Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுதுளி பெருவெள்ளம் ~ பகைமை மறப்போம் பாரினில் ஒலிப்போம்

Featured Replies

ஈழத்தில் வாழும் 400,000 மக்களுக்கும் தேவையான உணவுத் தேவைக்காக மட்டும், அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் ஒரு மாதத்திற்கு 600கோடி தேவைப்படுகின்றது. ஒரு நபருக்கு ஒருநாள் உணவுக்காக அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.500 தேவைப்படுகின்றது. இதனை ஈழநாதம் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வாறு பார்ப்போமானால் இன்றைய மக்களின் வாழ்விட ஆதார உணவுத் தேவைக்கான இப்பெருந்தொகைப் பணம் உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது.

அவர்களின் அடிப்படைக் கூற்றுப்படி 400,000 * 500 = 200000000

அதாவது இருபது கோடி ரூபா ஒருநாளைக்கும் ஒரு மாதத்திற்கு 600 கோடி ரூபாவும் தேவைப்படுகின்றது. புலம்பெயர் வாழ் மக்களே, தமிழக உறவுகளே ஒருவர் ஒரு ரூபாவீதம் ஒருநாளைக்கு கொடுத்தாலே நாம் அம்மக்களின் பசிப்பிணியைத் தீர்க்கமுடியும். ஆனால் இதிலே கொடுக்காது பல்லாயிரம் மக்கள் இருக்கின்றார்கள் எனவே இதனைக் கருத்திற் கொண்டு ஒரு தமிழன் ஒருமாதம் ரூ.300 வீதமாவது செலுத்துவதன் மூலம் நாம் ஆகக்குறைந்த உணவுத் தேவையாவது பூர்த்தி செய்யமுடியும், இதனை நீங்கள் எடுத்துக் கொண்டீர்களானால் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஓர் சிறுதொகையாகத்தான் இது தெரியும், சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் எல்லோரும் மனமுவந்து சிறுதுளி கொடுப்பதனால் பல இலட்சம் மக்களைக்காப்பாற்றும் ஓர் தார்மீகப் பணியினை உளமார ஏற்று உதவுவோமாக. நண்பர்களாக பணம் சேகரித்தும் குழுக்களாக சேகரித்தும் தமிழீழ புனர்வாழ்வுக் கழகமூடாக பசிப்பிணியால் வாடும் மக்களுக்கு உதவ அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஒருமாதம் ரூ.300 என்பது உணவுத் தேவைக்கானது மட்டுமே, உங்கள் வலிமைக்கேற்ற உதவுங்கள். உங்களால் எவ்வளவு அனுப்ப முடியுமோ செய்யுங்கள். நாம் எல்லோரும் ஓரினம். நாம் எல்லோரும் ஓர் தேசியம். நாம் மக்கள் உணவின்றி வாடும்வேளை நாம் கொண்டாட்டங்களினை குறைத்து அதன் மூலம் சிறு தொகையை வழங்கினாற்கூட அது பேருதவிதான். நம் உறவுகள் கொல்லப்படும் நேரம் நாம் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றோம், இதனைப் பார்க்கும் வேற்று சமூகத்தினர் எம்மை கேவலமாகப் பாக்கின்றனர். பகைமை மறப்போம் பசிப்பிணி தீர்ப்போம். ஒரு மாதம் 1000 ரூபாவாவது கொடுப்பது கஸ்டமா? 5 பவுண்ஸோ 15 டொலரோ 30 சிங்கப்பூர் டொலரோ 50 மலேசிய ரிங்கிட்டோ நாம் கொடுப்பதன் மூலம் எதுவுமே இழந்துவிடப்போவதில்லை. அவன் செய்வான் இவன் செய்வான் என எதிர்பார்த்துக் காத்திருக்காது நான் என்ன செய்கின்றேன் என முன்னுக்கு வாருங்கள். நான் எனது மக்களுக்கு என்ன செய்தேன் என வாய்ச்சாடல் அடிப்பதை நிறுத்தி செயலில் இறங்குங்கள்.

மாசத்துக்கு ஒரு பெட்டி வெண்சுருட்டிற்குப் போகும் பணத்தினை ஒரு குடும்பம் பிழைக்கக் கொடுத்தால் தப்பேதும் இல்லைத்தானே. உங்களை கொண்டாட வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஒவ்வொரு கொண்டாட்ட வைபவங்களிலும் ஓர் காணிக்கை ஈழத்தமிழர் துயர் துடைக்கும் நிதியம் எனச் சேர்த்து அவ்விழா ஒருங்கமைப்பாளர்கள் அதனை உரிய இடத்தில் சேர்த்தாலே போதுமானது. சேருங்கள் ஒன்றாகச் சேருங்கள். காலம் இனியும் இல்லைக் காத்திருக்க. வேசம் இனியும் இல்லைப் போட்டிருக்க. பகைமை மறப்போம் பாரினில் ஒலிப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் யாருடைய கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும்

நான் இங்கு கூற விரும்புவது தப்பாகத்தான் இருக்க வேண்டும்.

நாங்கள் எம்மக்களுக்க் கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்க மனம் வராது.

இவ்வளவு காலமும் அவர்கள் அதாவது சகோதரங்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு நிலம் இருந்தது விவசாயம் செய்தார்கள். இருக்க இடம் இருந்தது. ஆனால் தற்போது சிங்கள பாசிச பயங்கரவாத அரசு அடிப்படைதேவையான உணவு, உடை , உறையுள் என இந்த மூன்ரையும் தான் முக்கிய ஆயுதமாக பாவிக்கிறான்.

ஆகவே வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை. கேட்காமலே வழங்க வேண்டியதுதான்.

இதை விட

ஆனால் நாம் கேட்காமலே உதவி செய்கிறோம். யாருக்கு சிங்கள பாசிச பயங்கரவாத பெளத்த அரசின் பொருளாதாரத்திற்கு.

சிங்களவனால் உற்பத்தி செய்யபடும் பொருட்கள். அவனுடைய சேவைகள் (விமான சேவைகள்)

பல வெளி நாட்டு நிறுவனங்கள் சிங்கள பாசிச பயங்கரவாத பெளத்த அரசிடம் இருந்து தைத்த உடுபுடவைகள் வாங்குவதை நிறுத்திவிட்டன. அதனால் வந்த பொருளாதார இழப்பு அதிகம். அதை ஈடு செய்ய நாமும் பங்கொள்ள வேண்டுமா?

முடிவெடுங்கள்

எமக்கு 100 உருபா தந்து எமது சகோதரங்களை காப்பாற்றுவோமா?

அல்லது

சிங்கள பாசிச பயங்கரவாத பெளத்த அரசிற்கு 1 உருபா கொடுத்து எமது மக்களை கொன்றொழிக்க செய்வோமா?

Edited by Mullaimainthan

  • தொடங்கியவர்

நன்றி முல்லைமைந்தன் உங்கள் கருத்துக்கு.... தமிழினம் இன்னமும் படுகொலையின் வலியை உணரவில்லை... யார் உணர்ந்திருக்கின்றார்கள் என்று பார்த்தால் உண்மையிலேயே அவர்களுடைய உறவுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஓரளவு உணர்ந்திருக்கின்றார்கள். இன்னமும் வெற்றிச் செய்திக்காக மட்டும் ஏங்கிக் கொண்டு இருப்பவர்களின் எண்னிக்கைதான் அதிகம், அதுவே ஆபத்தும் கூட. வெற்றி என்பதனை விட தமிழன் இறக்கின்றான், கொல்லப்படுகின்றான், ஒரு பாரம்பரிய இனம் அழிகின்றது, நாம் புலம்பெயர் நாட்டிலிருந்து திரும்பும்போது எமக்கென்றொரு நாடு இல்லாமல் ஒரு இடமில்லாமற் போகப் போகின்றதே என்ற கவலை அவர்கள் மனங்களில் எழவில்லை. இப்படியே போர் நிடித்தால் இன்னம் ஓர் 10 வருடத்தில் யாழ்ப்பாணம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையும் சிங்களவருக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படப்போகின்றது. இந்தக் காலத்தில் எம்மாலான உதவி செய்து மீட்டெடுப்போம், என ஒவ்வொரு தமிழனும் சிந்தித்தாலே போதும் தமிழீழம் கிடைத்துவிடும். போரின்மூலம் மட்டும் வெல்வதால் நான் எதனையும் சாதித்துவிட முடியாது எனவே அரசியல் பொருளாதார வளத்திலும் நாம் போராடவேண்டும், இராணுவத் தீர்வு என்பது ஒரு பாதுகாப்பே ஒழிய அது தீர்வாக அமையாது. ஈராக்கில் அமெரிக்காவால் போர் வெல்லப்பட்டதா? இல்லை. அங்கே முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டது யாரால் என்றால் அங்கு இருந்த மக்களால். அப்போராட்டம் தோல்வியடையச் செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் பலமுறை திறப்பை மடியில் வைத்துக்கொண்டே பூட்டை உடைத்திருக்கிறோம்.

எப்போதும் அணுகுமுறையை தெரிவுசெய்வதில் அவதானமாக இருந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைய தளம் troonline.org இயங்கவில்லையே.

வேறு தளம் இருந்தால் சொல்லுங்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இந்த இணைய தளம் ட்ரோன்லினெ.ஒர்க் இயங்கவில்லையே.

வேறு தளம் இருந்தால் சொல்லுங்கள் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என விளங்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.