Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல்

[12 நவம்பர் 2008, புதன்கிழமை 8:45 மு.ப இலங்கை]

கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் -

"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வருமாறு-

இராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் கச்சதீவு அருகே சில மீனவர்கள் 10 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கைக் கடற்படையினர் 5 கப்பல்களில் அங்கு ரோந்து வந்தனர். தமிழக மீனவர்களைப் பார்த்ததும் சற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் படகுகளில் ஏறினர். மீனவர்களை வாள் மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தினர்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படகில் இருந்த ஜோதிபாச (வயது-21), வினிஸ்டன், கார்பசேவ் மற்றும் இன்னொரு படகில் இருந்த கிங்ஸ்டன் ஆகியோரை அடித்து உதைத்தனர். துப்பாக்கி முனையால் அவர் களைத் தாக்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

பின்னர் படகில் இருந்த ஐஸ் பெட்டி, மரப்பலகைகள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசியதுடன், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி நேற்றுக்காலை மீனவர்கள் கரைசேர்ந்தனர்.

கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் கியூப் பிரிவுப் பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களைக் கடந்த 2 மாதங்களில் நடுக்கடலில் இவ்வாறு தாக்குவது இரண் டாவது முறையாகும். முன்னதாக 25 படகுகளைச்சற்றிவளைத்து தாக்கியதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்,

"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் திட்டினர் எனக் கூறினர். மீண்டும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளமையால் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உதயன்

சொறணை இல்லாத போலித்தமிழகத்தலைமைகள் இருக்குவரை தமிழகமீனவர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் எந்தமூலையிலும் தமிழனுக்கு எது நடந்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை...வேறு இனங்களைப்பாருங்கள்...இப்படி நிலைமை என்றால் என்ன செய்திருப்பார்கள்.?

இல்ல அவை தமிழனோ சிங்களவனோ எண்டு சோதிச்சிரிருப்பினம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல அவை தமிழனோ சிங்களவனோ எண்டு சோதிச்சிரிருப்பினம்!

ஏன் சிங்களவனுக்கு ஏதும் இல்லையோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

jkpodh முசுலீமா என்று சேதித்தாலும் பரவாயில்லை

முசுலீம் நண்பர்கள் குறைநினைக்கவேண்டாம்

சிரிப்பதற்காகவே

இல்ல அவை தமிழனோ சிங்களவனோ எண்டு சோதிச்சிரிருப்பினம்!

ஏன் சிங்களவனுக்கு ஏதும் இல்லையோ :rolleyes:

அதுதானே

தமிழனா முசுலீமா என்று சேதித்தாலும் பரவாயில்லை

முசுலீம் நண்பர்கள் குறைநினைக்கவேண்டாம்

சிரிப்பதற்காகவே

ஆனால் தமிழனைத்தவிர

வேறு யாரையும் கழட்டிப்பார்க்கும் துணிச்சல் யாரிடமுமில்லை

எனவே இத்தால் நான் நிறுவுவது என்னவென்றால் அவர்கள் தமிழன் என்று நன்றாக முடிவெடுத்த பின்னரே கழட்டிப்பார்த்துள்ளனர் என்பதாகும்

Edited by KUGATHASAN

இது சிரிப்பதுக்கு உரிய நேரம் இல்லை இது சிந்திப்பதுக்கு உரிய நேரம் எனவே வீண்தனமாக இணையத்தில் அழட்டி அறுப்பதை விட்டு விட்டு தயவு செய்து நல்லதை நன்றாக புரியும் படி தாருங்கள் நன்றி

மேலும் எமது துன்பப்பட்ட மீனவ தமிழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !!!!!!!!!! விடியும் விடியும் ஒருநாள் விடியும் நாம் எமது தமிழ் மண்ணில் வளம் வரும் காலம் வரும் எனவே தயங்காதீர்

தமிழனின் தாகம் தீரும் காலம் வெகுதொலைவில் இல்லை!!!

நன்றியுடன்

நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சனை உரியவர் காதில் ஏறவில்லையா , அவர்களது அழுத்தம்

போதாது ?.......சிங்கள கடற்படையை எதிர்க்க ......

..அடித்தால் திருப்பியடிக்க துணிவு வில்லயா ? ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.