Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தொடர்பான அரசாங்கத்தின் கரிசனையின் அடிப்படையில் புலிகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் ‐ ஹரிஹரன்

Featured Replies

தமிழ் மக்களது உணர்வுகளுக்கு எவ்வளவு தூரம் இலங்கை அரசாங்கம் முக்கியத்தும் அளித்து செயற்படுகின்றது என்பதனை அடிப்படையாக வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என தெற்காசிய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பூரணமாக பெற்றுக்கொள்ள கொழும்பு அரசாங்கம் காட்டும் முனைப்பைப் பொருத்து புலிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான தமிழர்கள் பாதுகாப்பற்ற தன்மையையே தற்போது உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரபு ரீதியான இராணுவப் படைப் பிரிவொன்றையும், மரபு சாரா போரட்டக் குழுவொன்றினையும் ஒப்பீடு செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுப் படையினரின் பலம் மற்றும் பலவீனம் குறித்து சரியான அனுமானங்களை வெளியிடும் சுலபமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னடைவை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலப்பரப்புக்களை கைப்பற்றிய போதிலும் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய கெரில்லா தாக்குதல்களை அரசப் படைத்தரப்பு எங்கனம் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றது என்பதனை அடிப்படையாகக் கொண்டு யுத்த வெற்றிகளை தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறத்தாழ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போது 3000 போராளிகள் எஞ்சியிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் யுத்தம் தொடர்பான கொழும்பு அரசாங்கங்களின் வழயைமான நிலைப்பாட்டையே மஹிந்த அரசாங்கமும் கொண்டிருக்கும் என தப்புக் கணக்குப் போட்டமையே பாரிய பின்னடைவிற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் ஆளுமைமிக்கதோர் தலைவராகவே திகழ்வதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் தலைமைத்துவ ஆற்றல் காரணமாகவே இன்று வரையில் தற்கொலைப் போராளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கின் நிலைமை திருப்தியடையும் வகையில் இல்லை எனவும், அரசாங்கம் கிழக்கு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள எதிர்பார்க்கும் தமிழ் தலைவர்களது நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் வகையிலேயே கிழக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

அரசு தமிழருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும், புலிகள் ஆயுதங்களைக் கையளக்க வேண்டும் என்கிறாரே, என்ன திடமான கருத்து. இதுவெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்ப்பது அதுவும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து எதிர்பார்ப்பதென்பது கரிகரன் கிட்னிக்கு எட்டாமல் போயிற்றே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தியரியின் படி புலிகள் தமிழர்கள் வாழும் வரை இருப்பார்கள். நல்ல விஷயம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்!

தாம் சொல்வது நடக்கவேண்டும் அதன் மூலம் தாம் பிரபல்யம் ஆகிவிடலாம் என்பது இவர்களது நப்பாசை. அதற்காக ஒவ்வொருநாளும் ஏதாவது ஒன்றை சொல்லி கொண்டே இருப்பார்கள். இவர்கள் எதிர்கால இந்தியா பற்றி கூட ஒரு தெளிவான பாதையையோ வழியையோ சிந்தித்து செயற்படுத்தியதில்லை.

இவர் றோ வின் தலைமையில் இருந்த போது என்ன செய்து கிழித்தார்? இவரின் எந்த செயற்பாட்டால் இன்று இந்தியா பயன் பெறுகிறது? எத்தனை கோடி ரூபாய்களை றோ'விற்கு என்று செலவு செய்தார். செய்த ஓரே ஓரு வேலை மும்பாய் விமான நிலைமூடாக பயணித்த அப்பாவி தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்து புலி பற்றி கேட்டு அடித்து அவர்களை துன்புறுத்திய ஒரே ஒரு வேலையைதான் அன்று றோ செய்தது.

இப்போது கூட இவர் ஏதாவது ஒன்றை தெளிவாக சொல்கின்றாரா என்று பாருங்கள். புலிகள் பற்றி என்ன சொல்ல வருகிறார் அதை தெளிவாக சொல்லலாம்தானே. இவர் சொல்வதை சொல்வதற்கு ஒரு பதவி வேற வேண்டுமா? வெறும் விசுகோத்து. ஏதோ புலிகளை பற்றி சொல்கிறார் என்பதால் எமது ஊடகங்கள் இவரது வெறிகதைகளை பரப்புவதால்தான் இவர் போன்றவர்களுக்கு போதை இன்னமும் ஏறுகின்றது.

தமிழ் மக்களது உணர்வுகளுக்கு எவ்வளவு தூரம் இலங்கை அரசாங்கம் முக்கியத்தும் அளித்து செயற்படுகின்றது என்பதனை அடிப்படையாக வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என தெற்காசிய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பூரணமாக பெற்றுக்கொள்ள கொழும்பு அரசாங்கம் காட்டும் முனைப்பைப் பொருத்து புலிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான தமிழர்கள் பாதுகாப்பற்ற தன்மையையே தற்போது உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரபு ரீதியான இராணுவப் படைப் பிரிவொன்றையும், மரபு சாரா போரட்டக் குழுவொன்றினையும் ஒப்பீடு செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுப் படையினரின் பலம் மற்றும் பலவீனம் குறித்து சரியான அனுமானங்களை வெளியிடும் சுலபமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னடைவை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலப்பரப்புக்களை கைப்பற்றிய போதிலும் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய கெரில்லா தாக்குதல்களை அரசப் படைத்தரப்பு எங்கனம் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றது என்பதனை அடிப்படையாகக் கொண்டு யுத்த வெற்றிகளை தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறத்தாழ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போது 3000 போராளிகள் எஞ்சியிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் யுத்தம் தொடர்பான கொழும்பு அரசாங்கங்களின் வழயைமான நிலைப்பாட்டையே மஹிந்த அரசாங்கமும் கொண்டிருக்கும் என தப்புக் கணக்குப் போட்டமையே பாரிய பின்னடைவிற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் ஆளுமைமிக்கதோர் தலைவராகவே திகழ்வதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் தலைமைத்துவ ஆற்றல் காரணமாகவே இன்று வரையில் தற்கொலைப் போராளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கின் நிலைமை திருப்தியடையும் வகையில் இல்லை எனவும், அரசாங்கம் கிழக்கு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள எதிர்பார்க்கும் தமிழ் தலைவர்களது நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் வகையிலேயே கிழக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.