Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தப்பிவிடாமல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடும்பாதுகாப்பு!! - தினமலர் பத்திரிகை தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தப்பிவிடாமல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடும்பாதுகாப்பு!! - தினமலர் பத்திரிகை தகவல்

[13 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 10:50 மு.ப இலங்கை]

விடுதலைப் புலிகளின் கோட்டையான முல்லைத்தீவைக் கைப்பற்ற இராணுவத்தினர் வேகமாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் இந்நிலையில் புலிகள் இயக்கத்தினர் அங்கிருந்து தப்பிவிடக்கூடாது என்பதில் இலங்கைக் கடற்படையினர் மிகுந்த ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

- இவ்வாறு தமிழக நாளேடு தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், அடுத்ததாக ஆனையிறவையும், பிடித்தனர். புலிகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள இராணுவத்தினர், அங்கு ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனையிறவைக் கைப்பற்றியதால் யாழ்ப்பாணத்திற்கான நெடுஞ்சாலைப் போக்குவரத்து வசதியாகும் என்பதால், இது இராணுவத்திற்கு பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. அடுத்ததாக, முல்லைத்தீவைக் கைப்பற்றுவதும் எளிது என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். இறுதிக்கட்டத் தாக்குதலுக்கும் தயாராகிவருகின்றனர். புலிகளின் கோட்டையான முல்லைத்தீவைக் கைப்பற்ற இலங்கை இராணுவத்தினர் முன்னேறி வரும் நிலையில், புலிகள் இயக்கத்தினர் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்குத் தப்பிஒடலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், கடற்படையினர் உஷார் நிலையில் இருக்கவேண்டும் என, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்கடலோரப் பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியவைவருமாறு;-

புலித் தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் மற்ற மூத்த தலைவர்களும் நாட்டைவிட்டு தப்பிவிடலாம் என நம்புகிறோம். அதனால், கடற்படையினரை உஷார்ப்படுத்தியுள்ளோம். முல்லைத்தீவின் வடபகுதியில், கடற்படையினர் தடைஏற்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது. மிக வேகமாகச் சென்று தாக்குதல் நடத்தும் கப்பல்கள், விரைவுப்படகுகள், ரேடார்கள் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். முல்லைத்தீவை ஒட்டிய கடல் பகுதியில் 25 கடல் மைல் தொலைவிற்கு நான்கு அடுக்குப் பாதுகாப்பு வலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகை வலையத்தை தாண்டி எளிதில் தப்பமுடியாது - என்றார்.

இது குறித்து இலங்கைக் கடற்படை தகவல் தொடர்பாளர் தஸநாயக்க கூறியவை வருமாறு:-

புலித்தலைவர் பிரபாகரன், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாட்டைவிட்டுத் தப்பி ஓடலாம். அதனால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - என்றார்.

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் தப்பிப்போகமாட்டினம் அப்படி தப்பிபோறதென்றால் உங்கட பாதுகாப்புவலயங்களும் கண்காணிப்புக்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

விடுதலைப்புலிகளுக்கும் தலைவரும் கொள்கைரீதியாக மிகவும் உறுதியுடையவர்கள் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டர்கள் அது உயிரே போனாலும் சரி. உந்த படகுகளையும் கப்பலுகளையும் அங்கயும் இங்கையும் ஓடி படம் காட்டாமல் பேசாமல் குப்புறபடுத்து தூங்குங்கோ அப்பிடி தப்பிபோறதென்றால் உங்களுக்கு அறிவிக்கிறம் வந்து வழியனுப்பிவிடுங்கோ :lol: வந்திட்டினம் தூக்கி பிடிச்சுக்கொண்டு

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் , இந்துப்பத்திரிகை போன்று ஈழ விரோதச் செய்திகளை வெளியிடும் ஒரு தமிழ் நாட்டுப் பத்திரிகை. அண்மையில் சிங்களப்படையின் வான் குண்டுத்தாக்குதலில் இறந்த சிறுவர், சிறுமிகளை புலிகள் என்று பொய்ச் செய்திகளை வெளியிட்டது இப்பத்திரிகை. தினமலரை உணர்வுள்ள தமிழர்கள் புறக்கணித்து வருகிறார்கள். யாழிலிலும் தினமலர் செய்திகளினை இணைப்பதை நிறுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி தான் விகடனும்.வெளிப்படையாக பார்த்தால் தமிழ் மக்களுக்கு ஆதரவு போல தோன்றும் ஆனால் வடிவாய் வாசித்தால் விளங்கும் யாருக்கு ஆதரவாய் எழுதி இருப்பார்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.