Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெற்றி எப். எம்மின் நிகழ்ச்சி முகாமையாளர் வாமலோஷனன், ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது

Featured Replies

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வானொலிகளில் ஒன்றான வெற்றி எப். எம்மின் நிகழ்ச்சி முகாமையாளரும் ஊடகவியலாளருமான, லோஷன் என்று அழைக்கப்படும் வாமலோஷனன், ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேரடியாக வீட்டுக்குச் சென்று கைது செய்தவர்கள் ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரே என்பதை உறுதிப்படுத்தியுள்ள லோஷனுடைய குடும்பத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததன் காரணமாகவே தாம் கைதுசெய்துள்ளதாக, கைது செய்யும்போது வழங்கும் காரணத்தை உள்ளடக்கிய சீட்டில் ஸ்ரீலங்காப் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனினும் வாமலோஷனன் முன்னர் பணியாற்றிய வானொலி ஒன்றிலிருந்து, மீண்டும் தம்மோடு இணைற்துகொள்ளுமாறு தொடர்ச்சியாக அழுத்தங் கொடுக்கப்பட்டதாகவும். அதனுடன் தொடர்புடையதாகவே இந்தக் கைது இடம்பெற்றிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தகவலுக்கு நன்றி. லோஷன் சிறந்த ஒரு ஊடகவியலாளர். தமிழில் உள்ள நல்ல ஊடகவியலாளர்களை குறி வைத்து அவர்களை இலங்கை அரசு செயலற்ற நிலைக்கு உட்படுத்துகின்றது.

  • தொடங்கியவர்

தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

- வெற்றி எப். எம்

லோஷனுடைய குடும்பத்தினரை காலை 10 மணியளவில் பம்பலப்பிட்டியிலுள்ள ஸ்ரீலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது. மேலதிக விபரம் கிடைக்கும்போது அறியத்தருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

"வெற்றி எப் எம்" வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் வாமலோஷன் கைது

வீரகேசரி இணையம் 11/15/2008 11:24:42 AM - தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

லோஷன் முன்னாள் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 'சூரியன்' வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் வருத்தமான செய்தி..

பிரபல தமிழ் அறிவிப்பாளரும் வெற்றி எஃப்.எம். வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளருமான ரகுபதி பாலசிறீதரன் வாமலோசன் (லோசன்) சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷனை, அவருடைய குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலையில் பம்பலப்பிட்டியிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அப்படி யாரும் இல்லை என்று தெரிவித்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், நீண்ட நேரத்தின் பின்னர் அவரைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதின் பின்னணியில் லோஷன் முன்னர் பணியாற்றிய வானொலியொன்றின் நிர்வாகமே சம்பந்தப்பட்டுள்ளதாக வெற்றி எப்.எம் நிர்வாகத் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.