Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீன் மூன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீன் மூன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகிறது.

மேலும், இந்த தொலைபேசி உரையாடலில்

இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் இன்றியமையாததுதான்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நிலைமை குறித்து நேற்று பான் கி மூன் மஹிந்த பேச்சு தொலைபேசி மூலம் பல விடயங்கள் எடுத்துரைப்பு

* புலிகளின் பிரதேசத்தில் இருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் வெளி யேறி வருகின்றனர்.

* மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருள்கள் இப்போது கப்பல் மூலம் ஒழுங்காக, சீரான முறையில் அனுப்பப்படுகின்றன.

* மக்கள் தங்கும் இடங்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என இராணுவத்தினருக்கு அரசு கடும் உத்தரவு.

* அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வன்னி நிலைமை குறித்து உரையாடினர். அப்போது மேற்கண்ட விடயங்களை ஜனாதிபதி மஹிந்த, பான் கி மூனின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இடம்பெயர்ந்த மக்களுக்குரிய உணவு மற்றும் மருந்து விநியோகம், ஏனைய உதவிகள், இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி நிலையங்கள் மற்றும் நலன்புரிக் கிராமங்கள், அரசாங்கத்தின் அரசியல் தீர்வு முயற்சிகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாள ரின் அறிக்கை என்பன குறித்து தொலை பேசி உரையாடலில் இரு தலைவர்களும் பேசியதாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம் வருவாறு:

அங்கு சிக்குண்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் அதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கு வதாகவும் ஜனாதிபதி ஐ.நாவின் பொதுச் செயலாளருக்கு எடுத்துக்கூறினார்.

விடுதலைப்புலிகள் மக்கள் தங்கி யுள்ள பகுதிகளில் தங்களது உறுப்பினர்களுக்காக பதுங்கு குழிகளை அமைத் திருக்கிறார்கள் என்றும் அதற்கான அத் தாட்சிகளாக புகைப்படங்களைச் சமர்பிக்க முடியும் என்றும் ஜனாதிபதி செயலாளர் நாயகத்துக்கு விவரித்தார்.

விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் களின் மத்தியிலும் அரசாங்கக் கட்டுப் பாட்டுப்பகுதிகளுக்கு வரும் பொது மக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விடுதலைப்புலிகளுக்கு எஞ்சியுள்ள சுருங்கியுள்ள பகுதியில் மக்கள் அடர்த்தியாக தங்கி நிற்கமுடியாத ஒரு நிலை மையை இது உருவாக்கி வருகிறது. இது நல்ல அறிகுறியாகும்.

உணவு மற்றும் பொருள்களின் விநியோகம்

இடம்பெயர்ந்த மக்களுக்குரிய உணவு விநியோகம் குறித்து வினவிய ஐ.நா. செயலாளரிடம் இப்போது கொள்ளளவு கூடிய பெரிய கப்பல்கள் மூலம் உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அத னால் போதிய அளவு உணவுப் பொருள் கள் வன்னி சென்றடைவதாக கூறினார். விடுதலைப் புலிகளின் எதிர் நடவடிக்கை களுக்கு மத்தியிலும் ஒழுங்கான தவணை முறைகளில் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களின் விநி யோகம் மிகச் சீராக நடைபெறுவதாகவும் ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

வன்னிக்கு அனுப்பப்படும் உணவு மற் றும் பொருள்களின் பூரண விவரம் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிப்பதற் கென ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இலங்கையின் நிரந்திர பிரதிநிதிக்கு அனுப்பப்பட்டு விட்டது.

பொதுமக்கள் தங்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குவதில்லை

பொதுமக்கள் தங்கியுள்ள பிரதேசங்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக் குதல் நடத்தக்கூடாது என்ற அரசாங்கத் தின் உத்தரவைப் படையினர் மிகக் கவன மாக நடைமுறைப்படுத்துகின்றனர். பாது காப்பு வலயங்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை என்றும் ஜனாதிபதி, பான் கீ மூனிடம் எடுத்துரைத்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் தமது உறவுகளோடு தொடர்பு கொள்வ தற்கு வசதியாக தொலைபேசி இணைப் புகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் தெரிவித்த சிபார்சுக்கு பதி லளிக்கையில் ஜனாதிபதி

அத்தகைய வசதி மூலம் நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுகளை வழங்குவதற்கு விடுத லைப்புலிகள் பயன்படுத்தும் அபாயம் உண்டு.இது விடயத்தில் ஏற்கனவே பல அனுபவங்கள் உள்ளன என்று விளக் கினார்.

அரசியல் தீர்வு முயற்சி குறித்து....

அரசியல் தீர்வு ஒன்றை காண்பதற் கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள தாகவும் சகல தரப்பினரும் அதற்குப் பங் களிப்புச் செய்வதற்கு ஏற்பாடுகள் நடை பெறுவதாகவும் ஜனாதிபதி ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலாளருக்கு விளக்கிக் கூறினார்.

இவற்றைச் செவிமடுத்த ஐ.நா. செய லாளர் நாயகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து இரண்டு தரப்புகளுக்கும் இடை யில் தொடர்ந்து பேச்சுகள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை பான் கீ மூன் வெளியிட்டார்.

ஐ.நா. சபைக்கும் இலங்கை அரசாங்கத் துக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதி கரித்து வருவதாகவும் இந்த ஒத்துழைப்பு தொடர்வதற்கான ஆக்கபூர்வமான சமிக்ஞை தென்படுவதாகவும் தெரிவித்து ஐ.நா. செயலாளர் தமது உரையாடலை பூர்த்தி செய்து கொண்டார் என்று ஜனா திபதி மாளிகை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.