Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி, 25.11.08 ல் தமிழகமெங்கும் வேலைநிறுத்தப் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் அங்குள்ள தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

போரை நிறுத்தி, அமைதி பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டுக்கு மத்திய அரசு கூற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இலங்கை பிரச்சைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், 2 வார காலத்துக்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டமும் நடந்தது. ஆனால் இதில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

தற்போது இலங்கையில் போர் உக்கிர நிலையை அடைந்துள்ளது. போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் போர் நிறுத்தம் கிடையாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் இலங்கை பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையில் சிபிஐ அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து அக்கட்சி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று கூடுகிறது. அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

இந்த கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்பது தெரியவில்லை. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை கூறி, கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை மறைமுகமாக உறுதிபடுத்தியுள்ளார்.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் என்று தெரிகிறது. மதிமுக, பாமக, சிபிஎம் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க கூடும் என்று கூறப்படுகிறது. திமுக புறக்கணிக்கும்பட்சத்தில் அதிமுக இதில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் புதிய கூட்டணியை உருவாக்கும் எனத் தெரிகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நவம்பர் 25ம் தேதி தமிழகத்தில் பந்த் நடத்துவதாக இன்று தமிழக சட்டப்பேறவை அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

----------சன் நியூஸ் செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ஆடியோச் செய்தி இணைக்கபட்டுள்ளது.)இலங்கையில் உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி தமிழகமெங்கம் 25.11.08 வேலைநிறுத்தப்போராட்டம். தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வினை மத்திய அரசுக்கு வலுவாக்கத் தெரிவிக்கும் வண்ணம் தமிழகமெங்கும் வேலைநிறுத்தப் போராட்டம் நடாத்த அனைத்துக்கட்சி மாநாட்டில் தீர்மானம். ஈழத்தமிழமக்களின் மீதான இலங்கை அரசு தொடுத்திருக்கம் போருக்கு எதிரான தமிழகத்தின்

மன உணர்வுகளை பல நிலைகளிலும் மத்திய அரசுக்கு தமிழகம் வெளிப்படுத்தியிருந்த போதும், இதுகுறித்த ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதையும் செய்யாதிருந்த மத்திய அரசுக்கு,தமது உணர்வுகளைத் உறுதியாகத் தெரியப்படுத்துவதற்காக இன்று கூடிய அனைத்துக்கட்சி மாநாட்டில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தலைமையில் இன்று கூடியபோது, பா.ம.க,மதிமுக, உட்பட பல அரசியற்கட்சிகளும், தமிழர நல அமைப்புக்களும் கூடி முடிவு செய்திருக்கின்றன. இந்த முடிவை கூட்டத்திற்குத் தலைமை வகித்த தா. பாண்டியன அறிவித்தார்.

அதறிவிப்பின் ஒலிவடிவம்:

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

Edited by forlov

இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.11.08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி உட்பட கலைஞர் தலைமையிலான கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்காக மிகுந்த ஆதரவைக்காட்டத் தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்கதே. ஆனால் காலங்கடந்துவிட்டது. ரூ லேற் போலத் தெரிகிறது. உடுக்கையிழந்தவன் கை போல தாவிப்பிடித்திருக்க வேண்டிய விசயம். உடுக்கையை இழக்க வைத்துவிட்டு உதவிக்கு வருகிறார்கள். ஈழத்தமிழன் மானமல்ல உலகத் தமிழரின் மானமும் காற்றில் பறக்கப் போகிறது. இனி ஆதரவல்ல ஆயுத ஆட்பல உதவிகளே ஈழத்மிழரை இக்கட்டிலிருந்து பாதுகாக்கும். தொப்பூழ்க்கொடி உறவுகள் யோசித்துச் செயல்படட்டும்.

தமிழகம் முழுவதும் எதிர்வரும் 25 ஆம் திகதி முழுமையான கதவடைப்பு ஹர்த்தால் - கம்யூனிசக் கட்சியின் தமிழ் மாநில பிரதி செயலாளர் மஹேந்திரன் GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி:

http://www.globaltamilnews.net/tamil_news....=2275&cat=2

இந்தியாவின் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 25 ஆம் திகதி முழுமையான கதவடைப்பு ஹர்த்தால் போராட்டத்தை மேற்கொள்வதென இன்று (நவ17) கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிசக் கட்சியின் தமிழ் மாநில பிரதி செயலாளர் மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் GTN ற்கு விழங்கிய விசேட செவ்வி ஒலிவடிவில்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.