Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலேசியாவில் இலங்கை தூதரகம் முன்னால், தமிழர் படுகொலையை கண்டித்து கண்டன மறியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசியாவில் இலங்கை தூதரகம் முன்னால், தமிழர் படுகொலையை கண்டித்து கண்டன மறியல்!

சிங்கள பேரினவாதத்தால் இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கபடுவ

மிக்க நன்றியை மலேசிய தமிழர் அமைப்பு தெரிவிக்கிறோம்....ஈழத்தமிழர்க

  • கருத்துக்கள உறவுகள்

கண்டன மறியலில் ஈடுபட்ட மலேசிய தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மலேசியா வாழ் தமிழர்களே,உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றுபடவேண்டிய தருணம் இது, எல்லோரும் ஒன்றுபட்டு அழிந்துபோய்கொண்டிருக்கும் இனத்தை காப்பாற்றுவோமாக

இலங்கை அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுக்கொலையைக் கண்டித்து இலங்கை தூதரகத்தின்முன் இருநூறுக்கு மேற்பட்ட மஇகா இளைஞர்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆதரவாளர்கள் இன்று காலை மணி 110.00 க்கு அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

அத்துடன், அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இலங்கை தூதரிடம் வழங்க முயன்றனர்.

ஜாலான் அம்பாங்குடன் இணைந்துள்ள ஜாலான் டாமையிலில் இலங்கை தூதரகம் இருக்கிறது.

இலங்கை அரசு அந்நாட்டு தமிழர்கள்மீது தொடர்ந்து விமானக் குண்டுவீச்சுகளையும் பீரங்கித் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

இத்தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான் அப்பாவி மக்கள் - ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

இம்மறியலை மஇகா இளைஞர் பிரிவு துணை ஒருங்கிணைபாளர் எஸ். முருகேசன் மற்றும் மஇகா இளைஞர் ஆலோசை மன்ற தலைவர் எஸ். ரமேஷ் வழிநடத்தினர்.

மஇகா இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் த.மோகன் மற்றும் சா.வேள்பாரி ஆகியோர் மறியலில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

மறியலில் கலந்து கொண்டிருந்தவர்கள் குண்டுவீச்சுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் இடிந்து கிடக்கும் வீடுகளைக் காட்டும் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்றனர். அத்துடன் கருப்பு கைப்பட்டைகளையும் அணிந்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொள்ள மறுப்பு

மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் வழங்கவிருந்த மகஜரை இலங்கை தூதரக அதிகாரிகள் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டனர். மஇகா இளைஞர் பிரிவினர் மட்டுமே மகஜரை வழங்கலாம் என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

மகஜரை வழங்குவதற்கு மஇகா இளைஞர் பிரிவினர் இதர அரசு சார்பற்ற அமைப்புகளுடன் வருவதாக முன்னதாகவே தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகக் கூறிய எஸ். முருகேசன், இலங்கை தூதரகத்தின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றார்.

“இலங்கை தூதரகத்தின் செயல் மஇகா இளைஞர் பிரிவு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கிடையில் பிளவுவை உண்டுபண்ண விரும்புவதாகத் தெரிகிறது”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இலங்கையிலிருந்து வரும் பொருள்களையும் சிறி லங்கா விமான சேவையையும் மலேசிய மக்கள் புறக்கணிக்கக் கோரும் பரப்புரை ஒன்றை விரைவில் மேற்கொள்ள விருப்பதாக எஸ். முருகேசன் மேலும் கூறினார்.

“கூடிய விரைவில் நாங்கள் இன்னொரு பெரிய மறியலுக்கு ஏற்பாடு செய்வோம். நாங்கள் எங்களுடைய பலத்தைக் காட்டுவோம்”, என்றாரவர்.

எவ்வித அசம்பாவிதமும் இன்றி மறியல் மணி 12.45 க்கு முடிவிற்கு வந்தது.

மலேசிய அரசாங்க நெருக்குதல்

இன்று நடந்த மறியலின் போது இலங்கை தூதரக அதிகாரிகள் மிகத் துடுக்காக நடந்து கொண்டதாக மஇகா இளைஞர் பிரிவின் ஒருங்கிணப்பாளர் த. மோகன் கூறினார்.

இவர்கள் இங்கேயே இப்படி நடந்துகொள்ளும் போது, அங்கே அவர்கள் நடத்தை பற்றி கூறத் தேவையில்லை என்றார்.

“வரும் வெள்ளிக்கிழமை இன்னொரு மறியல் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும். அந்த மறியலில் இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளோடு இதர மலேசிய அரசு சார்பற்ற அமைப்புகள் மறியலில் பங்கேற்பது பற்றியும் விவாதிக்கப்படும்”, என்று அவர் மேலும் கூறினார்.

“இலங்கையில் நடந்துவரும் மனித உரிமை அத்துமீறல்கள் தமிழர்களை மட்டும் சார்ந்த ஒன்றல்ல. இது சக மனிதர்களுக்கு எதிரான ஒன்று. ஆகவே, இந்த அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு மலேசிய அரசாங்கம் நெருக்குதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மஇகா இளைஞர் பிரிவு விரைவில் மலேசிய அரசிடம் சமர்ப்பிக்கும்”, என்று த. மோகன் மலேசியாஇன்றுவிடம் கூறினார்.

இலங்கைப் பொருள்கள் மற்றும் இலங்கை விமானச் சேவை புறக்கணிப்பை முதலில் இந்தியர்கள் அமல்படுத்த வேண்டும். பின்னர், மலேசிய அரசாங்கமும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

சிறிலங்காவின் இனப் படுகொலையை கண்டித்து மலேசிய சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக இருநூறுக்கு அதிகமான மலேசிய இந்திய காங்கிரஸ் இளைஞர்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களின் ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.