Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்

Featured Replies

இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்

நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் அகதிகள் மறுவாழ்வு மையம் செய்தித் தொடர்பாளர் பெர்னன்ட், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும், கடந்த ஒரு மாதத்தில் 24 அப்பாவி பொதுமக்கள் ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவ தாக்குதலால் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 2 லட்சத்துக்கம் அதிகமான தமிழர்கள் வீடுகளை விட்டு, காடுகளிலும், இதர இடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் இந்த அத்து மீறிலால், தமிழர்கள் இரவுகளில் தங்கள் வீடுகளில் தங்குவதற்கு அஞ்சி, மொத்தமாக ஒரு இடத்தில் கூடியுள்ளனர் என்றும், ராணுவத்தின் இத்தகைய மனித உரிமைகள் மீறல்களுக்கும் இலங்கை அரசு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்கு திரும்பி வந்த தமிழ் மக்கள் ராணுவ தாக்குதலால், மீண்டும் அகதிகளாக வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: அப்பாவி தமிழர்கள் பலியாகக் கூடாது: ஐ.நா.

நியூயார்க்: விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளர் ரான் ரெட்மான்ட் கூறுகையில், இலங்கையில் தற்போது கடும் சண்டை நடந்து வரும் பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவிகளுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அரசு அளிக்க வேண்டும்.

அப்பாவிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 24 அப்பாவிகள் சண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது கவலை தருகிறது.

கிழக்கு மாவட்டங்களான திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பிலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீண்டும் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர்.

ஆனால் தாங்கள் முன்பு போல சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இந்த மக்கள் குறை கூறுகின்றனர்.

இவ்வாறு திரும்பி வந்த 50 குடும்பங்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக மட்டக்களப்பிலிருந்து மீண்டும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மற்றவர்களும் கூட தங்களது வீடுகளில் தனித்து தூங்க முடியாமல், மொத்தமாக சேர்ந்து தங்கும் அவலம் உள்ளது.

இப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.

இதேபோல, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்த நான்கு அகதிகள் திரிகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்திலிருந்து 1500 அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இது வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையின் வடக்கில் நடந்து வரும் சண்டையை ஐ.நா. அகதிகள் ஏஜென்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றார் அவர்.

தட்ஸ்ரமிழ்.கொம்

-----------------------------------------

கிழக்கின் விடியலின் தார்ப்பரியம்.. ஐநாவுக்கு இப்பதான் விளங்கி இருக்குது. வடக்கின் வசந்தம்.. எப்ப விளங்கப் போகுதோ..??!

ஆனால் சங்கரி கும்மானுக்கோ.. சரி சந்தோசமா இருக்காமே. அவருக்கு அவோடும் கொடுக்கிறது.. இந்த ஐநா சபையின் உப அமைப்புக்கள் தானே. அதுவும் மனிதாபிமான விருதுகள்.. விருதுக்கும் ஆக்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கே. ஐநா சிந்திக்குமா..??! :D :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.