Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இருந்து சமாதான தூதுக்குழு விரைவில் இலங்கை வரவுள்ளது

Featured Replies

கனடாவில் இருந்து சமாதான தூதுக்குழு ஒன்று எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதம் அளவில் இலங்கை வரவுள்ளதாக கனடாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ள மேற்படி சமாதானத் தூதுக்குழு இலங்கை அரசு தரப்புடன் அபிவிருத்தி பற்றிப் பேசும் அதேவேளையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்த உள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் அரசியல் தீர்வு இல்லாது முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளால் முழுமையான பலன்களை அடைந்து விடமுடியாது. மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்குமாயின் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் பயனற்றுப் போய்விடும் என்பதாலேயே அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வின் தேவை குறித்தும் இலங்கை வர வுள்ள கனடா அமைதித்தூதுக் குழு இலங்கைத் தரப்புடன் பேஉள்ளதாக அறியமுடிகின்றது.

கனடாவில் இருந்து அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஒரு தூதுக்குழு தமது இலங்கை அனுபவங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள், எதிர்பார்ப்புகள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளதாகவும் இதனையடுத்தே கனடா அரசாங்கம் சமாதானத் தூதுக்குழுவை அனுப்பவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கனேடிய தூதுக் குழுவில் ஐந்து அல்லது ஆறுபேர் அளவில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. இந்தத் தூதுக்குழுவில் கனடாவில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களும் இடம்பெற்றிருந்தனர்.

மேற்படி தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் போது வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத் திப்பணிகள், நிதி முதலீடுகள் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பலவிடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வருவதால் வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது பற்றியே பெரும்பாலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கனேடிய தூதுக்குழு இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, அமைச்சர்கள் என அரதரப்பின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துப்பேசியுள்ளது.

மேற்படி சந்திப்புக்கு அப்பால் சுதந்திரமாக இக்குழு வெளியாருடன் தொடர்பு கொள்ளவோ, பேசவோ, சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தூதுக்குழுவில் இடம்பெற்ற தமிழ்ப்பிரதிநிதிகள் தமது உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறித்து கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை வந்த தூதுக்குழுவினர் கொண்டு வந்ததாகவும் அறியமுடிகின்றது

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

"விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வருவதால் வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது பற்றியே பெரும்பாலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. :lol: :lol: :) "

கனபேர் புலத்து போராட்டங்களின் பயனாக போக வில்லை எல்லோரும் தங்கள் சுய நலத்துக்காக எமது உயிர்களிலும் போராட்டங்களிலும் இருந்து பயன்பெற வெளிக்கிட்டார்கள்... :unsure::(

நாங்கள் நலிவடைஞ்சிருந்தா இப்பிடித்தான் எல்லாரும் வந்து தோலுரிப்பார்கள்.... அது கனடா எண்டா என்ன? சிறிலங்கா எண்டா என்ன?

சொந்த நாட்டுக்கரனே தாக்கும் போது கனடா காரன் வந்தென்ன விலக்குப்பிடிக்கவே பார்ப்பான்? இருக்கிற மிச்சத்தையும் உருவத்தான் பார்ப்பான்.

அதுக்கு கனடாவில இருக்கிற தமிழர்களின்ட அனுமதி அவனுக்குத் தேவையில்லை... ஊரில இருந்து போராடி பெறாத உரிமையையா கனடாவில ஊர்வலம் போய்ப்பெறமுடியும் ?

யாருக்கு எதை செய்யவேண்டுமோ அதை முன்வந்து செயுங்கள்.... முடிந்ததவரை பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.