Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இன அழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இன அழிப்பு

பொது மக்களின் பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவத்தினரின் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர்.

தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துகொண்டிருகிறது.

விலங்கினங்கள் அழிக்கபடுவதை தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவை தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

இலங்கையில் என்றுமில்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசிய கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காக சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது.

பிணம் தின்னும் கழுகை போல சிங்கள தேசம் உருவெடுத்துள்ளது கவலைகிடமானது.

தமிழன் யாருக்கும் எதிரி அல்ல. தமிழன் கேட்பது எல்லாமே நிம்மதியான வாழ்வு, சிங்களவர்களை போல தமிழர்களும் சம உரிமையுடன் வாழ ஒரு தேசம்.

சிங்களத்தின் இன துவேசமும் இன ஒடுக்குமுறையும் இன அழிப்பும், இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஆரம்பமனவை. சிங்கள குழந்தைகள் கூட தமிழனை கண்டால் கல்லால் அடிக்கும் காலம் இப்போது. அந்த அளவிற்க்கு தமிழனை பற்றிய இன துவேசத்தை பிஞ்சு குழந்தைகளுக்கும் ஊட்டி விட்டுள்ளனர் சிங்கள அரச நிருவாகம்.

தமிழனை காப்பாற்ற ஒரே ஒருவர் தான் கடைசிவரைக்கும் போராடுகிறார். அவருக்கும் தீவிரவாதி பட்டம்.

அமெரிக்கா என்ற உலக வல்லரசு ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்து ஒசாமாவை பிடிக்க. ஒசாமா என்ன செய்தார்? அவருடைய மக்களுக்காக குரல் கொடுத்தார். அவரை பிடிக்க சென்ற அமெரிக்கா இராணுவம் அங்குள்ள மக்களை கொன்று குவித்ததை எவ்வாறு நியாயபடுதியதோ அதைவிட இன்னும் அழகாக இலங்கை அரசு தமிழ் இன ஒழிப்பை நியாயபடுதுகிறது.

தமிழனுக்கு உதவ தமிழனை தவிர வேறு எவரும் இல்லை.

கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் தமிழின் விடுதலை போராட்டம் தொடரும்..

http://www.tamilsweet.com/Tamils/page.php?67

தமிழர்கள்மீதான இனப்படுகொலையின் ஒளிப்பதிவுகள்

http://worldtv.com/genocideinsrilanka/ :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின்அவலங்கள் தொடர்பான காட்சிப்பதிவுகள்

http://tamilsweet.com/livetamil/index.php?cat=26

பிணம் தின்னும் கழுகை போல சிங்கள தேசம் உருவெடுத்துள்ளது கவலைகிடமானது.

தமிழன் யாருக்கும் எதிரி அல்ல. தமிழன் கேட்பது எல்லாமே நிம்மதியான வாழ்வு, சிங்களவர்களை போல தமிழர்களும் சம உரிமையுடன் வாழ ஒரு தேசம்.

சிங்களத்தின் இன துவேசமும் இன ஒடுக்குமுறையும் இன அழிப்பும், இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஆரம்பமனவை. சிங்கள குழந்தைகள் கூட தமிழனை கண்டால் கல்லால் அடிக்கும் காலம் இப்போது. அந்த அளவிற்க்கு தமிழனை பற்றிய இன துவேசத்தை பிஞ்சு குழந்தைகளுக்கும் ஊட்டி விட்டுள்ளனர் சிங்கள அரச நிருவாகம்.

இதை சர்வதேசம் உணரத்தவறவில்லை என்றில்லை, சர்வதேசம் உணர்ந்தாலும் அதனை சிங்கள இனவெறியரசு தனது ஆழமான பரப்புரை மூலம் உடைத்தெறிந்துள்ளது என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. அதனாலேயே நாம் இன்றுவரை போராட்டங்களை தொடர்ந்தவண்ணமுள்ளோம். சர்வதேச மட்டத்தில் எழுந்த இத் தமிழர் எழுச்சித்தீ அணைய எத்தணிக்காது நாம் கரங்கொடுத்து தூக்கிவிடவேண்டும். சிங்கள அரசின் பொய்ப்பிரச்சாரமும் அதன் முகமூடியும் கிழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. ஆனாலும் அது உயர் இராஜ தந்திரிகள் மட்டத்தில் தனது பிரச்சார நடவடிக்கையை தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதனை உடைத்தெறியவேண்டுமானால் தங்களுக்கு தெரிந்த இராணுவ, அரசில்ரீதியில் முக்கியமானவர்களை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அவர்கள் மொழியில் விளக்கங்கள் கொடுக்கவேண்டும் அத்தோடு நம் இன அழிப்பு சம்பந்தமான வெளியாகிய புத்தகங்களையும் விபரங்களையும் தொகுத்து வழங்கி அவர்களுக்கு ஓர் புரிந்துணர்வை நம் மக்கள் மீது ஏற்படுத்தினாலெ போதுமானது. நம் போராட்டங்களும், நம் உண்ணாவிரதங்களும் கூட சிங்கள அரசினால் இராஜதந்திரிகள் மட்டத்திலான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் துடைத்தெறியப்பட்டு விடுகின்றன. அவ்வாறு அவர்களின் மனங்களை வெல்வதன் மூலம் நம் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எழுச்சிகளும் அவர்கள் தங்களுக்கான ஓர் இடையூறுகள், தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை நிம்மதியாக செய்யமுடியாத ஓர் சங்கட நிலையாகவே கருதிக்கொள்வார்களே ஒழிய தமிழரின் உண்மையான போராட்டத்தை அவர்கள் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. இனியும் தாமதிக்காது நம் போராட்டங்களை சிங்கள அரசு செய்வதனைப்போல உயர் மட்டங்களில் வெளிப்படுத்தத் தயங்காது நாமும் சந்திக்கும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் இவ்வழியில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்போம். வெளிநாட்டவர்களை சந்திக்கும் சந்தர்ப்பத்தில் நம் போராட்டங்கள் சம்பந்தமானதும், இன அழிப்பு சம்பந்தமானதுமான புத்தகங்களையோ தொகுப்புக்களையோ வழங்கி அவர்கள் ஓய்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எம்மைப்பற்றி மேலதிகமாக அறிய ஆவன செய்யவோமாக. அத்தோடு இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றினை கவனத்திற் கொள்ளவேண்டியது பொதுவாக வெளிநாட்டினர் இரத்தங்களையோ கொலைகளையோ, பார்ப்பதற்கு வெறுக்கின்றனர் என்பதனை. எனவே அவ்வாறான வெளியீடுகளைத் தவிர்த்துக்கொள்வதைக் கவனத்தில் எடுத்து செயற்படுவோம். முடியுமானவரை அரசியல் ரீதியில் பலமானவர்களை முட்டி மோதுவோம். அவர்கள் மூலமும் நம் கருத்துக்களை எடுத்துரைப்போம்.

Edited by யாழ்நிலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.