Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பு - இந்திய உயர் நீதிமன்றம்

Featured Replies

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பு - இந்திய உயர் நீதிமன்றம்

வீரகேசரி இணையம் 11/11/2008 9:51:41 AM - விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளதக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புலிகள் மீதான தடை தொடர்பான மனு ஒன்றை இந்திய உள்நாட்டமைச்சர் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் மத்தியில் போதுமான சாதகத்தன்மை ஏற்படாததைத் தொடர்ந்தே புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பதாக நீதிவான் விக்ரம்ஜீத் சென் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை செய்துள்ளன.1991ஆம் ஆண்டு ராஜீவ காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து 1992 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

:( ஈழத்தமிழரைக் காப்பாற்ற தக்க தருணத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு ! இதற்காக உழைத்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் !

ஆகா, இதைவிட வேறு என்ன உதவி வேண்டும் எமக்கு ?!

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவிலும் மேற்குலக நாடுகளிலும் தொடர்வது தான் தமிழரிற்கு செய்யக் கூடிய பெரும் உதவி.

விடுதலைப் புலிகள் மீதான தடை தான் போராட்டம் ஏன் தொடங்கியது அதை எப்படி நியாயப்படுத்துவது இராணுவ ஆயுத கலாச்சரமற்ற பிரதிநிதித்துவம் என்ற கோணத்தில் கொஞ்சமாவது சிந்திக்க தூண்டுகிறது. அது போக சூரியதேவன் முருகன் எண்டு தேவாரம் மன்னராட்சி எண்ட ரோதனைகள் கொஞ்சமாவது குறைந்திருக்கு.

இதில் தயாகத்தில் இருந்து ஈழகிழவன் அம்பலம் உட்பட்ட வேறு அரட்டைகள் மற்றும் இராணுவ குறும்படங்கள் தயாரித்து புலம்பெயர்ந்தவர்களிற்கு வெளியிடுபவர்களும் விதிவிலக்கல்ல. ஒருப்பக்கத்தாலை மேற்குலகு நோக்கி அவர்களது கலாச்சார மொழி அணுகுமுறைகளில் இன்றை கால ஓட்டத்திற்கு ஏற்ப பரப்புரை செய்யுங்கோ எண்டு ஒப்பாரி. மற்றப்பக்காத்தாலை ஆதிகாலத்து அரட்டைப் பாணியில் அதே புலம்பெயர்ந்தவர்களை நோக்கி அர்த்தமற்ற நிகழ்ச்சிகள்.

விடுதலைப் புலிகளின் தடை என்பது ஒட்டுமொத்த தமிழ்இனத்தையும் சர்வதேச இராசதந்திர அரசியல் பரப்புரைச் செயற்பாடுகளை பக்குவப்படுத்த அறிவியல் ரீதியில் சிந்திக்க உதவியது இனியும் உதவும். தமிழர் 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச தளத்தில் ஒரு தனிநாட்டிற்குரிய தேசிய இனமாக பக்குவப்படும் வரை விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும்.

எப்படி தமிழ்த்தேசிய சிந்தனையை தனது அடக்குமுறை மூலம் எதிரி உருவாக்கினானே அதேபோன்றே இந்த விடையத்திற்கும் எமது எதிரிகளிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவிலும் மேற்குலக நாடுகளிலும் தொடர்வது தான் தமிழரிற்கு செய்யக் கூடிய பெரும் உதவி.

விடுதலைப் புலிகள் மீதான தடை தான் போராட்டம் ஏன் தொடங்கியது அதை எப்படி நியாயப்படுத்துவது இராணுவ ஆயுத கலாச்சரமற்ற பிரதிநிதித்துவம் என்ற கோணத்தில் கொஞ்சமாவது சிந்திக்க தூண்டுகிறது. அது போக சூரியதேவன் முருகன் எண்டு தேவாரம் மன்னராட்சி எண்ட ரோதனைகள் கொஞ்சமாவது குறைந்திருக்கு.

இதில் தயாகத்தில் இருந்து ஈழகிழவன் அம்பலம் உட்பட்ட வேறு அரட்டைகள் மற்றும் இராணுவ குறும்படங்கள் தயாரித்து புலம்பெயர்ந்தவர்களிற்கு வெளியிடுபவர்களும் விதிவிலக்கல்ல. ஒருப்பக்கத்தாலை மேற்குலகு நோக்கி அவர்களது கலாச்சார மொழி அணுகுமுறைகளில் இன்றை கால ஓட்டத்திற்கு ஏற்ப பரப்புரை செய்யுங்கோ எண்டு ஒப்பாரி. மற்றப்பக்காத்தாலை ஆதிகாலத்து அரட்டைப் பாணியில் அதே புலம்பெயர்ந்தவர்களை நோக்கி அர்த்தமற்ற நிகழ்ச்சிகள்.

விடுதலைப் புலிகளின் தடை என்பது ஒட்டுமொத்த தமிழ்இனத்தையும் சர்வதேச இராசதந்திர அரசியல் பரப்புரைச் செயற்பாடுகளை பக்குவப்படுத்த அறிவியல் ரீதியில் சிந்திக்க உதவியது இனியும் உதவும். தமிழர் 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச தளத்தில் ஒரு தனிநாட்டிற்குரிய தேசிய இனமாக பக்குவப்படும் வரை விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும்.

எப்படி தமிழ்த்தேசிய சிந்தனையை தனது அடக்குமுறை மூலம் எதிரி உருவாக்கினானே அதேபோன்றே இந்த விடையத்திற்கும் எமது எதிரிகளிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

சரி ஆரம்பிச்சாச்சு

புழுதிவாரலை

இனியென்ன

அவன் செய்வது சரியல்ல இவன் செய்வது சரியல்ல

எது சரி எது பிழை அது எவன் செய்தாலும் பிழை.............?????என்ற ரீதியில் எல்லாம் போகப்போகுது தொடரட்டும் தங்கள்பணி........

தாங்கள் இந்தப்பணியைச்செய்யும்போது நானும் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்

அல்லது அனுமதித்தேன் என்பது எனக்கும் வந்து சேரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.