Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்கள் - விஜேதாச ராஜபக்ச:

Featured Replies

109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்கள் - விஜேதாச ராஜபக்ச:

நான் எனது அதிகாரங்களைப் பாவிக்க அனுமதிக்கப்படாததால் நான் எனது அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தேன். செயலாளர் இல்லாத ஒரேயொரு அமைச்சராக நான் இருந்தேன். அவ்வாறானால் எவ்வாறு நான் எனது வேலைகளைச் செய்திருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ச.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நான் மட்டுமல்ல அங்கிருக்கின்ற 109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜனாதிபதியிடம் மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. எந்தவொரு அமைச்சருக்கும் நிறுவனத் தலைவரை பணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக அபிப்பிராயம் சொல்வதற்குக் கூட உரிமையில்லை. இந்த நிலைமை தான் 99 வீதமான அமைச்சர்களுக்கு நிலவுகிறது.

அங்கு நிலவுவது வண் மான் சோ தான்.

நாட்டின் அனைத்துத் துறைகளும் ஸ்தம்பித்து விட்டன. இதன்காரணமாகத் தான் நீதித்துறை தலையிட வேண்டி வந்தது. அமைச்சுக்கள் தாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தவறின. இதன் காரணமாக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டது.

இந்தச் சூழலில் பாராளுமன்றம் மூடப்பட்டாலும் மக்களுக்கு எதுவும் இழப்பு ஏற்படப் போவதில்லை. அவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருந்தால் இந்தக் கேடுகெட்ட ஹெட்ஜிங் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்க மாட்டார்கள். எந்தவொரு அரசாங்கம் அதில் கையெழுத்திட்டிருந்தாலும் அவர்கள் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர்களாகவே இருப்பார்கள். இதற்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும். அதனை ஆதரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் காரணங்கள் இருக்கின்றன.

இந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதைப் பற்றியோ அல்லது தோற்கடிக்கப்படுவதைப் பற்றியோ எனக்கு அக்கறை இல்லை. பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தேன். அதேபோல அவசரகாலச்சட்டம் நிறைவேற்றப்படும் போதெல்லாம் அதற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றேன். அதனல் இது நிறைவேற்றப்படுகிறது பற்றி நான் கவலைப்படவில்லை. நான் எனது அறிவுக்கு எதிராக செயற்பட விரும்பவில்லை. அதேவேளை இதற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் நான் தயாராக இல்லை. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதால் போருக்குப் பூரண ஆதரவளிக்கிறேன். அதேபோல் மக்கள் மீது தேவையற்ற சுமைகள் ஏற்றப்படுவதையும் எதிர்க்கிறேன் என்றார் அவர்.

இதென்ன ஒரு இளவுச்செய்தியாகிடக்கு.... இவன்ர ஒப்பாரி யாருக்கு வேணும்?

சிங்கள செய்திகளை இங்கபோட்டு நாங்கள் இன்னும் சிங்கள லங்கன்ஸ் தானெண்டு சொல்லுறிங்களோ?

நாங்கள் வேறநாடுங்கோவ்........ எங்களுக்கு விடுதலை வேணுங்கோவ்....

  • கருத்துக்கள உறவுகள்

109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்கள் - விஜேதாச ராஜபக்ச:

நான் எனது அதிகாரங்களைப் பாவிக்க அனுமதிக்கப்படாததால் நான் எனது அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தேன். செயலாளர் இல்லாத ஒரேயொரு அமைச்சராக நான் இருந்தேன். அவ்வாறானால் எவ்வாறு நான் எனது வேலைகளைச் செய்திருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ச.

இவருடைய அமைச்சிலாவது செயலாளர் இல்லை .

முன்பு அநுரா பண்டாரநாயக்கா தன்னுடைய அமைச்சில் தான் இருக்கின்றதற்கு , கதிரையே தரவில்லை என்று புலம்பியது ஞாபகம் வருகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.