Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு இனி செய்ய வேண்டியது என்ன? : ஆசிரிய தலையங்கம்; உயிர்மை சஞ்சிகை (சென்னை)

Featured Replies

நம்முடைய காலகட்டத்தில் இதுதான் பிரமாண்டமான நாடகம். உண்மைக்கும் பொய்க்குமிடையே எதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட அபத்த நாடகம். கவிஞர்கள் கவிதை வாசித்து முடித்தாகிவிட்டது.

சினிமாக்காரர்கள் படப்பிடிப்புகளுக்குத் திரும்பிவிட்டனர்.

சில பேருந்துகளை எரித்து முடித்தாகிவிட்டது.

சிறைக்குப் போனவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

உண்ணாவிரதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டன.

இதுவே இறுதி வேண்டுகோள் என சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியாகிவிட்டது.

விரைவில் ராஜபக்ஷவும் சரத் பொன்சேகாவும் தம் இறுதி வெற்றியினை அறிவிப்பார்கள்.

நாம் நாடகம் முடிந்து அமைதியாக வீடு திரும்பலாம்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் இயக்கம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டமே.

ஒரு பொது விவகாரத்திற்காக இத்தனை தரப்பிலிருந்து பங்கேற்ற நிகழ்வுகள் வேறு எதுவுமில்லை.

இவ்வளவு உணர்ச்சிகரமான பேச்சுகளை வேறு எதுவும் உருவாக்கியதில்லை.

ஆனால், இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மையமிழந்து, இலக்கற்றுக் கேலிக்கூத்தாக முடிந்து போய்க் கொண்டிருக்கின்றன.

காரணம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்ச்சிகளை நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்லக் கூடிய அரசியல் இயக்கங்கள் எதுவும் தமிழகத்தில் இல்லை. மாறாக அரசியல் முரண்பாடுகளே இந்த இயக்கத்தை வழி நடத்துகின்றன.

முரண்பட்ட அரசியல் நலன்களின் வழியே ஒரு பொதுவான குறிக்கோளை நோக்கி நடப்பதன் அபத்தத்தை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் உறுதியான நோக்கம் மிகவும் வெளிப்படையானது.

அதற்காக எல்லாவிதங்களிலும் அது சிங்கள இனவாத அரசிற்கும் இராணுவத்திற்கும் உதவி வருகிறது.

அந்தக் காங்கிரஸ் அரசு யுத்த நிறுத்தத்திற்கு உதவ வேண்டும் என இங்கு தொடர்ந்து குரல் கொடுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவா, ஈழத் தமிழர்களை ஏமாற்றவா?

அரசதிகாரத்தில் பரஸ்பரம் சார்ந்திருக்கும் சூழலில் தி.மு.க. அரசால் இந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு உண்மையான நெருக்கடி எதையும் கொடுக்க இயலாது. பா.ம.க. வின் நிலையும் அவ்வாறே.

ஜெயலலிதா கடும் புலிகள் எதிர்ப்பாளர்.

இடதுசாரிகள் தமிழீழத்தை ஏற்காத சர்வதேச தேசியவாதிகள்.

வைகோவும் திருமாவளவனும் வெளிப்படையான புலிகள் ஆதரவாளர்கள். ஆனால், அரசியல்ரீதியாக எதிர் அணிகளில் இருந்து இயங்குபவர்கள்.

இதுதான் உண்மையான ஆடு, புலி ஆட்டம். ஆடு யார்? புலி யார்? புல்லுக்கட்டு யார்? என்பதை விளக்க வேண்டியதில்லை.

இவர்கள் அனைவரும்தான் இப்போது ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு இனியும் நாம் செய்யக்கூடியது என்ன?

இன்னும் கொஞ்சம் அரிசி... பருப்பு.. இன்னும் கொஞ்சம் சவத்துணிகள்.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உண்மையான ஆடு, புலி ஆட்டம். ஆடு யார்? புலி யார்? புல்லுக்கட்டு யார்? என்பதை விளக்க வேண்டியதில்லை.

இவர்கள் அனைவரும்தான் இப்போது ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு இனியும் நாம் செய்யக்கூடியது என்ன?

இன்னும் கொஞ்சம் அரிசி... பருப்பு.. இன்னும் கொஞ்சம் சவத்துணிகள்.

www.tamilwin.com

இறுதியில் சரத்பொன்சேகாவின் கூற்றுப்படி , தமிழக அரசியல் வாதிகள் கோமாளிகள் என்பது நிதர்சனமாகிறதா?

"காங்கிரஸ் அரசு யுத்த நிறுத்தத்திற்கு உதவ வேண்டும் என இங்கு தொடர்ந்து குரல் கொடுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவா, ஈழத் தமிழர்களை ஏமாற்றவா?"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.