Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி கைவிட்டுப் போனாலும் சண்டை தொடரும் - புலிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் வழி செவ்வி வழங்கியுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்.. கிளிநொச்சியை தக்க வைக்க சண்டை செய்கிறோம்.. ஆனால் அது முடியாது போய் கிளிநொச்சி நகர் அரச படைகளின் கைகளில் வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து சண்டை செய்வோம்.

எமது மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் எடுத்தோம். அப்பணி முடியும் வரை நாம் ஆயுதங்களைக் கைவிடமாட்டோம்.

கிளிநொச்சி இன்றேல் நாம் இன்னொரு நகரை உருவாக்கிக் கொள்வோம். விடுதலை என்பது ஒரு நகரை மையப்படுத்தியதல்ல. எதிர்காலத்தில் எமது தேசத்தை முழுமையாக விடுவிப்போம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்காகப் போராடுவோம் என்று கூறியுள்ளார்..! அரசாங்கம் கேட்பது போல நாம் ஆயுதங்களை எமது மக்களின் பாதுகாப்பிறகு உத்தரவாதம் இல்லாத வரைக்கும் எமது தேசத்தை விடுவிக்கும் வரைக்கும் ஒப்படைக்க மாட்டோம்.. என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஆயுதங்களை புலிகள் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் கோரிக்கையை விடுதலைப்புலிகள் நிராகரித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது..!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7794880.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அண்ணை கிளிநொச்சியும் ஆமிட்ட போவ போவுதோ...? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகர் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடரும் என பிபிசிக்கு கருத்துத் தெரிவித்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ஆயுதங்களை கைவிட்டுவிட்டு பேச்சுக்களுக்கு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்துள்ளார்.

பிபிசி ஊடகத்தின் இலத்திரன் இயல் ஊடான கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே நடேசன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சியை தக்க வைக்க சண்டை செய்கிறோம். ஆனால் அது முடியாது போய் கிளிநொச்சி நகர் அரச படைகளின் கைகளில் வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து போராடுவோம்.

விடுதலை போராட்டம் என்பது ஒரு நகரத்தின் வீழ்ச்சியில் தங்கியிருக்கவில்லை. நாங்கள் எமது மக்களின் ஆதரவுடன் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் மிக அதிகமான பிரதேசங்களை, நகரங்களை மீட்டெடுப்போம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது எதிர்காலத்தில் எங்கள் தாயகத்தில் அதிகமான பிரதேசங்களை மீட்டெடுப்போம் என்று.

நாங்கள் ஆயுதங்களை கையிலெடுத்தது எமது மக்களின் பாதுகாப்பிற்காக. அந்த ஆயுதங்களை எமது மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை கைவிட முடியாது. ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுக்கள் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அண்ணை கிளிநொச்சியும் ஆமிட்ட போவ போவுதோ...? :wub:

அப்படி போனாளும் மறுபடியும் புலிகள் கைக்கு வரும் கிளிநொச்சி ..நான் நினைக்க வில்ல அவை விட்டு குடுப்பினம் என்று..

1997 ஆண்டு போனது ஆமின்ட கைக்கு பிறக்கு 1998 ஆண்டு புலிகள் கைக்கு வந்தது.. ஒயாத அலை 2 நடவடிக்கையின் போது.. அப்படி என்று தான் நினைக்கிறேன் வடிவா தெரியாது...

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு ஓயாத அலை ஒண்ட மறைக்க அவன் சத்யெஜ ராணுவ நடவடிக்கைய செய்தவன் அப்புறம் கிளநொச்சி பிடிச்சவன்..

கிட்டதட்ட உங்கட கணக்கு சரி ..கணக்கு போடுறதில நீங்கள் கில்லாடி போல...

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி என்ன எந்தப்பகுதி ஆக்கிரமப்பட்டாலும் போராட்டம் தொடரும் என்று அவர் சொன்னதை இங்கு நெடுக் உட்பட பலரும் திசைதிருப்பி விட்டார்கள் தம் கருத்துக்கு சாதகமாய்????????

:rolleyes: என்ன நடேசன் அய்யா வெருட்டுறார்.... கிளிநொச்சியை விட்டா சனம் எங்கைபோறது?

ஏதேன் ஓயாதஅலைகள் மாதிரி பிளானோ?..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.