் அரைக்கிறார்கள். சீக்கிரமே அவர்களுக்கு தமிழ்நாடு ஆப்பு அடிக்கும். இதுவரையில் 350-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக்கொன்றிருக்கிறது. இது இந்திய அரசுக்குத் தெரியாதா? தமிழனுக்கு எதிராக எவனும் எதையும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நான் அரசியல் களத்துல இறங்கப் போறேன். எனக்கு 149 இயக்கங் களோட ஆதரவு இருக்கு. தமிழனுக்கு எதிராக இனி எந்த அரசியல்வாதியும் சாதி அரசியலோ குடும்ப அரசியலோ செய்யமுடியாது.''

''நீங்க காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவது போல இருக்கிறதே?''

''காந்தி இறந்தபோது 'மகாத்மா இறந்து விட்டார்' என்ற அனுதாபத்தில் தோய்ந்திருந்த மக்கள் ஓட்டுப் போட்டார்கள். அப்புறம் இந்திரா காந்தி இறந்ததும் அனுதாப ஓட்டு போட்டார் கள். அடுத்து ராஜீவ் காந்தி இறந்தபோதும், கொலையைச் சொல்லி பரிதாபம் தேடி ஓட்டு வாங்கினாங்க. எத்தனை காலத்துக்கு இதையே சொல்லிக்கிட்டு இருப்பீங்க..? எதுக்காக ராஜீவ் காந்தியை கொன்னாங்க? இங்கே இருந்து நம்ம ராணுவம் அமைதிப்படைங்குற பேர்ல இலங்கைக்குப் போய் என்ன பண்ணுச்சு... பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான தமிழச்சிகளைக் கற்பழிச்சாங்க. அப்படிப்பட்ட ஈனத்தை நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் எடுத்தார்கள் புலிகள்.

ராஜீவ்காந்தி என்ன காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா சொந்தம்? எங்களுக்கும்தான் சொந்தம். ராஜீவ் காந்தி இறந்தபோது நானும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ராஜீவ் கொலையை தனி மனித குற்றமாக பார்க்க வேண்டுமே தவிர, அதற்காக ஒரு இயக்கத்துக்குத் தடை விதிக்கக் கூடாது. ராஜீவ் காந்தி மரணத்தைவைத்து தயாரிக்கப்பட்ட 'குற்றப்பத்திரிகை' படத்தில் நான் சிவராசனாக நடித்தேன். அந்தப் படத்தை வெளியிடவிடாமல், 15 ஆண்டுகளாக காங்கிரஸ் காரர்கள் தடுத்தார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவியாதவ் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போய் மீண்டார். அவர் டெல்லி சென்சார் போர்டு அலுவலகத்துக்குப் போய் சான்றிதழ் பெற முயன்றபோது, அதனைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தியவர் கள் காங்கிரஸார்தான். இங்கே அகதிகளாக இருக்கிற ஈழத் தமிழர்களை ஆட்டு மந்தை போல, கொட்டகையில் கொத்தடிமைகள் போல அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த வேதனை எல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லையா?''

'''தனி ஈழம்தான் தீர்வு... ஈழம் விரைவில் கிடைக்கும்!' என்று உண்ணாவிரதத்தில் பேசியிருக்கிறீர்களே. உங்கள் மீது சட்ட நடவடிக்கை ஏதும் வந்தால்...''

''தமிழ் ஈழம் தமிழர்களின் பூர்வீகம். நில உரிமை கேட்டு அங்கே போராடிக்கிட்டு இருக்காங்க. இந்தியா என்ன வெங்காயத்தை வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். சிவகங்கை சீமான் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிந்தேஇலங்கைக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார். தெரியாமல் எவ்வளவோ? இந்தியன் பணம், தமிழனைக் கொல்லவா? அங்கே தமிழர்களைத் துள்ளத் துடிக்கக் கொலை செய்கிறவனுக்கு இங்கே நாம் உதவ வேண்டுமா? அப்படி என்ன இலங்கையோடு ராஜ்ஜிய உறவு வேண்டியிருக்கு?''

''இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி...''

''நடுவண் அரசு நம்மவர்களால் அதாவது தமிழர்களால் அமையும்போதுதான் இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். நடுவண் அரசின் ராணுவம், உள்துறை, வெளியுறவுத் துறை என்று முக்கியத் துறைகளை எல்லாம் தமிழன் கைப்பற்ற வேண்டும். கூடிய சீக்கிரமே இந்தியாவின் பிரதமராக தமிழன் உட்காருவான். நம்மை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கிக் குவிக்கும் அரசியல்வாதிகள் சொத்து வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் கார்ப்பரேட் கம்பெனிகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்களால் இதற்கெல்லாம் மனப்பூர்வமாகத் தீர்வு காண முடியாது!''

''இப்போது இந்தியா, இலங்கை விஷயத்தில் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்கள்?''

''அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது அத்துமீறி குண்டுகள் போட்டதே..! ஈராக் மீது போர் தொடுத்ததே..! அப்போதெல்லாம் நம் நியாயங்கள் எங்கே போனது? அப்ப இறையாண்மை எல்லாம் எங்கே போச்சு? நமக்குக் கீழே இருக்கும் குட்டி நாட்டை 'நீ அடங்கு' என்று சொல்லி தட்டி வைக்க இந்தியாவுக்குத் தெம்பில்லையா? 'தமிழர்களுக்கு உரிய நிலத்தை, நாட்டைப் பிரித்துக்கொடு' என்று சொல்லி, இலங்கையை மிரட்ட வேண்டியதுதானே..?

உணர்வுகளைப் பேசினால் இறையாண்மை பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால், அடுத்த நாட்டின் இறை யாண்மை பத்தி கவலையேபடாத அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடுகிறார்கள். அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதுபோல இந்தியாவும் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில் தவறேயில்லை. இலங்கையைப் பிரிச்சுக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தலாம். அப்படி அமையப் போகும் ஈழத்தோடு இந்தியா 200 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். கச்சத் தீவு, மீனவர்கள் பிரச்னை இதெல்லாம் தீர ஒரேவழி தமிழ் ஈழம் மட்டுதான்!'' - முகம் சிவக்க பேசி முடித்தார் மன்சூர்அலிகான்.

vikatan.com

இது நிஜமாகவே ஈழதமிழர்களின் குரல்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில தான் இவர் நடிப்பார்............. நிசத்தில மற்றாக்கள் மாதிரி நடிக்கிறதில்ல...... உண்மையைப் பேசுற மனுசன்.... :)

நிஜத்தில் ஒரு ரவுடி மாதிரி சேட்டைகள் செய்து பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாகவும் பல காலம் வந்திருக்கின்றார். படத்தில் மட்டுமல்ல வில்லன் நிஜத்திலும்தான். அது அவரது தனிப்பட்டபிரச்சினை ஆனால் ஈழத்தமிழர்களிற்கான ஆதரவு உண்மை. அது வெறும் வாய் வாத்தை அல்ல உள்ளே இருந்து உணர்வோடு வந்தது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு தமிழன்

Edited by Paranee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கலைஞனே உங்கள் உணர்வு மதிக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர் அலிகான் நீண்ட காலமாக எமக்காக குரல் கொடுத்து வரும் உன்னத கலைஞன் .

நினைத்தே பார்க்க முடியவில்லை எமக்கா எத்தனை பேர் தமது உணர்வுகளை இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்தார்கள் நன்றிகள் மன்சுர் வணக்கம்.

படத்தில் தான் வில்லன்!

நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் நடிப்பிலும், நகைச்சுவையிலும் கலக்கலாக ஆரம்பித்து இறுதியில் துணிவான உணர்சிபூர்வமாக, ஆவேசமான பேச்சில் மன்சூர் அலிகான்தான் எனக்கு அத்தனை கதாநாயகர்களுக்கு மத்தியிலும் கதாநாயகநாயகனாகத் தெரிந்தார்!

பெரிய கதாநாயகர்கள் எல்லாம் மேடையில், அப்பாவி வேடத்திற்கு வரும் துணைநடிகர்கள் போல குந்திக் கொண்டு இருந்தனர்! அல்லது அளந்து அளந்து கதைத்தனர்.

காரணம், அதில் பலர் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் போல் எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் இருந்தது! அவர்கள் முதல் நாள் வகுப்பிற்கு போன மாணவனை போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் அவர்களுக்கு 30 மைல் தொலைவில் 30 வருடங்களாக நடை பெறும் யுத்தம் பற்றி அவர்கள் இப்போதாவது அறிந்து கொண்டது அவர்களுக்கு பெரிய ஆரம்பம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய கதாநாயகங்களுக்கு எல்லாம் தங்களையும் தூக்கி உள்ளுக்கு போட்டுடுவாங்களோ எண்டு பயம்.முன்னெச்செரிக்கையும் அதுதான்

இதைவிட அவையள் இதுக்கு வந்ததே பெரிய புண்ணியம்.

ஏனெண்டால் இப்ப அங்கை ஆராரையும் வலுலேசாய் தூக்கி உள்ளுக்கு போட சட்டம் வசதியாய் இருக்கு.

அடுத்தது என்னெண்டால் மன்சூர் "சிங்கம் சிங்கிளாய்த்தான் வரும்" எண்ட வசனத்துக்கு அவர்தான் உதாரணம்

மன்சூர் அவர்களுக்கு என்ரை சலாம் . :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.