Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு சிங்கள மக்கள் கோரிக்கை

Featured Replies

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‐முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது, உரிய முறையில் தகவல்களை ஆராய்ந்து, நியாயத்தை கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு

யாழ்ப்பாணத்தில் பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். வடக்கில் வசித்த சிங்கள மக்கள் அக்கரைப்பற்றில் தம்மைச் சந்தித்த போது, இதனை குறிப்பிட்டதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிடம் இருந்து முழுநாட்டை மீட்க இன்னும் சிறிது காலமும் சிறிய நிலப்பரப்புமே எஞ்சியுள்ளது. இதன் பின்னர் வடக்கின் வசந்தம் செயற்படுத்தப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்தி, அவர்களை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என பிரார்;த்திப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் வசித்த சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் ஒருகாலத்தில் தாமும் வாழ்ந்து வந்ததாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் ஏனைய மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததாகவும், ஏனைய சமூகங்களுடன் திருமண உறவுகளும் ஏற்பட்டதாகவும் அதே ஒற்றுமையில் மீண்டும் வாழ விரும்புவதாகவும் சிங்கள மக்கள் கூறியுள்ளனர்.

யுத்தம் மற்றும் இனவாத கலவரங்களால் ஒற்றுமையும் குடும்ப உறவுகளும் அழிவடைந்தன. மீண்டும் அந்த பிரதேசங்களில் தாம் குடியேற விரும்புவதாகவும் ஜனாதிபதியின் வழிநடத்ததில் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த அரசாங்கத்தினால் முடியும். அவ்வாறு நடைபெறுமாயின் மீண்டும் மோதல் நிலைமைகள் ஏற்படாது எனவும் வடபகுதியில் வாழ்ந்த சிங்கள மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கோரிக்கை நியாயமானதே. ஆனால் சிங்கள இனவெறி பேரினவாதப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் தமிழீழ மண்ணில் நீங்கள் வாழ்வது உங்களுக்கும் பாதுகாப்பில்லை தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் பாதுகாப்பில்லை.

எனவே மலரும் தமிழீழத்தில் நீங்கள் எந்த ஆயுத அச்சுறுத்தலும் இன்றி தமிழ் மக்களோடு ஒற்றுமையாக வாழலாம். விரும்பின் உங்கள் சிங்கள தேசத்திற்கும் போய் வரலாம். ஆனால் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தை ஆயுத முனையில் ஆயுத பலத்தால் வன்பறிப்புச் செய்து அங்கு குடியேறிகளாக மாறி ஆயுத பலத்தின் உதவியோடு வாழ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது. அப்படி ஒரு நடைமுறை உலக இனத்துவ வரலாற்றில் எங்கும் பதியப்பட்டில்லை என்பதை சிங்கள மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழீழமும் தமிழீழ மக்களும் சிங்கள மக்களின் சிங்கள தேசத்தின் எதிரிகள் அல்ல. சிங்கள மக்கள் தமிழீழத்தில் வாழ விரும்பின் வாழலாம். உலகில் எவரும் தமிழீழத்துக்கு வந்து வாழ விரும்பின் வாழலாம். ஆனால் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தேசத்தை ஆக்கிரமிப்பாளனிடம் கையளித்துவிட்டு.. சிங்களவர்களையோ முஸ்லீகளையோ கூட வைத்திருப்பது என்பது.. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆபத்தை ஒற்றுமையின்மையை காண்பிக்கச் செய்யப்பட வாய்ப்பையே ஏற்படுத்தும்.

தமிழீழம் ஒரு போதும் சிங்கள தேச ஆக்கிரமிப்புப் போரை செய்யாது. சிங்கள தேசத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது என்ற நிலையில் தமிழீழத்தில் வாழ விரும்பும் சிங்கள மக்களும் தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் போல அங்கு தமிழீழ சட்ட ஒழுங்கு விதிகளுக்குள் சுதந்திர மனிதர்களாக வாழும் உரிமையைப் பெறுவது உறுதி..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள் இதற்கெல்லாம் கோரிக்கை விடுக்க தேவை இல்லை. இதில் அவர்கள் கில்லாடிகள். முதலில் ஒரு புத்தர் சிலை ஒன்றை கொண்டு ஒரு அரச மரத்தின் கீழ் வைப்பார்கள். பிறகு சின்னதாக ஒரு பீடம் ...அதன் பிறகு ஒரு ஆமதுரு(துறவி) கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படுவார்...அவர் மிகவும் கைங்கரியமாக அந்த பிரதேசம் புத்தர் வந்து தேனீர் குடித்த இடம் என்று பிரகடணப்படுத்துவார்...பின்னர

இலங்கை முழுக்க முழுக்க சிங்களமயமாகப்பட படிப்படியாக செயற்படுகிறார்கள். நாங்கள் மக்களையும் இழக்கிறோம் சொந்த மண்ணையும் இழக்கிறோம்.சிங்களவனோடு சேர்ந்து வாழலாம் என்று பேசுபவர்களுக்கு தமிழன் நினைவுகளின் சுவடுகள் கூட ஆங்காங்கே இருந்துவிடக்கூடாதென்ற சிங்கள பேரினவாதித்துவத்தின் அடிப்படைக்குறிக்கோள் இன்னுமா புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுக்க முழுக்க சிங்களமயமாகப்பட படிப்படியாக செயற்படுகிறார்கள். நாங்கள் மக்களையும் இழக்கிறோம் சொந்த மண்ணையும் இழக்கிறோம்.சிங்களவனோடு சேர்ந்து வாழலாம் என்று பேசுபவர்களுக்கு தமிழன் நினைவுகளின் சுவடுகள் கூட ஆங்காங்கே இருந்துவிடக்கூடாதென்ற சிங்கள பேரினவாதித்துவத்தின் அடிப்படைக்குறிக்கோள் இன்னுமா புரியவில்லை?

ஒரு விதை முளைக்க வேண்டும் எனில் கொஞ்சம் என்றாலும் ஈரம் வேண்டும். "புரிதல்" சிறிதளவேனும் அறிவு வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் பலமிழந்து விட்டதாக எதிரிகளும், ஆக்கிரமிப்புச் சக்திகளும் நினைக்கும்போது அவர்களுக்கு இப்படியான நினைப்புக்கள் வருகின்றன. எனி எல்லோரும் தமிழரின் தோளில் ஏறி மிதிக்க நினைப்பார்கள். நேற்று 5 வயதுப் பிள்ளை பணத்துக்காக சாக்கு மூட்டையில் கொல்லப்பட்டு வீசப்பட்டபோது, தடுத்திட முடியாத இயலாமை விக்கித்தது.

என்றைக்கும் நாங்கள் பலமான சமூதாயமாக இருந்தால் மட்டுமே எம்மைச் சூழ்ந்திருக்கின்ற ஓநாய்களில் இருந்து தப்ப முடியும்.

இது சிங்கள மக்களின் கருத்தாக நான பார்க்கவில்லை திட்டமிட்டு குடியமர்த் போடுகின்ற சிங்கள இனவெறியர்களின் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் கிளிநொச்சியைப் பிடித்த பின்னர் அங்கே பௌத்தர்கள் வாழ்ந்ததுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியவர்களதானே இவர்கள். வரலாற்றை அப்படியே மாத்திவிட்டு தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று கூறுகிறார்கள். உண்மையிலே அண்டிப்பிழைக்க வந்தவன் சிற்களவனே தவிர நாங்களல்ல.

Edited by suryaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.