Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் புலிதேடும் படலம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூநகரியில் புலிதேடும் படலம்.....

ஆமிக்காரனும் சட்டம்பியாரும்

கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை

ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.!

சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு !

அந்த வழில புலி கண்டிய... ...?

ஒமோம்.. தம்பி... ஒமோம்.

அந்த வழியிலே புளி நிக்கு

கனக்க கனக்க காச்சு கிடக்கு..!

இல்ல இல்ல மாத்தய ..!

கொட்டியா... கொட்டியா கண்டியா..!

ஒமோம்..ஒமோம்

கொட்டயோட தான் நான் கண்டேன்

இனி கோதுடச்சு ...

கொட்டயெடுத்து...

கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்...

டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..?

மாத்தய..நீ போடா போட..!

நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்...

தம்பிகளா..

நான் மனதுக்குள்ள சொல்லுறன்

புலி தேடவந்த

பொன்சேகவின் தம்பிகளே

அவங்கள் நீங்கள் தேடி வராங்கள்

அவங்களாவே வருவாங்கள்

முடிஞ்சாய் தடுத்திடுங்கோ

இல்லாட்டி முழங்கால் தெறிக்க ஓடிடுங்கோ..

சரி தம்பிமார் நான் வரட்டா..?

சரி போ மாத்தயா..

கொட்டியா வந்தா சொல்லு..!

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி...

வித்தியாசமான சிந்தனை.. வித்தியாசமான நடை தொடர்ந்து உங்கள் கவிப்பயணம் இந்த நயத்தோடே தொடரட்டும்! நகைப்பையும், கருத்தையும் தந்தமைக்கு நன்றிகள் பல!

இளங்கவி.., 'விகட'கவி ஆனது எப்போ? சிரிப்பை வரவழைக்கும் கவிதை :o:unsure:

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

paravaikaL

எங்கள் மக்களின் எல்லா வகையான உணர்வுகளுக்கும் தீனிபோடவும், எந்தெந்த வகைகளில் மக்களுக்கு கருத்துக்களைச் சொல்ல முடியுமோ அந்த வழிகளில் சொல்லு முயன்றதன் விழைவே இந்த நகைசுவைக் கவிதை.

இக்கவிதையில் சொல்ல வந்த விடயம் பூநகரியை இழந்ததற்கு கவலைப்படாமல் புலிகளின் வசம் பூநகரி விழும் என்று சொல்ல வந்தேன்.

உங்கள் கருத்துக்கும் கவிதையை ரசித்ததற்கும் மிக்க நன்றிகள்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mallikai vaasam

இயல்பில் காதலும், நகைச்சுவையுணர்வு மிக்கவன் நான்......

எங்கள் மண் எதிரியால் ஆக்கிரமிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளை மனங்கள் கொதித்துக்கொண்டிருக்கும் வேளைகளில் நகைச்சுவை விடயங்கள் சொல்லப் போய் ஏன் மூக்குடைபடுவானேன் என்று கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். காதலை தாய் நாட்டுக் காதலாய் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

இந்த நகைச்சுவைக் கவிதையை ரசித்ததற்கு மிக்க நன்றி.

இளங்கவி

நகைச்சுவை கலந்த, மண் வாசனை மிக்க உரையாடல் தமிழில் எழுதியிருக்கீங்கள் இளங்கவி... இனிமையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இக் கவிதை நடை மலையகத்து கங்கானியின் நாடகப் பாடல்களை ஞாபகப் படுத்துகின்றது இளங்கவி. நன்றி!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

மிக்க நன்றி என் வரிகளையும் ரசித்ததற்கு...

எமது மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஓர் விடயத்தை குறைந்த வரிகளில் நகைச்சுவையாக சொல்ல நினைத்தேன், அதனாலே இந்த வரிகளை எழுத முடிந்தது.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suvy

உங்களின் ரசனைக்கு மிக்க நன்றிகள்...

எனக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் கருத்துக்களைச் சொல்லப் பார்க்கிறேன். அதிலொரு முயற்சிதான் இது.

மீண்டும் நன்றிகள்...

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.