Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு துறைமுகத்தினூடாகப் புலிகளுக்கு ஆயுதங்கள் சென்றதெப்படி? விசாரணை நடத்தப்படுவதாகக் கூறுகிறார் கெஹெலிய

Featured Replies

வீரகேசரி இணையம் "வடக்கில் அண்மைக் காலமாக பல பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொழும்பு துறைமுகத்தினூடாகவே பெறப்பட்டு அங்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எவ்வாறு விடுதலைப்புலிகளைச் சென்றடைந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என கெஹெலிய ரம்புக்வெல இன்று தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :

"இடம்பெயந்து வரும் மக்கள் மனிக்பாம் போன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் சிலர் கல்வி இழந்துள்ளனர். அவர்களின் நலன்கருதி சிறிய அளவில் கல்வி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நலன்புரி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். அவர்கள் இடம்பெயர்ந்து வரும் மக்களின் நலன் கருதி அரசு மேற்கொண்டுவரும் சேவைகள் தொடர்பில் திருப்தியடைந்துள்ளனர்.

அதேபோன்று வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐ.நாவின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் தனது அறிக்கையில் அரசின் செயற்பாடு தொடர்பில் திருப்தி அடைவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐ.நா. மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பல மனிதாபிமான ஒத்துழைப்புகளை எமக்கு வழங்கியுள்ளன.

சர்வதேச அமைப்புக்கள் பல நிதி உதவிகளையும் அளித்துள்ளன. அவை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களூடாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்காக அந்நிறுவனங்களுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அந்நிதியின் ஒரு தொகை இடம்பெயர்ந்த மக்களின் நலன்கருதி பயன்படுத்தப்படுகின்றது.

கிழக்கு மாகாணம்

அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடத்தல்கள் மற்றும் கப்பம் பெறுதல்களுடன் தொடர்புடைய பல குழுக்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிராக உரிய முறையில் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் ஆயுதங்கள் மீட்பு

வடக்கில் அண்மைக் காலமாக பல பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொழும்பு துறை முகத்தினூடாகவே பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எவ்வாறு விடுதலைப்புலிகளைச் சென்றடைந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலி அமைப்பு, நாளை உத்தியோகபூர்வமாக அரசிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவுள்ளது. இந்த அமைப்பினரும் விடுதலைப்புலிகள் இறுதி நிலையை அடைந்துள்ளதை ஒப்பு கொண்டுள்ளனர். அவர்கள் தமது பாதுகாப்பு கருதியே ஆயுதங்களைத் தாம் வைத்திருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தனர். இன்று அரசாங்கம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியதன் காரணமாக அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல நடவடிக்கைகளை அரசு வெற்றிகரமாக கொண்டு வருவது இதிலிருந்து தெளிவாகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வடக்கில் அண்மைக் காலமாக பல பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொழும்பு துறைமுகத்தினூடாகவே பெறப்பட்டு அங்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எவ்வாறு விடுதலைப்புலிகளைச் சென்றடைந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என கெஹெலிய ரம்புக்வெல இன்று தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

எல்லாம் உங்கடை ஆக்கள் விட்டு ஓடினதுகள் தான் கேகெலியு மாமோய்

அது மட்டுமல்ல, அந்த ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு, பழயதாகிவிட்டது. அதனால் இப்போது கொண்டுவந்திருக்கும் புதிய ஆயுதங்களை பாவிப்பதற்காக இவற்றைக் கைவிட்டிருக்கலாம்.

இலங்கை இராணுவம்தானே புலிகளின் பிரதான ஆயுத வழங்கிகள்....

இலங்கை இராணுவம்தானே புலிகளின் பிரதான ஆயுத வழங்கிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகத்தினூடாகப் புலிகளுக்கு ஆயுதங்கள் சென்றதெப்படி? விசாரணை நடத்தப்படுவதாகக் கூறுகிறார் கெஹெலிய

கெஹெலியக்கு கொழுப்(ம்)பு மட்டும் தான் துறைமுகம் , எங்களுக்கு எல்லாம் துறைமுக(கா)ம் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.