Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணமல் போன படையின் பட்டியல் : உறவினர்கள் படை அதிகாரிகள் முறுகல்

Featured Replies

சிறீலங்கா படையினரால் வடபகுதி போரில் காணாமல் போனவர்கள் எனப்பட்டியலிடப்பட்டு, இறப்பு எண்ணிக்கையில் இருந்து தவிர்க்கப்பட்ட பலர், இறந்தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருந்தமையால் உறவினர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாணமையில் இடம்பெற்றுள்ளது.

வடபகுதி போரில் இறந்தவர் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காக, இறந்த பலரை காணமல்போனவர்களாக கூறி களமுனையிலேயே சிறீலங்கா படையினர் நீண்ட காலமாக புதைத்து வருகின்றனர்.

இந்த விடயம் பல தடைவகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அண்மையில் பாணமை படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறான பெயர் பட்டியலில் காணாமல் போனவர்களாக கூறப்பட்ட தமது உறவுகள் பெயரைக்கண்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் படை அதிகாரிகளைத்தாக்க முற்பட்டதாக கூறப்படுகின்றது.

இது சம்பந்தமாக காணமல் போன படை அதிகாரியின் மனைவி கருத்து தெரிவிக்கையில், தனது கணவர் விடுதலைப்புலிகளின் சிறையில் உள்ளதாகவும் விரைவில் அவர்களை மீட்கவே தாம் போர் புரிவதாக சிறீலங்கா படையதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூறியதாகவும் தற்போது எல்லாம் பொய்யென தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேஜர் தர சிறீலங்கா படையுறுப்பினர் ஒருவரின் தந்தை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் தமது மகனைக் காணவில்லை எனவும், அவர் இறந்துள்ளதாக கூறும் படை அதிகாரிகள் அவரை சமர் களத்தில் அடக்கம் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

குறிப்பிட்ட படை அங்கத்தவரது சமாதியை கண்ணுற்றவர்கள் அல்லது அரரைப் புதைத்த இடம் தெரிந்தவர்கள் தனக்கு அறிவிக்குமாறும், அவருக்கான இறுதிச்சடங்கை தான் மேற்கொள்ள தமிழ் மக்களிடம் கோரி நிற்பதற்காகவும் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததை ஐரோப்பிய தொலைக்காட்சியின் கொழும்புச் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்..

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி கருத்து தெரிவிக்கையில், தனது கணவர் விடுதலைப்புலிகளின் சிறையில் உள்ளதாகவும் விரைவில் அவர்களை மீட்கவே தாம் போர் புரிவதாக சிறீலங்கா படையதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூறியதாகவும் தற்போது எல்லாம் பொய்யென தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

:

:icon_mrgreen::lol::D:lol: :lol: :lol:

Edited by kuddipaiyan26

இன்னும் நிறைய ஆமிக்காரர் உப்பிடி காணாமல் போக .. சிங்கள சனமே மகிந்தகூட்டத்தைச் செருப்பால் அடிச்சுவிரட்டுற நாள் வெகு தூரமில்லை

Edited by UK_podiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் நிறைய ஆமிக்காரர் உப்பிடி காணாமல் போக .. சிங்கள சனமே மகிந்தகூட்டத்தைச் செருப்பால் அடிச்சுவிரட்டுற நாள் வெகு தூரமில்லை

இப்படியொரு காலம்தான் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு காலம்தான் வரவேண்டும்.

இல்லை தமிழ் தங்கை எமக்கு நடக்கும் துயரங்களின் பாதிப்பால் நீங்கள் அவ்வாறு சொல்கின்றீர்கள். ஒரு தாயின் பிள்ளை காணாது போதல் மனைவியின் கணவன்எங்கு என்றே தெரியாது போதல். இளம் சகோதரர்களை இளந்த துயர் இவைகளெல்லாம் நாம் அனுபவித்து பார்த்தவைகள். சிலவேளைகளில் இப்பூயில் பிறக்காது போயிருக்லாம் என்று கூட எண்ணியிருக்கிறேன். அந்த துயரங்கள் உலகில் எங்கேனும் வர கூடாது என்றே நாம் குரல் கொடுக்கவேண்டும். ஆனாலும் கேடு விதைப்பவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும் என்பது உல நியதி........ அதை எம்மால் அல்ல யாராலும் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதிக்கப்படடவர்களக்குத்தான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.