Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்றில்லாமல் அடையாள உண்ணாவிரதங்களாக... திருமாவளவனின் உண்ணாவிரதத்தை உலகறியச் செய்யும் ஒரு நடவடிக்கையாக அமைவது சிறந்தது!

இந்த இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால் தமிழக எழுச்சி இனி தானே மெல்ல சாகும்!

  • Replies 56
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் உறுதிக் கடிதம் கொடுத்து உண்ணா விரதத்தை முடித்து (அய்யா நெடுமாறனுக்கு செய்தது போல)வைப்பார்.பிறகு கிடப்பில போட்டு விடுவார். எங்களுக்கு திருமாவளவனின் உயிர் முக்கியம்.

திருமா அண்ணா உளம் கலங்கி நிற்கின்றோம் உங்கள் செயல் கண்டு.

தாயக தமிழர்் சிலர் கூட தம் இன அழிவிற்கு துணை நிற்கையில் தமிழகத்திலிருந்து எமக்காக சாகத்துணிந்தீரே உமக்கு எப்படி நன்றி சொல்வது. வார்த்தைகள் இல்லையே

தங்கள் போராட்டத்தின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கள நண்பர்கள் சிலர் இங்கு பகன்றது போன்று போர்நிறுத்தத்தையும் தமிழர் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி தமிழர் வாழும் தேசமெங்கும் பாராளுமன்றஇ ஐ.நா அலுவலக முன்றலில் தொடர்ச்சியான சுழற்சிமுறை உண்ணாவிரதங்கள்் இஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டாலென்ன?

இவ்வருடமாவது தாயகத்திற்கு விடிவை கொண்டு வர புலம்பெயர் தமிழர்கள் யாவரும் தீவிரமாக செயற்பட வேண்டும்.

இல்லாவிட்டால் அவலங்கள் தொடர்கதையாகிவிடும்.

உண்ணாவிரதத்தை கைவிடுகிறார் திருமா ?

இலங்கையில் போரை நிறுத்தி, தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் திருமாவின் உண்ணாவிரத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தனது உண்ணாவிரத்தை கைவிட திருமா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திருமாவளவன் உண்ணாவிரதம் பற்றி முதல்வர் கருணாநிதி கூறுகையில், இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் வெளி உறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும் நலமான முடிவுக்கு இந்தியப்பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

இதேபோல் ராமதாசும், முதல் அமைச்சர் பெரிதும் நம்பியிருக்கிற இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரின் கொழும்பு பயணத்தினால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அங்கே நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் ஏற்படுமா என்பது முக்கியமாகத் தெரிந்துவிடும்.

அப்படிப் போர் நிறுத்தம் ஏற்பட வழி பிறக்காவிட்டால் அதன்பிறகு, தமிழக மக்களின் சார்பில், தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சர் என்ற முறையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து அவரிடம் தெரிவிப்போம்.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் திருமாவளவனை நேரில் சந்தித்து உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளுமாறு ராமதாஸ் வலியுறுத்த உள்ளார். அதே போல் தமிழக மூத்த அமைச்சர் ஒருவரும் (ஆற்காடு வீராசாமி அல்லது துரைமுருகன்) உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்த உள்ளார். எனவே தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று திருமா உண்ணாவிரத்தை கைவிடுவார் என தெரிகிறது.

[ஆதாரம் நக்கீரன், www.nakkheeran.in]

http://www.thayakam.net/

  • கருத்துக்கள உறவுகள்

3வது நாளாகவும் திருமாவளவன் உண்ணாவிரதம்

திகதி: 17.01.2009 // தமிழீழம் // [சோழன்]

இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 3-வது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் உடலை ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ குழுவினர் பரிசோதித்து வருகிறார்கள்.

இன்று மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவருக்கு 11 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரத்த அழுத்தம் மட்டும் குறைவாக இருந்தது. அவர் சோர்வாகக் காணப்பட்டார். இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து சினிமா இயக்குனர்கள், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்த்தி பேசி வருகிறார்கள்.

இதேவேளை இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் திருமாவளவனை நேரில் சந்தித்து உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளுமாறு ராமதாஸ் வலியுறுத்த உள்ளார். இவ்வாறு தலைவர்ள் பலர் நேரிலும், செல்பேசி ஊடாகவும் வலியுறுத்தி வரும் நிலையில், தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று திருமா உண்ணாவிரத்தை கைவிடுவார் என தெரிகிறது.

இதேவேளை, திருமாவளவின் போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஆதரவுப் போராட்டங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

Sankathi

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் உண்ணாவிரதம் : திருமாவிடம் திமுக, பாமக வேண்டுகோள்

on 17-01-2009 08:59

இலங்கை பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, பாமக ஆகிய கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

மறைமலைநகரில் இலங்கை பிரச்சனை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உள்ளார்.

3வது நாளான இன்று அவரை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று 3-வது நாளாக உண்ணா விரதம் இருந்தார். டாக்டர் கள் குழு மருத்துவ பரி சோதனை செய்தது. அதில் ரத்த அழுத்தம் மட்டும் குறைவாக இருந்தது. அவர் சோர்வாக காணப்பட்டார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று திருமாவளவனை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருமாவளவன் தன்னிசையாக இந்த உண்ணா விரத முடிவை எடுத்துள் ளார். இன்னும் சில தினங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்போது திருமாவளவன் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணா விரதத்தை கைவிட வேண் டும் என்று முதல்- அமைச்சர் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், "உண் ணாவிரதத்தை திருமாளவன் கைவிட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்து திருமாவளவன் கூறியதாவது:-

உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வேன். இன்று மாலை கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி நாளை நல்ல முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனை பரிசோதித்த 'டாக்டர்' ராமதாஸ்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 18, 2009, 11:26 [iST]

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை டாக்டர் என்ற முறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பரிசோதித்தார்.

ஸ்டெத்தாஸ்கோப் வைத்து அவரது இதயத் துடிப்பை சோதித்த அவர் பின்னர் இரத்த அழுத்ததையும் பரிசோதித்தார்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் எழுச்சித் தமிழனாக, விடிவெள்ளியாக நம் முன் காட்சி தருகிறார், தம்பி திருமாவளவன். உண்ணாவிரத முடிவிற்காக அவர் மன்னிப்பு கேட்டார். தம்பி இந்த உண்ணாவிரத முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. எனவே மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை. தினம் தினம் இலங்கை தமிழர்கள் படும் வேதனை பற்றி பேசிக்கொள்ளும் நாங்கள் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தபோது, முதல்வரை சந்திக்கலாம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி சொன்னார்.

அதைத் தொடர்ந்து நாங்கள் மூன்று பேரும் முதல்வசர் கருணாநிதியை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினோம். அப்போது என்ன என்ன சொல்ல வேண்டுமோ அத்தனையும் சொன்னோம். கெஞ்சினோம். அழுத்தம் தந்தோம். அத்தனையும் கேட்ட முதல்வர் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே கூறுங்கள் என்றார்.

இந்திய பிரதமர், சோனியா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று நாங்கள் தெரிவித்தோம். அதன்பிறகுதான், தங்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தம்பி என்னிடம் சொன்னார்.

எனவே என்னை கேட்டுத்தான் திருமாவளவன் உண்ணாவிரத முடிவை எடுத்தார். அப்போது நான் அது காலவரையுடன் கூடிய உண்ணாவிரதமாக இருக்க வேண்டும். சாகும் வரை உண்ணா நிலையாக இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டேன். நாம் அவரை இழந்துவிடக்கூடாது. தற்போது அவருடைய இரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது. சர்க்கரை அளவும் குறைவாக இருக்கிறது. அது 70க்கு கீழே வந்தால் மிக மோசமான நிலைமை ஏற்படும்.

அவரை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வதற்குத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அது என்னுடைய வேண்டுகோள். ஆனால், "இன்று போய் நாளை வாருங்கள்'' என்று தம்பி கூறிவிட்டார். இன்று மாலை கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார். மத்திய அரசின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு செல்லப் போவதில்லை.

சில நாட்கள் காத்திருக்கலாம் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தமிழர்களை அவமானப்படுத்திவிட்டது.

முதல்வர் அவர்களே, இரண்டு முறை ஆட்சியை இழந்து எதற்காக பழியை சுமந்தீர்கள்? இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுதான் தமிழர்களை காப்பாற்றும். நீங்கள் அவர்களை (மத்திய அரசு) நம்பினால் பயனில்லை. இந்த நாட்டையே உலுக்கும் முடிவு ஒன்றை நீங்கள் எடுக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக நாம் அனைவரும் கூடி என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து முதல்வரிடம் தெரிவிப்போம்.

எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனை கேட்டுக் கொள்கிறோம். உங்கள் உயிர் முக்கியமானது. தமிழ் இனத்துக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 100 ஆண்டுகள் வாழ்ந்து நீங்கள் சேவை செய்ய வேண்டும். முதல்வரின் தூதராக ஆற்காடு வீராசாமி வந்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

நானும் ஒரு காரணத்திற்காக கடந்த 1991ம் ஆண்டில் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதனுடைய பாதிப்பு இப்போதும் எனக்கு உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் பேசி நல்ல முடிவுக்கு திருமாவளவன் முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ்.

தற்ஸ்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.