Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்த்தை அமெரிக்கா நீக்கும் - ஒபமாவுக்கான தமிழர்கள் அமைப்பு நம்பிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் ஒரே காவலர்களாக விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட - உண்மையை மறைத்து - கொழும்பு அரசின் போக்கிலேயே பெருமளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.இது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஏனெனில், கொழும்பு அரசின் அரச பயங்கரவாதமே, உண்மையில் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளை உருவாக்கியிருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் - அதிகாரங்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தினால் பறித்தெடுக்கப்பட்டதுடன், அதனை தமிழர்களுடன் பகிர்வதற்கு அவர்கள் முன்வரவில்லை.தமது அரசியல் உரிமைகளைப் பெற அமைதியான - சட்டபூர்வமான - வழிகளில் தமிழ் மக்களாலும், அவர்களது தலைவர்களாலும் முப்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவையும் சிறிலங்கா அரசு முறியடித்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் - பிரித்தானியா சிறிலங்காவை விட்டு சென்ற 1948 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. அன்று முதல் - தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். தமிழருக்கு எதிரான நாடு தழுவிய இன வன்முறைகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் வேலை வாய்ப்புக்களும், கல்வியும் தடுக்கப்பட்டது.பௌத்த சமயம் நாட்டின் சமயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இந்து சமயமும், கிறிஸ்த்தவ சமயமும் புறக்கணிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பிறப்பிற்கு முன்னரே இவை எல்லாம் நடைபெற்றுள்ளன.சிறிலங்கா அரசின் இந்த தமிழின ஓடுக்குமுறைகளும், வன்முறைகளுமே விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியிருந்தது. விடுதலைப் புலிகளின் பிறப்பு தவிர்க்க முடியாததாக அமைந்தது.தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஆயுத வன்முறைகள் முடிவற்றவையாகத் தொடர்கின்றன.

தமிழ் மக்களின் மீதான மெதுவான இந்த இனச் சுத்திகரிப்பாக இது நடைபெறுகின்றது. சிறிலங்காவின் அண்மைக்கால இராணுவ வெற்றிகளை நோக்கும் போது - இறுதியாக அரசு விடுதலைப் புலிகளை முறியடித்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.எமது பிரச்சனை இது தான்: விடுதலைப் புலிகள் இயக்கம் தான் - திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு.

விடுதலைப் புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டால், தாம் முற்றாக அழிவுக்கு உட்படலாம் என தமிழ் மக்கள் இப்போது அஞ்சுகின்றனர்.பெரும் அழிவிலிருந்து தமிழ் மக்களைக் காக்க வேண்டும் எனில், விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமாவைத்தான் அனைவரும் நம்பியிருக்கின்றோம் என்பதையும், ஈழத்தின் பிரச்சனை சின்னப்பிரச்சனை அல்ல நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் பல நூறுமக்களை சிங்களம் விழுங்கிக்கொண்டிருகின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும் அப்போதுதான் செயல் துரிதப்படுத்தப்படும்.

ஒரே ஒரு பயம் இருக்கிறது. இந்தியா இதுக்கும் தங்கள் குள்ளநரி வேலையைக்காட்டிவிடுமோ என்று!

ஒபாமாவையோ அவரது அரசியலையோ ஒரேயடியக நம்பமுடியாது, மற்றயது நிச்சயம் இந்தியா அவர்களின் முடிவில் ஆத்க்கம் செலுத்தும் செலுத்த நிறையவே வாய்ப்புக்கள் உள்ளது.

எனவே வீணான நம்பிக்கையை வளர்த்து மின் வேதனைப்படவேண்டாம், நாம் எதை செய்தால் நல்லமோ அதைச் செய்வோம்.

எங்களை நாங்களே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றையது இரண்டாவது பட்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பால்ய நண்பராக அமெரிக்கா மாறியிருப்பதால் அமெரிக்கா தனியாக முடிவு எடுக்கும் என்று சொல்ல முடியாது. காங்கிரஸ் ஆட்சி மாறி ஒரு வேளை பி.ஜே.பி ஆட்சிய பிடித்தால் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எது எப்படி இருப்பினும் நாம் மிகப்பெரிய பலமாக நிருபிக்கும் போது தான் எதுவும் சாத்தியமாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஈழத்தில் தமிழ் மக்க்ள் மீது போரை ஏவி விட்டிருக்கும் இந்திய ஆழும் காங்கிரஸுக்கு குறைந்த பட்ச எதிர்ப்பான கூட்டணி ஆதரவை தமிழ் நாட்டுக்கட்சிகள் விலத்த வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.1989 பின் இந்தியாவில் எந்தக்கட்சிகளும் பிராந்திய கட்சிகளின் ஆதரவின்றி தனித்து ஆட்சி பீடம் ஏற முடியாது என்ற நிலையில் உள்ளது இதனை தமிழகக்கட்சிகள் ஆயுதமாகப்பயன்படுத்த வேண்டும்.

தமிழகக்கட்சிகளுக்கு!

தமிழர்களின் அடிப்படை உரிமகளை( நீர்,மீனவர்களின் வாழ்வாதார உரிமை,ஈழத்தமிழரின் வாழ்வாதர உரிமை)பேணும் கட்சிகளுக்கே உங்கள் ஆதரவை வழங்குங்கள்,கட்சி நோக்கொடு சிந்திக்காமல் பரந்த அளவில் மக்கள் நலன்களை சிந்தியுங்கள்!கூட்டணிக்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கமாட்டேன் என்று கூறி அரசியல் ரீதியாக கட்சிக்கு பாதகம் ஏற்படக்கூடாது என்று நினைப்பதால்தான் தமிழினம் அழிவதை அது தாய் தமிழகத்தில் என்றாலும் சரி ஈழத்தில் என்றாலும் சரி தமிழரால் தடுக்க முடியவிலை.

ஒன்றினைந்த சக்தியை காட்டினால் மட்டுமே தமிழர்களை காப்பாற்ற முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.