Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்?.. மழையின் தாண்டவம்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்மையில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட லோசன் அவர்களுடைய பதிவு

அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

சென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன்.

யாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ.

ஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன்.

நான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன.

பார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை.

அதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை' என்று நாம் கேலி செய்வதுண்டு) அப்படியே புயலில் பறந்து விட்டதாம்.

பெருமையும் புகழும் பெற்ற இணுவில் ஆஸ்பத்திரியின் முன்னால் ஒரு அரசமரமும் கீழே பிள்ளையாரும் காட்சியளிக்கும் (என்னை விட அதிக காலம் இணுவிலில் வாழ்ந்தவர்கள் இது பற்றி நன்கு அறிவார்கள்.) அந்த அரசமரம் இந்தப் பாரிய புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரறுந்து வீழ்ந்து விட்டதாம்!

வெள்ள சமுத்திரத்தில் மிதக்கும் யாழ்ப்பாணக் கோலம் இதோ!

யுத்தத்தை தொடர்ந்து யாழ்வாசிகளுக்கு மீண்டும் இந்த அவலங்கள்!

யார் கொடுத்த சாபமோ?

j1jpg.jpg

j2jpg.jpg

j3jpg.jpg

j4jpg.jpg

j5jpg.jpg

j6jpg.jpg

j7jpg.jpg

j9jpg.jpg

j12jpg.jpg

j16jpg.jpg

http://loshan-loshan.blogspot.com/2008/12/blog-post_10.html

Edited by புஸ்பாவிஜி

நன்றி இணைப்பிற்கு

அப்ப வன்னி நிசா சூறாவளியால் பாதிக்கப்படவில்லையோ?

பொருளாதார மருத்துவ உணவு எரிபொருள் தடைகள் இல்லாத யாழ்பாணத்தவருக்காக சாபம் செய்தவர்களா என்று ஒப்பாரி வைக்கிறம்.

12 உடலங்களை வைச்சு கண்காட்சி நடத்தி வெளியுலகிற்கு படங்கள் காணொளிகள் அனுப்பய படி வன்னி வேறு கண்டத்தில இருக்குதோ?

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வன்னி நிசா சூறாவளியால் பாதிக்கப்படவில்லையோ?

பொருளாதார மருத்துவ உணவு எரிபொருள் தடைகள் இல்லாத யாழ்பாணத்தவருக்காக சாபம் செய்தவர்களா என்று ஒப்பாரி வைக்கிறம்.

12 உடலங்களை வைச்சு கண்காட்சி நடத்தி வெளியுலகிற்கு படங்கள் காணொளிகள் அனுப்பய படி வன்னி வேறு கண்டத்தில இருக்குதோ?

குறுக்ஸ் உங்களுக்கேன் கோபம் வரவேண்டும் நானும் கேட்கலாம் தான யாழ்ப்பாணம் என்ன இந்தியாவோட சேர்ந்தா இருக்குது அதுவும் எங்கட மக்கள் தான நீங்கள் ஏன் இந்த வேற்றுமை வாதத்தை தூன்டிவிடுகிறீர்கள் ஏன் அனுதினமும் ஆமிக்காரனோட பிடியில இருந்து யாழ்ப்பான மக்கள் சொல்லனாத்துன்பத்துக்கு ஆளாகவில்லையோ ஒவ்வொருநாளும் அங்க சுடப்பட்டடது இங்க சுடப்பட்டது என்னு செய்தித்தளங்களில் முந்தி ஒரு செய்தி பார்த்தால் அது பெரிதாகப் பேசப்படும் ஆனால் இப்ப எல்லோருக்கும் பழகிப்போய்விட்டது அப்படித்தான மழையாள பாதிக்கப்பட்டது எல்லோரும் தான் அது யாழப்பாணமாகட்டும் இல்ல வன்னியாகட்டும் எல்லா மக்களும் ஒண்டுதான். உமக்குத்தெரியுமே யாழ்ப்பாணத்துக்கு தடையில்லையென்டு பரித்தித்துறையிலையோ இல்ல கடலிலேயோ ஏதாவது பிரச்சனையென்டால் யாழ்ப்பாணம் படுகிற பாடு தெரியும் யாழ்ப்பாணத்தில பொருள்களோட விலைதெரியுமோ காசு இருக்கிறவன் வாங்குவான் காசு இல்லாதவன்?

எதுக்கு தேவையில்லாமல் 15 உடலங்களையும் வைச்சு கன்காட்சி நடத்தினதையும் யாழ்ப்பாணத்தையும் ஏன் இப்படிக்கதைக்கிறீர்கள் முதலில எங்கையென்டாலும் தமிழ்மக்கள் கஸ்ரப்பட்டால் அத புரிந்து கொள்ளப்பாருங்கள் இல்லாட்டி விதன்டாவாதமாவது பன்னாமலிருங்கள் அது போதும். இந்திய தமிழ் மக்களுக்கு தெரியுது எம் மக்களுக்கு

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

ஓகோ அப்ப நிசா சூறாவளியாலை வரும் பாதிப்புகளை எதிர்கொள்ள யாழ்பாணத்தில இருக்கிற வசதிகள் தான் வன்னியிலையும் இருக்கு என்றியள்?

யாழ்பாணத்தில என்ன தடை? அத்தியாவசிய உணவு மருந்து எரிபொருள் விலைகளை வன்னிய விலைகளோடு ஒப்பிட முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ் நான் யாழ்ப்பாண மக்கள் மழைவெள்ளத்தால படுகிற துன்பத்தைதான் இங்கே வெட்டி ஒட்டிhன் இதுக்காக யாழ்ப்பாண மக்கள் பட்டால் துன்பமில்லையென்டும் வன்னி மக்கள் பட்டாததான் துன்பமோ எனக்கு விளங்கேல நீங்கள் என்னமாதிரி சொல்லுறீர்கள் என்டு அதுக்காகவில்லை வன்னி மக்களும் துன்பப்படுகிறார்கள் தான் அது எங்களுக்கும் தெரியும் அதுக்காக அதமட்டும் தூக்கேலாது. எங்களுக்கு வன்னி மக்களும் ஒண்டுதான் யாழ்ப்பாண மக்களும் ஒண்டுதான் நான் இந்தக்கருத்தில் ஒரு இடத்திலும் சொல்லவேயில்லையே யாழ்ப்பாண மக்கள் தான் வன்னி மக்களை விட அதிகம் துன்பப்படுகிறார்கள் என்டு அவர்களும் துன்பப்படுகிறார்கள் தான. கருத்துக்களை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். யாழப்பாணத்தில முந்தி மக்கள் பட்ட கஸ்ர துன்பங்கள் எல்லாத்தையும் மறந்துபோட்டியல்போலக்கிடக்க

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

முந்திப்பட்ட கஸ்ர துன்பங்கள் இருக்கட்டும் இப்ப இருக்கிற நிலையில் யார் கூடின அவலத்தில இருக்கினம் என்பவற்றை கவனத்தில் கொண்டு அவற்றை வெளியுலகிற்கு கொண்டு வருவது தான் தேவை.

யாழ்பாணத்தில வெள்ளத்தாலை சனம் என்ன கஸ்ரப்படுகுதுகள்?

கல் வீட்டை சுத்தியிருந்த மதில் விழுந்திருக்கும். கோயிலுக்கை வெள்ளம் போயிருக்கும்.

பங்கர் கட்டியிருப்பினமே அதுக்கை வெள்ளம் போக இல்லாட்டி பங்கர் தான் தேவையோ?

அதிகப்படியாக பயிர்ச் செய்கைகள் பாதிச்சிருக்கும்.

அதுக்கு அரச நிவாரணங்கள் உலக உணவுத்திட்ட உதவிகள் ஒப்பீட்டளவில் மலிவான விலையில் அத்தியாவசிய தேவைகள் பெற்றுக் கொள்ளலாம்.

வன்னியில இடம்பெயர்ந்து வீடில்லாமல் மரங்களுக்கு கீழயும் கொட்டில் போட்டுக் கொண்டும் இருக்கும் 3.5 லட்சம் சனத்தைப் நீசா சூறாவளி பாதித்தாக வராத படங்கள் யாழ்பாணத்தாரைப் பற்றி வருகுது.

உலக உணவுத்திட்டத்தின் படி கொடுக்கப்படும் குறைந்த பட்ச உணவில் பாதி அளவுதான் தற்பொழுது வன்னிக்கு போகுது. இதைவிட மருந்து தட்டுப்பாடு தொற்றுநோய்ப் பிரச்சனைகள்.

யாழ்பாணத்து கல்வீடுகளிலும் கட்டிடங்களிலும் இருக்கிற கரிசனை வன்னியில இடம்பெயரந்த மனிதர்கள் பற்றி எடுத்து விடுகிற படங்களில் தெரியவில்லை. இந்த கேவலத்தில அவையும் தமிழர் தான் எண்டு பந்தா வேறை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் எல்லோரும் ஒண்றுதான் எனக்கு அது யாழப்பாணமாகட்டும் வன்னியாகட்டும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.