Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்காக என் அண்ணன் இறந்ததால் ஆறுதல் அடைகிறேன்: "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் தங்கை

Featured Replies

எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தாலும் எனது அண்ணன் தமிழர்களுக்காக உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன் என்று "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் தங்கை தமிழரசி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் மக்காராம் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வருபவர் தமிழரசி (வயது 24). இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களுடன்தான், தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமார் வசித்து வந்தார்.

அவர் ஏழ்மையின் காரணமாக சிறிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தனது அண்ணன் மறைவை நினைத்து தாங்க முடியாமல் அழுது புலம்பினார். கண்ணீர் மல்க அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொழுவநல்லூர் என்ற கிராமம் ஆகும். அங்கிருந்து 10 வருடங்களுக்கு முன்பு பிழைப்புத்தேடி சென்னை வந்தோம்.

எனது தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அதில் உள்ள வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எனது தாயார் உடல்நலமின்றி இறந்துவிட்டார். அதுமட்டுமல்ல எனது மற்றொரு சகோதரர் வசந்தகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் விபத்தில் இறந்துவிட்டார். தாயையும் இழந்து சகோதரரையும் இழந்து நாங்கள் வாடிக்கொண்டிருந்தோம்.

எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. என்னுடன்தான் எனது அண்ணன் முத்துக்குமார் தங்கியிருந்தான். சினிமா இயக்குநராக வேண்டும் என்று விரும்பினான். உதவி இயக்குனராகவும் ஒரு நாடகத்திற்கு பணியாற்றினான்.

அதன்பிறகு, ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தான். நாளாந்தம் காலையில் சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவான். எல்லோரிடமும் அன்பாக இருப்பான். எனக்கு அம்மா இல்லாத குறையை எனது அண்ணன்தான் போக்கினான்.

சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 5:00 மணிக்கே எழுந்துசென்று விட்டான். மதியம்தான் எனது அண்ணனின் படம் கேட்டு ஒருவர் வந்தார். அதன்பிறகுதான் அவன் தீக்குளித்த விடயம் தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கை கால் நடுங்கியது.

அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன். எப்படியும் பிழைத்துக்கொள்வான் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவன் இறந்த செய்தி கேட்டு துடித்தேன். அவன் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்றே தான் பேசிக்கொண்டிருப்பான். அவன் சிந்தனை கடல் போல பெரியது. எதையுமே சிறிய கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான். அவனை இழந்தது எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்ததை நினைத்து சற்று ஆறுதல் அடைகிறேன் என்றார் அவர்.

புதினம்

முத்துக்குமாருக்கு தமிழக அரசு நிதி - நிராகரித்தது குடும்பம்

சென்னை: தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். பணம், பொருள் கொடுத்து தங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என முத்துக்குமாரின் தங்கை கணவர் கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார்.

இந்த உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்து விட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தான் முத்துக்குமார் உயிரை விட்டார். அதற்காக எங்களுடைய குடும்பம் சந்தோஷம் அடைகிறது.

பணம் - பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தனி நபருடைய உணர்வு தான் இது, அரசியல் சம்பந்தப்பட்டதல்ல.

தீக்கிரையாகியதை தொடர்ந்து இப்போது வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில், தமிழ் உணர்வாளர்களும் நெருங்கிய உறவினர்களும் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

http://thatstamil.oneindia.in/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாமானியத் தமிழனுக்குள் எழுந்திருக்கும்.. இன உணர்வின்.. உன்னத வெளிப்பாட்டை... இவர்களின் வார்த்தைகள் காட்டுகின்றன.

ஏழ்மையைக் காட்டி.. இன உணர்வை... மழுங்கடிக்க நினைக்கும்.. அரசியல் குள்ள நரிகளை விட.. தமிழகத்தின் சாமானிய தமிழன் கொண்டுள்ள தொப்புள் கொடி உறவு.. மிகப் பெரியது.. அளவிட முடியாதது..! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.