Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் தாக்குதல்களை உடன் நிறுத்த வேண்டும்: நா.உ. கனகரத்தினம் வேண்டுகோள்

Featured Replies

வன்னியில் மக்கள் நாளும் பொழுதும் நேரில் காணும் வன்னி பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சட்ட ரீதியான உரிமைகளின் அடிப்படையில் இந்த கொடூரமான எறிகணை வீச்சையும், வான் தாக்குலையும் உடன் நிறுத்துமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வான்,ஷெல் தாக்குதல்களை வன்னியில் உடன் நிறுத்துங்கள் - கனகரத்தினம் எம். பி. கோரிக்கை

[10 ஜனவரி 2009, சனிக்கிழமை 12:35 மு.ப இலங்கை]

"வன்னி மக்களை நாளும் பொழுதும் நேரில் காணும் வன்னி பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சட்ட ரீதியான உரிமைகளின் அடிப்படையில் இந்த கொடூரமான ஷெல் வீச்சையும், வான் தாக்குலையும் உடன் நிறுத்துமாறு கோருகிறேன்.

- இவ்வாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் முழு விவரம் வருமாறு:-

கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்ச்சியான ஷெல் வீச்சு மற்றும் வான்தாக்குல்களும் காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் இருந்து பெருவாரியாக மக்கள் இடம்பெயர்ந்து வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களை தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.

இரவு-பகல் பாராது அவர்கள் வாழ்விடங்கள் மீது ஷெல் வீச்சுக்களும், வான்தாக்குல்களும் இடம்பெறுகின்றன. இதனால் மக்கள் குறிப்பிட்ட ஒரிடத்தில் தங்கி நில்லாது அந்த இடங்களைக் கைவிட்டு கொட்டும் மழையிலும், மோசமான காலநிலை மத்தியிலும் தமது உடைமைகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களைத்தேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த அவலமான நிகழ்வு என்பது வன்னி மக்களது வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களின் பேரவலத்தைப் பார்க்கும் போது பெரும் துன்பமும் துயரமும் ஏற்படுகின்றது. இந்தப் பேரவலத்தை ஓரளவேனும் தணிக்கக்கூடிய வகையில் இந்த கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களையும் - வான்தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டுகிறேன்.

வன்னியில் மக்கள் இன்று படுகின்ற இந்தப் பேரவலத்தை நாளும் பொழுதும் நேரில் காணும் வன்னி பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சட்ட ரீதியான உரிமைகளின் அடிப்படையில் இந்த கொடூரமான ஷெல் வீச்சையும், வான்தாக்குலையும் உடன் நிறுத்துமாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்று வன்னியில் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் தமது சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் உச்சமான மருத்துவ சேவையை முழுமையாக மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மிகக்கடுமையாக நோய் வாய்பட்டுள்ள நோயாளர்களை அம்புலன்ஸ் ஊடாக அவசர அவரமாக வவுனியாவிற்கும் அநுராதபுரத்திற்கும் எடுத்துச்செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

ஆனால், கடந்த சில நாட்களாக வன்னிக்கும் வெளிமாவட்டங்களுக்கும் இடையிலான பிரதான போக்குவரத்துச் சாலை முற்றாக மூடப்பட்டுள்ளதால், அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிவர்கள் உயிரிழக்கும் பெரும் ஆபத்து தோன்றியுள்ளது.

ஒரு மனிதன் தனக்குரிய மருத்துவ சேவையை எவ்வித தங்குதடையுமின்றிப் பெற்றுக்கொள்வது அவனது அடிப்படை உரிமையாகும்.

பிரதான பாதை மூடப்பட்டதனால் அநியாமாக உயிரிழக்கும் அபாயம் தோன்றியுள்ளது. இது முழுக்க முழுக்க மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

மனித உயிர் காக்கும் இப்பணிக்கு பாதை மூடப்பட்டுள்ளமையால் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைக்கவனத்தில் எடுத்து எதுவித தாமதமின்றி பிரதான போக்குவரத்துப் பாதையை திறந்துவிட ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளையில் இந்தப் பிரதான பாதை மூடப்பட்டுள்ளமையால் உணவு நெருக்கடியும் வன்னிப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது. உலக உணவுத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நாளில் உள்வரும் வாகனத்தொடரணிகள் வவுனியா இராணுவச் சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு காலதாமதப்படுவதால் குறிப்பிட்ட ஒரு வாரத்திற்குரிய பங்கீட்டு உணவுப்பொருட்கள் வன்னி மக்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுகின்றது.

தொழில் வாய்ப்பின்றி செய்தொழிலை இழந்து எதுவித வருமானமும் இன்றி அல்லற்ப்படும் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையான பட்டினியை எதிர்நோக்கி நிற்கின்றனர்.

ஆகவே, வாரம் தோறும் எடுத்து வரப்படும் உணவுத்தொடரணி வாகனங்கள் எந்தவிதமான இடையூம் இன்றி வன்னிக்குள் வருவதற்கு அவை துரிதமாக விநியோகிக்கப்படுவகேற்ற வகையில் எதுவித காலதாமதமுன்றி ஓமந்தை இராணுவச் சோதனைச்சாடியில் இருக்கும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் நெறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uthayan

இக்கணம் எவர் கூறினும் கேட்கும் நிலையில் மகிந்த இல்லை . செயலில்தான் காட்ட வேண்டும். தமிழராய் பிறந்ததனால் தெருப்பொறுக்கி மகிந்தவை கெஞ்சிக்கேட்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம். தலைதான் குனிந்துள்ளோம் மகிந்த தடாலென்று உன் காலில் விழமாட்டோம். எமக்கும் தேசம் வரும் அன்று நீ வந்து எம் வாசல் நிற்பாய்

அதைவிடுவம்

ஏ9 கைப்பற்றப்பட்டு விட்டது என்று அரசு கூறுகின்றது. இதில் இவர் ஓமந்தைச்சோதனைச்சாவடியை திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கின்றார். விளங்கவே இல்லையே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.