Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவுக்கு எதிராக நாளை கனடிய தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

இந்தியாவுக்கு எதிராக நாளை கனடிய தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

[ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2009, 10:28 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டம் கனடிய தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை நடைபெறவுள்ளது.

தமிழினப் படுகொலைப் போரை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழினப் படுகொலையை அரங்கேற்றும் சிறிலங்காவுக்கு ஆயுத தளபாடங்கள், கதுவீகள், புலனாய்வு, பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதக்கொள்வனவு செய்ய கடன் வழங்குவது போன்றவற்றை உடனடியாக நிறுத்துமாறு கேட்கும் விண்ணப்பம் இந்திய துணைத் தூதுவரிடம் கையளிக்கப்படும்.

தமிழ்ப் படைபாளிகள் கழகம் உட்பட பல்வேறு ஊர்ச்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கனடிய தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

ரொறன்ரோவில் இந்திய துணைத் தூதரகத்துக்கு முன்பாக பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டனப் பேரணி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

http://www.puthinam.com/full.php?2b2SsMe0d...d43bVS2a033Ps3e

  • கருத்துக்கள உறவுகள்

எதிராக என்ற வார்த்தைப் பிரயோகம் சரியல்ல.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

எதிராக என்ற வார்த்தைப் பிரயோகம் சரியல்ல.

நன்றி தூயவன்..... புதினத்தின் செய்தியை அப்படியே போட்டதன் விளைவு

நானே செய்தி போட்டிருந்தால் 'லக்ஷர் அ கொய்தா' வின் ஆதரவு கேட்டு போட்டிருப்பேன்

போதும் இனி இந்தியாவை நம்பியது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக என்ற கருத்துதான் சரிவரும் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் என்னதான் செய்தாலும் உது சரிவராது பாருங்கோ. எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு சிறந்த வழி எங்களது தேசியப்போராட்டத்தை மென்மேலும் பலப்படுத்துவது தான்.

உதுக்குரிய சரியான பதில் செயலுருபம் பெறும்போதுதான் உவங்களுடைய கொட்டம் அடங்கும் பாருங்கோ.

இந்த ஆர்பாட்டங்களில் மிக அண்மையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் உட்பட பொதுமக்களின் படங்களை பெரிதாக்கி நடந்த திகதி ,எப்படி, எங்கே என்ற விபரங்கள் ஒரு பார்வையில் மக்கள் புரியும் படி எல்லோரும் பார்க்கு படி பிடியுங்கள்,, இதற்கு இந்தியாவும் காரணம் என விளக்கம் கொடுங்கள்..

இரண்டாவதாக முக்கிய விடையம் சர்வதேச பத்திரிகை நிருவனங்கள் எல்லாவற்றிற்கும் அழைப்பு விடுங்கள்.. இது மிக மிக முக்கியம்.. உங்கள் நாட்டு அரசியல் செல்வாக்கு, வாக்கு பலத்தைப்பயன்படுத்தி அரசியல் வாதிகள் தொண்டு நிருவனங்கள் மூலமும் சர்வதேச செய்தி நிருவனங்களை அணுகலாம்.. பலஸ்தீனமக்களின் போரட்டமும் எமது ஏறத்தாழ ஒற்றுமையுள்ளது.. எப்படி மற்றவர்கள் செய்யும் போது உலக நாடுகளுக்கு செய்தி போகிறதோ அந்த நிலைமை எம்மக்களின் போரட்டங்களிலும் ஏற்படவேண்டும்.. கூடினோம் கலைந்தோம் என்பதில் என்ன பிரஜோசனம் எதாவது பலன் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும்.. மேல் சொன்ன விடையங்களை சிந்தித்து செயல் படுத்துங்கள்.. எங்கும் எப்பவும் பொருந்தும் மேற்கூறிய செயல்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

350,000 பேர்ல எத்தினை பேர் திங்கட்கிழமை காலை நடக்கிற இந்த போராட்டத்தில கலந்து கொள்ளுகினம் பார்ப்பம்... சும்மா வாய் கிழிய ரேடியோவில வந்து கதைக்கிற மக்கள் வந்தாலே போதும்.....சும்மா நாங்கல் ஒரு 100 பேர் போய் நிண்டு கத்திரதிலை வேலை இல்லை... குறஞ்சது ஒரு 1000 பேர் எண்டாலும் வந்தா தான் அவங்கள் வெளியில வந்தாவது எட்டி பாப்பான்கள்... புளோர் வீதியில மக்கள் நடமாட்டம் அதிகமாய் இருக்கம் என்டாதால வேற்றின மக்களின் கவனகளையும் ஈர்க்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு...தயவுசெய்து கொஞ்சம் பேர் எண்டாலும் வாங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் பாருங்கோ, யாழிலை வந்து வெட்டிறன், கொத்திறன் என்று எழுதிக்கிழிக்கத் தானங்கோ என்னாலை முடியும்.

இலங்கைக்கு ராணுவ உதவியா? இந்தியா மறுப்பு

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவி செய்துவருவதாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று சென்னையில் ஈழப்பிரச்சனைக்காக நான்கு நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட தொல்.திருமாவளவன், கிளிநொச்சியை பிடிக்க முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தார்கள். வேறு வழியின்றி சிங்களப்படை பின்வாங்கியது.

அந்த சமயத்தில் இந்திய அரசுதான் சிங்களப்படைக்கு ராணுவ உதவிகளை கொடுத்து கிளிநொச்சியை கைப்பற்ற வைத்தது என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் இக்கருத்துக்களை மறுத்துள்ளார் இந்திய ராணுவ அமைச்சர்ஏ.கே அந்தோணி. அவர், ``இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி அளிப்பதாக கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை.

இலங்கையில் சில மனிதநேய பணிகளில் மட்டுமே இந்தியா ஈடுபட்டு வருகிறது. ஒரு உறுதியான அரசியல் தீர்வு மூலமாகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

இது முற்றிலும் மகளிர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக என்ற கருத்துதான் சரிவரும் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் என்னதான் செய்தாலும் உது சரிவராது பாருங்கோ. எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு சிறந்த வழி எங்களது தேசியப்போராட்டத்தை மென்மேலும் பலப்படுத்துவது தான்.

உதுக்குரிய சரியான பதில் செயலுருபம் பெறும்போதுதான் உவங்களுடைய கொட்டம் அடங்கும் பாருங்கோ.

இதுவே என் கருத்தும்..! கனேடிய உறவுகளின் முயற்சிகளும் பலிக்கட்டும்..!!

எமது பிரதிநிதிகளின் கரங்களைப் பலப்படுத்தவேண்டியது கட்டாயம். யாரும் வருவார்கள் என்று எதிர்பாராமல் நாமே முயன்று வலுப்படுத்துவோம், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே..! முயன்றால் எல்லாமே சாத்தியம்.

இது முற்றிலும் மகளிர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வா?

மகளிர் மட்டுமா? யாரு சொன்னா?

ஆதியே அங்க போறதுக்கு ஆயத்தம்(குளிருக்கு ஏற்றமாதிரி) செய்யிறன்.

மகளிர் மட்டுமெண்டு ஏதும் அறிக்கை விட்டவையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது மக்கள் கலந்துகொள்ள முடிந்தவர்கள் எல்லோரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

உவர் ஆதியும் வாராராம் கவனம் (வாழைப்பழத்தை பக்கத்தில வைத்திடாதேங்கோ :unsure: )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.