Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

Featured Replies

பிற்பகல் 4 மணி

போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!

சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு!

சு.சாமியைக் கைது செய்!

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் மீது போலீசு வன்முறை!

நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு.

இன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் கூட்டம் நடந்த்து. நடைபெற்றுள்ள சம்பவம் என்பது ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் அங்கம். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்பட்டு வரும் சு.சாமி, வழக்குரைஞர்களையும் தமிழ் மக்களையும் கேவலப் படுத்தும் விதத்தில், “புலிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பேசும் கூலி வக்கீல்கள், இவனெல்லாம் வக்கீலானா இப்படித்தான் இருக்கும்” என்றெல்லாம் நீதிமன்ற அறைக்குள் பேசியிருக்கிறார். மேலும் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறும் கொந்தளிப்பான சூழலில், தனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிதம்பரம் வழக்கில் ஆஜராவதாக கூறிக்கொண்டு, நீதிமன்றத்தின் நேரம் துவங்கு முன்னரே உள்ளே வந்து அமர்ந்து கொண்டு, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். எனவே சு.சாமி மீது வழக்கு தொடர வேண்டும் என்பது வழக்குரைஞர்களின் கோரிக்கை.

போலீசு வழக்கு பதிவு செய்து விட்டது. அடுத்த கணமே வழக்குரைஞர்களை வன்முறையாகப் பிடித்துச் செல்ல போலீசு முயன்றது. விளைவு. உயர்நீதி மன்ற வளாகம் இந்தக் கணத்தில் போர்க்களமாகிக் கொண்டிருக்கிறது.

வழக்குரைஞர்களுக்கு எதிராக போலீசின் வன்முறை உயர்நீதி மன்ற வளாகத்தின் உள்ளே இதோ இந்தக் கணம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

விவரம்: வினவு

http://vinavu.wordpress.com/2009/02/19/sswamy3/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு.

முட்டையாலை அடித்தால் கொலை முயற்சியா ......

அப்போ ..... வன்னியில் நடப்பதை , என்ன முயற்சி என்று சொல்வது . :icon_idea:

Edited by தமிழ் சிறி

வழக்கறிஞர்கள் ஆவேசம்:ஐகோர்ட் வளாக போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டை கானாது

ஐகோர்ட் கலவரம்: பத்திரிக்கையாளரின் கார் எரிப்பு

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

இந்த மோதலால் உயர்நீதிமன்ற வளாகம் போர்க்களமானது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

பத்திரிக்கையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.

ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் சாமி............. எங்கு நுழைந்தாலும் கலகம் தானா?

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர். பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

போலீசாரும்,அதிரடிப்படையினரு

ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

போலீசாரும்,அதிரடிப்படையினரு தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3757

பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

வரலாறு காணாத இந்த மோதல் சம்பவத்தால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம்.

போலீசாரும், வழக்கறிஞர்களும் மாறி, மாறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டபோது பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர்.

நாங்கள் அடித்து நொறுக்குவதை படம் பிடிக்காதே, அவர்கள் அடித்து நொறுக்குவதை படம் எடு என்று இரு தரப்பினரும் பத்திரிக்கையாளர்களை மிரட்டினர்.

இந்த மிரட்டலில் பத்திரிக்கையாளர்களின் காமிராக்களை அடித்து நொறுக்கினர்.

இந்து நாளிதழின் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். நக்கீரன் புலனாய்வு பத்திரிக்கையின் புகைப்படக்காரரின் மண்டையை அடித்து உடைத்தனர்.

தேசிய செய்திச்சேனலின் செய்தியாளரை வழக்கறிஞர்கள் அடித்து துரத்தினர்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3760

Edited by வசி_சுதா

தலைமை,உள்துறை,சட்டத்துறை செயலாளர்களை சந்திக்க நீதிபதி அவசரக்கூட்டம்

என்ன நடக்குது தமிழ்நாட்டில்??? :icon_idea:

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.

பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3763

  • கருத்துக்கள உறவுகள்

தலைமை,உள்துறை,சட்டத்துறை செயலாளர்களை சந்திக்க நீதிபதி அவசரக்கூட்டம்

என்ன நடக்குது தமிழ்நாட்டில்??? :wub:

இந்திய அதிகார வர்க்கம் தமிழ் உணர்வெழுச்சிக்கு அத்திவாரம் போடுகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.