Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுமையாக தாக்கி வீதியில் வீசப்பட்டார் வித்தியாதரன்: கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை

Featured Replies

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெமட்டகொட குற்றப்புலனாய்வுத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'உதயன்' மற்றும் 'சுடொரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலையிலும் காலிலும் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை வானில் கடத்திய ஆயுததாரிகள் வித்தியாதரனை கடுமையாக தாக்கி விட்டு தெமட்டகொடவில் வீதியோரத்தில் வானில் இருந்து வெளியே தள்ளி விட்டு சென்றதாகவும் பின்னர் தெமட்டகொட காவல்துறையினர் அவரை கைது செய்து குற்றப்புலனாய்வு தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வித்தியாதரனின் மனைவி கலா வித்தியாதரனும் அவரது மூன்று பிள்ளைகளும் தெமட்டகொட குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு பார்வையிடுவதற்கான அனுமதியை காவல்துறையினர் வழங்கியதாக வித்தியாதரனின் மைத்துனரும் 'உதயன்' மற்றும் 'சுடொரொளி' பத்திரிகைகளின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதேவேளை, கல்கிசையில் உள்ள 'மகிந்த' மலர்ச்சாலையில் வித்தியாதரன் கடத்தப்பட்டமை தொடர்பாகவும் மற்றும் வேறு சில விடயங்கள் குறித்தும் கல்கிசை இரகசிய காவல்துறையினர் நேற்று பிற்பகல் தன்னிடம் விசாரணை நடத்தியதாக் சரவணபவன் மேலும் கூறினார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் வித்தியாதரனை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுககு அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

புதினம்

ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான கண்டன ஊடக அமைப்பின் கண்டன அறிக்கை

! வணக்கம்

!

இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் சிவில் சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!

இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் இலங்கையின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகிறது. மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட யுத்த பூமிக்குள் எப்பக்க சார்பும் அற்று பணி செய்ய முடியாத சூழல். ஒட்டு மொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் இலங்கை அரசால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை இலங்கை அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. வெள்ளை வேன் எனப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக் கொலை செய்யப்பட்டு வருக்கின்றனர்.

இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகிறார்கள். 2006-&ம் ஆண்டிலிருந்து 2008-&ம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் இனவாதப் போக்கை சுட்டிக் காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!

இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் இலங்கை ராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் ராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக அய்யாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்சா, தேவிஸ் குருகே, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜா, நடராஜா அற்புதராஜா ஐ. சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சம்பத் லக்மால் சில்வா, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ்,புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி, எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கிறார்கள். அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று இலங்கை அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாதம் 8&ம் தேதி புகழ்பெற்ற சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்தே விகரமதுங்க கொழும்பில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமீபத்தில் அவரது மனைவி சோனாலி சமரசிங்க தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். ‘இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை இலங்கை அரசு தொடங்கவில்லை’ என்று குற்றம் சுமத்தியும் இருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அக்தாஸ் கூட இலங்கயில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 26-2-2009 வியாழன் அன்று யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘சுடரொளி’ பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (58) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மூன்று வெள்ளை வேன்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசு நடத்தும் யுத்தம்பற்றியும், பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன. இந்த நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கிறது. இந்நிலையில் விதயாதரன் கடத்தப்பட வில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.