Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்.சிறுத்தைகள் மோதல்

Featured Replies

காங்.சிறுத்தைகள் மோதல்

.

Monday, 19 January, 2009 01:38 PM

.

பாண்டிச்சேரி, ஜன.19: புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச்சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இருதரப்பை யும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

.

கிழக்கு கடற்கரை சாலையில் தட்டாஞ்சாவடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உள்ளது.

ராஜீவ் காந்தி படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்டு அந்த படம் ராஜீவ் காந்தி சிலையின் கையில் இன்று காலை தொங்க விடப்பட்டி ருப்பதை பார்த்து காங்கிரசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னாள் பிரதமரை அவமதிக்கும் செயலை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று அமைச்சர் கந்தசாமி கூறினார். ராஜீவ் காந்தியை அவமதித்தவர்களை அரசு சும்மா விடாது என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை 3 மணி நேரம் மறியல் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து கடலூர், விழுப்புரம் சாலையில் சுதேசி மில் அருகே, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே கவுன்சிலர் ராஜன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது விடுதலைச் சிறுத்தைகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரசார் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் பான்டெக் ஷோரூம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

காங்கிரசாரும், விடுதலைச் சிறுத்தைகளும் அருகருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறும் சிலர், காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தடியடி பிரயோகம் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல் அஜீசின் கை எலும்பு உடைந்தது. அகிலன் என்பவரின் மூக்கு உடைக்கப்பட்டது. ஓம் சக்தி என்ற காங்கிரஸ் தொண்டருக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மூவர் உட்பட 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மோதல் சம்பவம் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த பாவணன், கன்னியப்பன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மோதல் நடந்த இடத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் எச்சரித்தார். இதனிடையே காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ரஹ்மான் என்பவர் வீடு அடித்து நொறுக்கி சூறையாடப் பட்டுள்ளது.

thanks

maalaisudar

  • கருத்துக்கள உறவுகள்

அவனைச்சீண்டுவானேன்

கவலைப்படுவானேன்

ஆரம்பமா????????

அடுத்தது ஓடி ஒழிப்பு

அடுத்தது கரந்தடி..............????

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான வேலைகளில் ஈடுபட்டுப் பிரச்சனையைத் திசைதிருப்ப முயலுறது உளவு அமைப்புக்கள்தானாமெண்டு ஒரு கதை அடிபடுகுது.

காங்கிரஸ் ஆட்களே இதைச் செய்துபோட்டுப் பழியை விடுதலைச் சிறுத்தைகள் மேலபோட்டு அவர்களைக் கைது செய்யவைக்கும் நாசவேலையில ஈடுபடுறாங்களாமெண்டும் சொல்லினம்.

பழி தீர்க்க மனிசன் எதையெல்லாம் செய்யிறான் பாருங்கோ.

முதலில தங்கபாலுவைப் பிடிச்சு அடைக்கவேணும். எல்லாம் அவருடைய பிளான்தானாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.