Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்களெல்லாம்...

Featured Replies

(கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட வாணிவிழா - 2008 கவியரங்கில் இடம்பெற்ற எனது நண்பன் கி.குருபரனுடைய கவிதை இது)

தூயதாய் நூல்கள் கற்று துலங்கிவரும் இச்சபையில்

பாலகன் நான் வந்து பாடுவதோ? – யாரிவரோ?

தொக்கிநிற்கும் கேள்வி துவங்கின் எனைக்காக்க

விக்கினேஸ்வரா சொல்லு விடை!

வள்ளியை மணமுடிக்க வயோதிபனாய் வந்த

வெள்ளி மயில் வாகனனே வேலவனே – நல்லூரின்

உள்ளிருந்து கொண்டே உயிர்காப்பாய் என் கவிக்கு

கல்லெறி சேராமல் கார்!

பெற்றுப் புரந்தந்து பேணிப்பல செய்து

உற்ற தேவைகளை உடன்முடித்து- கற்கவைத்து

நாலுபேர்முன்னே நடமாட வைத்த வைத்த அம்மா நீ

போனாலும் மறவேன் புகழ்!

எதுகை மோனை இலட்சணங்கள் கற்பித்து

புதுமை செய்கின்ற புரட்சியனே – ச வே ப

பா வாடை பிடிக்க வைத்த பாவலனே உன்னுதவி

தேர்மீது ஏறும் திகழ்!

படிக்காமல் நடுவீதி திரிந்தாலும் கைமீது

கொடுக்காமல் காப்பாற்றும் குலமகளே- கலைவாணி

இரண்டுதரம் பரீட்சை எடுக்காமல் எனைக் காத்த

பெண்புலியே அன்பின் புரம்!

பகிடிவதை எதிர்த்துப் பாடுபட்ட எங்களுக்கு

உறுதுணைபுரிந்த உத்தமரே – திவா அண்ணா

நீங்கள் சொன்னபடி நிற்கின்றோம் இப்புவியில்

தாங்கும் இனியென் தமிழ்!

கும்மிருட்டு கூவுகின்ற மைக்செற்று அவியல் வெக்கை!

எட்டு வருசமாய் மாறாமல் இருக்கின்ற உமைப்பார்க்க ஒரு

மகிழ்ச்சி!!!

வாங்கோ என்றாலும் வரவேண்டாம் என்றாலும்

போங்காணும் என்முடிவு மாறாது- வருவேன் நான்

குருதான் என்பெயர் என்றாலும் குளிர் உறைக்கா தடித்த

எருமை மாட்டுக் குணம்!

தடிகள் தனியாகி தவிடாகி உடையுமென்றால்

அடியால் அவற்றை அழகாக – கொடியோடு

பத்துப் பெடியளைப் பார்த்து வைத்து ஒன்றாகக்

கட்டிவைப்பதே கரைச்சல்!

சொல்லுக்கடங்காத சூரத்தனம் செய்து

கல்லைக் கரையவைத்த காரிகையே – கொல்லுவிழி

வலைமாட்டிக் கொண்டிருக்கும் வரலாறு எந்தனுக்கு

தலைமாட்டில் நீயே தனி!

மின்சார விளக்கின்றி மினுமினுக்கும் குப்பியிலே

கண்சோர படித்து நாம் கரை சேர்ந்தோம் - வந்தோரே

கல்வி தலை நிமிர்த்திக் காட்டியதால் இம்மண்ணில்கவி

சொல்ல விழும் பலாச் சுளை!

காவலரண் சூட்டிற்கும் காப்பாற்றும் மண்மூட்டைக்கும்

மேல்வந்து விழுந்து வெடித்த செல்லுக்கும் - போய்வந்து

தலைகொடுத்து வந்த தமிழர் நாம் இப்புவியில்

விலையில்லை வீழும் உயிர்!

நாலுபாடம் படித்து நாலுக்கும் ஏ எடுத்து

வேலைசெய்த மக்கள் வங்கியிலே – நாளுக்கு

இருநூறு ரூபாக்கு இரவுவரை வேலைசெய்த

அரும்புகளும் நாம்தான் அறை!

கோட்டை அரண் சூழ்ந்து கும்மிருட்டு நேரத்தில்

நாட்டைக் காக்கின்ற நல்லவர்க்கு – கேட்டவுடன்

பங்கர் வெட்ட புது மண்வெட்டியுடன் போகும்

தங்கமான பெடியளும் தான்!

சீனி மாக் கப்பல் எப்ப சேரும் என காத்திருந்து

பனிநேரம் உதயன் படிக்கேக்கை – நாளைக்கு

லங்காஸ்ரீ வருகிறதாம் நல்லந்தான் வேளைக்கு

பொங்கலுக்கு அரிசி புடை!

கப்பலது வந்திற்றாம், கடம் காற்றாம் பாஜ் எல்லாம்

தெப்பமாய் நனைஞ்சிட்டாம் - சிரிப்புடனே

நனைந்த சீனியினை நம்தலையில் கட்டிவைத்த

கனம் சங்கக் கடையானே கடை!

(வேறு)

குண்டு வீசும் கழுகைக் கண்டு

குடலை உயிரைக்காக்க என்று

தொன்று தொட்டு ஓடிவந்த நாங்கள் - இப்போ

தொடங்கி விட்டோம் குண்டு வீசப் போங்கள்!!!

கலைச்சு கலைச்சுச் சுட்டுமென்ன

கவிழ்ந்து வீழ்ந்து பார்த்துமென்ன

களைச்சுப்போச்சு உங்கள் சுப்பர்சோனிக்கு – வித்தை

காட்டும் எங்கள் விமானம் மூடுபனிக்கு!

சுற்றி ஒரு வேலிபோட்டு

சுழலுகின்ற ராடர் போட்டு

கற்றதென்ன நீர் புதுக் கணக்கு! – உங்கள்

கனவு சிதைக்கும் நான் ஆமணக்கு!

ஆயிரமாய்ப் பல்குழல்கள்;

ஆயுதங்கள் வாங்கியென்ன

போயிரவில் பிடிப்பம் என்று சொல்லி – போட்ட

பொய்களுமே சிரிக்கிறது எள்ளி!

மீட்கப்போறம் என்றுசொல்லி – எங்கள்

வீடுவாசல் உடைக்குமுங்கள்

காட்டெருமைக் கூட்டத்திற்கு நாளை

காலிடையே தண்ணிபாயும் வேளை!!

வெள்ளைவானில் வந்து சேர்ந்து

வெருட்டப்போறம் என்று சொன்னால்

வெள்ளைவானில் ஏறிநிற்பா வேணி- அவ

வெள்ளைமீது விருப்பமுள்ள ஆள் நீ!

பொய்கள் மட்டும் சொல்லுமுங்கள்

புளுகல் புரட்டல் சாக வெங்கள்

பையன்கள் வந்து சொல்வார் பாடம் - நீங்கள்

படிக்கப்போகும் அறிவுப் பள்ளிக்கூடம்!

-கி.குருபரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சொல்லப்படாது கவிதை சூப்பர் அண்ணை..இப்படி அடிச்சு துவைக்கிறயள்..பலவிதழ் அவிஞ்சு போச்சு..

பல பேரின் பல்லும் உடைந்த போச்சு

சொல்லு போகா சொல் எல்லாம் சொக்கி விழந்திருச்சூ

கருப்பாயச்சி கண் ஆத்தா எல்லாரும் விழுந்து விழுந்து

படிச்சசூ வியந்தாச்சூ..

எதுகை மோனை எல்லாம் ஏறி விழுந்தாச்சூ

பட்டம் வழங்க எல்லாரும் பாய்ந்து வருகினம்..

நன்றி கந்தனே...கவிதை எறிக வேந்தனே... :)

Edited by new man

  • கருத்துக்கள உறவுகள்

வெண்பா வடிவில் கவிதைகள் மிக அழகு!! குருபரனுக்கு வாழ்த்துக்கள்!!!!!!தொடரட்டும் அவர் பணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நல்ல சோக்கான கவிதைக்கு பின்னூட்டம் போட மாட்டினம்..சும்மா உப்புச் சப்பில்லாததுகளை தூக்கி வைச்சு சூப்பர் படு சூப்பர் எண்டுவினம்...

அண்ணை உங்கட கவிதை தனியழகு...

இந்த கவிதை எழுதியவரு அனுமதி தந்த நான் சுட்டு ஒட்டுவன்.. நம்ம கலக்கும் இணையத்தில அல்லது மெயில் போட்டு விடுங்கோ

பதில் தங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதையைப் பாராட்டி நாலு வரி எழுதக்கூடாதோ? இதனால் தான் நல்ல கவிதைக்கு தட்டுப்பாடு போல

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. இப்படி சம காலத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகள் மேலும் வர வேண்டும் உங்களிடமிருந்து.

  • தொடங்கியவர்

இப்படி நல்ல சோக்கான கவிதைக்கு பின்னூட்டம் போட மாட்டினம்..சும்மா உப்புச் சப்பில்லாததுகளை தூக்கி வைச்சு சூப்பர் படு சூப்பர் எண்டுவினம்...

அண்ணை உங்கட கவிதை தனியழகு...

இந்த கவிதை எழுதியவரு அனுமதி தந்த நான் சுட்டு ஒட்டுவன்.. நம்ம கலக்கும் இணையத்தில அல்லது மெயில் போட்டு விடுங்கோ

பதில் தங்கோ...

கி.குருபரன் எண்டு பெயரைப் போட்டால் எங்க வேணுமெண்டாலும் சுட்டுப் போடுங்கோ... எங்க போட்டிருக்கிறீங்கள் எண்ட விபரத்தையும் இந்தப் பக்கம் சொன்னீங்களைண்டால், அதை குருபரனுக்கும் சொல்லிவிடுவன்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி சங்கைக் கீர்...கீர்...என அரியும் கீரனா

இக்கவியை இங்கே பதிந்தது!

இவ்வளவு நாளும் எங்கே பதுக்கியது!

ஒன்றுமில்லை நல்ல கவிதையைக் கண்டவுடன் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டன்!!!

தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.