Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதியான மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு

Featured Replies

Children-Choirs-Join-a-Candle-Light-Procession-for-the-Worlds-Peace-Photographic-Print-C12561863.jpeg

புலம் பெயர் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு

கொடிகளையும் பதாதைகளையும் தற்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டு

மெழுகுவர்த்திகளோடு ஓரிடத்தில் இருந்து

அருகேயுள்ள

ஒரு குறிப்பிட்ட தேவாலயங்களை நோக்கிச் செல்லுங்கள்.

தாயகத்தில் அல்லலுறும் மக்கள் நிலையை தெளிவுபடுத்தி

அந்த ஆலய பெரியோரிடம் எழுத்து மூலம் எம்மவர் அவலங்களை

எழுத்துருவில் ஒப்படையுங்கள்.

ஊடகங்களின் கைகளில் கூட

எழுத்து பிரதிகளை மட்டும் கொடுங்கள்.

பேசாதீர்கள்.

அதைவைத்து அவர்களையே பேச வையுங்கள்.

தயவு செய்து பதாதைகளையும் கொடிகளையும் தவிருங்கள்.

அப்படிச் செல்லும் போது பேச்சுகளையும்

சிரிப்புகளையும் தவிருங்கள்.

இவற்றை ஒழுங்கு செய்வோர்

பங்கு கொள்ள கலந்து கொள்ள வரும் தமிழ் மக்களுக்கு (நம்மவருக்கு) தெளிவு படுத்துங்கள்.

இது நிச்சயம் பலன் தரும்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆன்மீக தலங்களோடு தொடர்பு கொண்டு பேசுங்கள்.

அவர்கள் நிச்சயம் உதவுவார்கள்.

இதுகுறித்து

கருத்துகளை முன்வைக்கலாம்.

தயவு செய்து தேவையற்ற கேலிக்குரியவற்றை எழுதவேண்டாம்

prayer_candles.jpg

நன்றி

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.மெழுகுவர்த்திகளோடு தேவாலயங்களுக்கு செல்வதாயின் அந்த நாள் ஏதாவது முக்கிய நாளாக இருக்க வேண்டும்.அவர்களிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்.எதையும் நீங்கள் சொல்வது மாதிரி திட்டம் இட்டு செய்ய வேண்டும்.எடுத்தேன் கவுத்தேன் என்று செய்ய முடியாது.

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.மெழுகுவர்த்திகளோடு தேவாலயங்களுக்கு செல்வதாயின் அந்த நாள் ஏதாவது முக்கிய நாளாக இருக்க வேண்டும்.அவர்களிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்.எதையும் நீங்கள் சொல்வது மாதிரி திட்டம் இட்டு செய்ய வேண்டும்.எடுத்தேன் கவுத்தேன் என்று செய்ய முடியாது.

ஐரோப்பியர்கள் எம்மைப் போன்றவர்கள் அல்ல

அவர்கள் சிறுவிடயத்தையும் உன்னிப்பாக

உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லக் கூடியவர்கள்.

இதற்கான அனுமதியைப் பெற எந்த அரச அலுவலங்களிலும் அனுமதி தேட வேண்டியதில்லை.

இதற்கான அனுமதியை அந்த ஆலய மதகுருவை அணுகி பேசிலாலே

அவர்கள் அனைத்தையும் செய்து தருவார்கள்.

அல்லது அதற்கான வழியை காட்டுவார்கள்.

கத்தோலிக்க - புரட்டஸ்டான்து - மற்றும் ஏனைய ஆலயங்களையும் நாடலாம்.

கரித்தாஸ் போன்ற ( கத்தோலிக்க) அமைப்புகள்

இன்றும் வன்னியில்் மக்களோடு பணிபுரிகின்றன.

அவர்கள் மட்டுமே அரசு சொல்லியும் திரும்பி வராமல் தங்கி நிற்கிறது.

மெழுகுவர்த்தியோடு ஆலயம் செல்ல

முக்கிய நாட்கள் தேவையில்லை.

எப்போதும் திறந்தே இருக்கிறது.

பிரான்சிலும் - ஜெர்மனியிலும் - சுவிஸிலும்

பல முக்கிய வழிபாட்டுத்தளங்களுக்கு

தினமும் உலகெங்குமிருந்து பக்த்தர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.

உதாரணமாக

பிரான்சிலுள்ள சென் லூர்து ஆலயம்

சுவிஸிலுள்ள மரியா ஸ்டைன் மற்றும் ஐயின்சீடன்

போன்றவை குறித்து சொல்லாம்.

இதுபோன்ற முக்கிய ஆலயங்கள் உலகெங்கும் இருக்கும்.

இதை விட சிறு நகரங்கள்

கிராமங்களில் உள்ள ஆலங்களில்

ஞாயிறு வழிபாட்டு தினங்களில் இதை செய்யலாம்.

அவை நிச்சயம் பெருநகர்களை விட பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்படியான இடங்களில் கவனயீர்ப்பை செய்யும் போது

விகாரமான படங்களை போஸ்டர்களில் தவிர்ப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர்கள் இவற்றை பார்க்க விரும்புவதில்லை.

அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளிலே எழுத்துருவாக முன்வைக்கலாம்.

சில படங்களை மட்டும் மறைத்து கவனமாக அச்சு பதித்து

தேவையானவர்களுக்கு கேட்டு கொடுக்கவேண்டும்.

அல்லது

நமது அடிப்படை தேவையே பாழாக்கிவிடும்.

ஐரோப்பியர்கள் பெரும்பாலும்

இறந்தவர்களை வீடுகளில் வைத்து பார்ப்பவர்கள் அல்ல.

மரணித்தவர்களின் உடலங்களை மலர் சாலைகளில் வைத்து

அங்கு அல்லது தகனம் அல்லது அடக்கம் செய்யும்

இடங்களிலேயே போய் பார்த்து இறுதி மரியாதை செய்கிறார்கள்.

இந்த வழிமுறை தெரியாமல்

நாம் செய்யும் அட்டைகளினாலான போஸ்டர் விளம்பரங்கள்

குறித்து பல ஐரோப்பியர் குறை கூறி பேசியதை அறிவேன்.

இவை குறித்த கவனம் தேவை.

அடுத்து சிறு குழந்தைகள் கைகளில் அவற்றைக் கொடுக்காமல்

பெரியோர் கூட அதை வைத்திருப்பதில்லை.

இவை சிறுவர்களை நாம் தவறாக வழி நடத்துகிறோம் எனும்

கேள்வியையே அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது?

இவை தவிர்க்கப்பட வேண்டும்.

கனடாவில் நடந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில்

இளையோர் காதில் வோக்மெனை வைத்துக் கேட்டுக் கொண்டு

சீட்டாடிக் கொண்டிருந்ததை பார்த்து என் நண்பன்

வேதனைப்பட்டு பேசினான்.

இவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் சிலவற்றை செய்வதாக?

இவை கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.

கூட்டம் கூட்டி பரப்புரை செய்வதை விட

கொஞ்சம் பேர் உருப்படியாக

மெழுகு வர்த்தகளை கையேந்தி சென்று

கோயில் வாசலில் வைத்தாலே

பார்ப்போர் ஏன் என்று கேட்பார்கள்?

அவர்களுக்கு

அவர்களது மொழியில் விரிவாக எழுதி ஒரு சிறு

துண்டு பிரசுரத்தை கையளித்து

எமது மக்கள்் உயிர்களை காக்க ஏதாவது செய்யுங்கள் என்று வேண்டலாம்.

இதை ஏன் யோசித்தேன் என்றால்

வாகன விபத்துகள் நடந்து யாராவது இறந்த இடங்களில்

ஒருசில உறவுகள் நண்பர்கள் மெழுகுவர்த்தி மற்றும் பூக்கொத்துகள் போன்றவற்றை

வைத்து மெளனமாக அஞ்சலி செலுத்துவதை கண்ணுற்றிருக்கிறேன்.

அதன்பின் முகம் தெரியாத பலர் அதை தொடர்வதை கண்டுள்ளேன்.

இதை ஐரோப்பா வாழ் நம் மக்கள் கண்டே இருப்பார்கள்?

எனவே இதை வாசிக்கும் போது

எள்ளி நகையாடவே தோன்றும்

ஆனால் இதன் தாக்கம் உண்மையில் பலம் வாய்ந்தது.

இங்கே போராளிகள் குறித்த எந்த தகவலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் இன்னல்களே முக்கியப்படுத்தப்படல் வேண்டும்.

இதுகுறித்து பலர் கருத்துகளில் இருந்து ஒன்றை இங்கே இணைக்கிறேன்.

ஒரு பொது அமைப்பு கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை செய்வதாக சொல்லிவிட்டு

அங்கே பலரும் விடுதலைப்புலிகளது கொடிகளை ஏந்தி நிற்கிறார்கள்.

இங்கே பொது அமைப்பு எனும் பெயர் மழுங்கி

இது விடுதலைப்புலிகளது செயல் என பிரச்சாரப்படுத்தப்படுகிறது.

அதுபோலவே

விடுதலைப் புலிகளது முக்கியமானவர்களை மேடையில் ஏற்றி

அனைத்தையும் நாசமாக்கியதை காண முடிகிறது.

இவற்றில் அவதானம் தேவை.

அப்படியில்லாத எந்த ஒரு விழப்புணர்வோ

அல்லது

கவனயீர்ப்போ

மக்களுக்காக இந்த கவனயீர்ப்பு அல்ல என்பதை அடையாளப்படுத்திவிடும்.

விடுப்பு பார்க்க வரும் 4 ஆயிரத்தை விட

மன உணர்வோடு இணையும் 4 பேர் செயல் நிச்சயம்

உலக கவனத்தை ஈர்க்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள்காண்பதறிவு.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

நம் தமிழ் உறவுகளுக்காக, எவ்வகையான அகிம்சைப் போராட்டமும் வரவேற்கத்தக்கது.

என்.வை.பென்மன்

சுவஸ் உள்ள மரியா ஸரைன் அல்லது ஜயின்சீட்ன் போன்ற தேவாலைங்களிற்கு இதுபோன்று மெழுகுவர்த்தி உர்வலம் பண்ணுவதால் எமக்கு பயன் இல்லை அவர்களுக்கு மட்டும் தான். அதன் பெறு பெறுகள் அவ்வாலையத்தின் மாதந்த பத்ரிகையில் இப்படி நடந்தது என்று எழுதி அவர்கள் இலாபம் தேடுவார்கள்....

வேணம் என்றால் நீங்கள் சொன்;ன மெழுகுவர்த்தி உர்வலத்லை நாட்டின் ஓரு மையப்பகுதிளை நோக்கி செய்யலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழிமுறை தெரியாமல்

நாம் செய்யும் அட்டைகளினாலான போஸ்டர் விளம்பரங்கள்

குறித்து பல ஐரோப்பியர் குறை கூறி பேசியதை அறிவேன்.

இவை குறித்த கவனம் தேவை.

அடுத்து சிறு குழந்தைகள் கைகளில் அவற்றைக் கொடுக்காமல்

பெரியோர் கூட அதை வைத்திருப்பதில்லை.

இவை சிறுவர்களை நாம் தவறாக வழி நடத்துகிறோம் எனும்

கேள்வியையே அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது?

இதை நானும் அறிந்திருக்கிறேன். படித்த காலங்களில் யூனியில் கவனவீர்ப்பு க்காக இப்படியான போஸ்டர்களை வைக்க வெள்ளையின மானவர்கள் மற்ற பக்கம் பார்த்து சென்றதையும் அவ்விடத்தை விலத்தி சென்றதையும் பார்திருக்கிறேன். எனது அலுவலக நண்பருடன் இப்படியெல்லாம்நடக்குதென கதைக்கும் போது, அவர் படங்களை பார்க்க விரும்புகிறார என கேட்டேன். அதற்கு தன்னால் அவற்றை சகித்து பார்க்க முடியாதென பார்க்க மறுத்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் நிலைமையை கேட்டு அறிவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.