Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

Featured Replies

ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.

காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

"மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால், ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும்" என்று கூறிய அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.

மானமுள்ள தமிழனின் செயற்பாடு. ஆனால் தமிழினத்தின் இரட்சகர்கள் என்று சொல்பவர்கள் இன்னும் காங்கிரசில் தொங்கியவாறு, இன்னும் இவளவு தமிழர்கள் கொல்லப்படும் போதும் , இண்டகர்களாகத் திகழ்வதேனோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புதிய இராமாயணக்காலமாக பார்ப்பனியம் திட்டமிட்டுச் செய்கிறது. இது 'சோனியாயணம்' எனப்பெயரிடப்படலாம். இலங்கையில் இரண்டாவது அனுமானாக சரத் பூர்வ குடிகளை அழிக்க தமிழ்நாட்டின் வானரகத்தலைவனாக வழிகாட்டிய சுக்கிரீவன் பாத்திரத்தைச் செவ்வனே செய்பவரை.... என்னதான் செய்யமுடியும்?

2050ற்குபின் இன்னுமொரு அரோகரா காத்திருக்கு! புதிய அரக்கரொழிப்பு நாளாக!! தயாராகுங்கள் தோப்புக்கரணம் போட!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருவி மணியனுக்கு பாராட்டு சுவரொட்டி ஒட்டிய இளைஞர் பட்டாளம்

புதுச்சேரி பேரூந்து நிலையம் அருகில் இன்று காலை சென்றிருந்தபோது “தமிழ்ருவி மணியன்” காங்கிரசு கட்சியிலிருந்து தனது பொதுச்செயலர் பதவியிலிருந்து விலகியதற்கு பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். அவர்களை பார்த்தால் அதிகம் படித்தவர்கள் போல் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிப் பிழம்பாக தமிழீழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி தங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.

இங்கே சுவரொட்டி ஒட்டினால் எந்த பயனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம், இருந்தும் நாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். அங்கே செத்து மடியும் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற நாங்கள் ஈழம் செல்லவும் தயாராக இருக்கிறோம், அதற்கு ஏதேனும் வழி சொல்லுங்கள் என்று ஒரு இளைஞர் கேட்டார். அது ஏதோ அறியாமையால் கேட்ட கேள்விபோல் எனக்கு தோன்றவில்லை. உண்மையில் வாய்பிருந்தால் செல்வார்கள் போலிருக்கிறது, அந்த அளவுக்கு அவர்களின் குரலில் அழுத்தம் இருந்தது, ஒரு வருத்தம் இருந்தது.

img00013.jpg

நீங்கள் எந்த கட்சியை சேர்தவர்கள் என்று கேட்டபோது “ இல்லை அண்ணா நாங்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள்” எங்கள் சுவரொட்டிக்கும் கீழே பாருங்கள் அது தெரியும் என்றார் ஒரு இளைஞர்." நெல்லித்தோப்பு உருளையன் பேட்டை இளைஞர்கள் புதுவை" என்று அந்த சுவரொட்டியில் இருந்தது. அதிகம் காசு பணம் வைத்துக்கொண்டு ஏதோ பொழுது போக்குக்காக அவர்கள் இதை செய்யவில்லை, அவர்களின் அடிமனதில் படிந்திருக்கும் சோகத்தின் வெளிப்பாடாக இடையிடையே அங்கே அமர்ந்து விளையாடிக் கொண்டே சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்,

img00015.jpg

அவர்களுக்கு எமது நன்றியை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

மறக்காமல் அவர்களின் பெயரை கேட்டு வந்தேன், த.இளையராசா, செ.மணிகண்டன், இரா.செயக்குமார், ஏ.அருள், சூசை, சு. ஜான்சன், வே, ஜூலியோ, மு. எழில், கு. அருணாச்சலம், மு.இளையராசா, வினோத், சகாயம், உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றார்கள், உடன் அவர்களின் அலைபேசி எண்ணும் கொடுத்தார்கள்; முடிந்தால் நீங்களும் அவர்களை பாராடுங்கள்: எண் : 98944 08879, 94430 36606

http://rajasugumaran.blogspot.com/2009/02/blog-post_26.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.