Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1947 இடப்பெயர்வும் வணங்கா மண்ணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1947 இடப்பெயர்வும் வணங்கா மண்ணும்

21/03/2009

--------------------------------------------------------------------------------

பழைய வரலாறுகளை நினைவூட்டிப் பார்க்கிறது. "வணங்கா மண்' இக் கப்பல் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? சிங்கள இராணுவ முற்றுகைக்கு உள்ளான வன்னி மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க சர்வதேசம் பின்னடிக்கும் இவ்வேளையில், "வணங்கா மண்' எனப் பெயரிடப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இக்கப்பல், உருவாக்கப் போகும் தாக்கங்கள் எத்தகையது என விரிவாகப் பார்ப்போம்.

பிரான்சில் வசித்த, யூதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு "இடப்பெயர்வு 1947' (Exodus 1947) என்கிற கப்பல், 1947 ஆம் ஆண்டு யூலை 11ம் திகதி செற்றி (Sete) துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. "எஸ் எஸ் பிரசிடன்ட் வோர்பீல்ட்' (SS President Warkield) என்ற நீராவிக் கப்பலிற்கு, "" இடம்பெயர்வு 1947'' என்று பெயரிடப்பட்டு 4500 யூத அகதிகள் அதில் ஏற்றப்பட்டனர். அக்கப்பலில் கட்டப்பட்டிருந்த பதாகையில் "ஹகனா கப்பல் இடப்பெயர்வு 1947' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

"ஹகனா' ( Haganah) என்றால் "பாதுகாப்பு' என்று யூதரின் கீப்று (Hebrew) மொழியில் பொருள்படும். அக்கால கட்டத்தில் இயங்கிய " ஹகனா' என்கிற துணை இராணுவ அமைப்பானது, பின்னாளில் இஸ்ரேலிய இராணுவக் கட்டமைப்பின் மையச் சக்தியாக மாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை கிட்லரின் இனப்படுகொலைகளிலிருந்து தப்பிய யூத மக்கள், அமெரிக்கப் பிரஜைகள் சிலரின் ஆதரவுடன், பல கப்பல்களில் பாலஸ்தீனத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இக்கப்பல்களை பாலஸ்தீனத்தினை அண்மித்த சர்வதேசக் கடற்பரப்பில் இடைமறித்த பிரித்தானியக் கடற்படையினர், யூதமக்களை ஏற்றி வந்த அக் கடற்கலங்களை திருப்பி அனுப்ப முயற்சித்தார்கள். அதன் மீது தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன.

அன்றைய பாலஸ்தீன நிலம், பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததையும் கவனிக்க வேண்டும். இந்த "இடப்பெயர்வு 1947' கப்பல் மீது, பிரித்தானியா தாக்குதல்களைத் தொடுத்ததால். சர்வதேச அளவில் இச் சம்பவம் பெரும் கவனயீர்ப்பினை ஏற்படுத்தி, பாலஸ்தீனத்தை பிளவுபடுத்தும் தீர்மானமொன்றை ஐ.நா. சபையில் உருவாக்க வழிவகுத்தது. அதாவது "இடப்பெயர்வு 1947' என்கிற கப்பல் பயணம், ஒரு புதிய தேசத்தின் பிரசவிப்பிற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று கூறலாம். ஆகவே தாயகம் நோக்கிய "வணங்கா மண்' பயணிப்பில், சர்வதேசம் மறந்த, எம்மக்களிற்கான உடனடித்தேவைகளை பூர்த்திசெய்யும் உணவு, மருந்துப்பொருட்களை ஏற்றிச் செல்லப்படும் அதேவேளை, பன்னாட்டுச் சதிவலைகளை கிழித்தெறியும் உத்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

யூதர்களின் "தாயகம்' நோக்கிய இடப்பெயர்வுப் பயணமும், புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின், வணங்கா வன்னி மண் நோக்கிய ஆதரவுப்பயணமும், வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டு நின்றாலும், சர்வதேச விழிப்புணர்வு என்கிற பொதுநிலையில் இவை பொருந்தி நிற்பதைக் காணலாம்.

1934 ஆம் ஆண்டிலிருந்தே யூதமக்களின், பாலஸ்தீனத்தை நோக்கிய கப்பல் பயண இடப்பெயர்வு முன்னெடுக்கப்பட்டதைக் காணலாம். முதலில் வேலோஸ் (Velos), யூனியன் (Union) பெயர்கொண்ட கப்பல்களில், சட்டபூர்வமற்ற யூதக் குடியேற்றவாசிகளின் இடப்பெயர்வு ஆரம்பமானதோடு, இந்தப் பயணங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனாலும் பயண முயற்சிகள் இடைநிறுத்தப்படவில்லை. 3000 யூதர்களை ஏற்றிச்சென்ற "சல்வடோர்' (Salvador) என்ற கப்பல், 1940 ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதியன்று புயலில் சிக்குண்டு அழிந்தது. அதேவேளை பசுபிக் (Pacific), மைலோஸ் (Milos), அட்லாண்டிக் (Atlantic) என்கிற கப்பல்கள் நவம்பர் 1940 அன்று கைபா (Haifa) வைச் சென்றடைந்தன. அக்கப்பலில் இருந்தோர் "பற்றியா' (Patria) என்ற பிரித்தானிய கப்பலிற்கு மாற்றப்பட்டு, மொறிசியசை நோக்கி திருப்பி அனுப்பும் வேளையில், இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த "ஹகனா' இயக்கத்தினர், இக்கப்பலில் குண்டொன்றை வெடிக்க வைத்ததில், 250 பேர் இறந்தனர்.

1947 ஏப்ரலில், 2641 யூத அகதிகளை ஏற்றிக்கொண்டு, பிரான்சிலிருந்து பயணித்த "தியடோர் ஹேர்ஸ்' (Theodore Herzl) என்ற கப்பல், பிரித்தானியாவினால் வழிமறிக்கப்பட்டு, சைப்பிரசை நோக்கி திருப்பி விடப்பட்டது. எத்தகைய இடர்வரினும், யூத இடப்பெயர்வு முயற்சிகள் முடங்கவில்லை. இறுதியில் அம்மக்களின் இடைவிடாத போராட்டமும், தொடர்கப்பல் பயணங்களும் ஐ.நா.சபையை அசைத்து, தமது நாட்டிற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இஸ்ரேலின் உருவாக்கம் குறித்து, பல முரண்நிலை விவாதங்கள் சரித்திரபூர்வமான ஆதாரச் சிக்கல்கள் இன்னமும் தொடர்ந்தாலும். இவ்வரலாற்றுப் பதிவிலிருந்து பெறப்படவேண்டிய போராட்டக் குணாம்சத்தை உள்வாங்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு.

ஆனாலும் பாலஸ்தீனத்தை நோக்கி யூத இடப்பெயர்வு காலத்தில், நாசி ஹிட்லரைப் போற்றிய அரபுத் தலைவர்களும் இருந்தார்கள். தற்போது, இந்திய உதவியைப் போற்றும் நிமால் சிறிபால சில்வாவின் இந்த வாரக் கூற்றினை அரபுத்தலைவர்களின் அந்த நாளைய ஆதங்கத்தோடு ஒப்பிடலாம்.

ஆகவே ஆழமான அரசியல், மற்றும் மனிதாபிமானப் பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கும் இந்த "வணங்கா மண்' பயணத்தை வெற்றி பெறக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லும்பணி புலம்பெயர்ந்த தமிழீழ மக்களைச் சார்ந்தது.

அடங்கா வன்னிமண், சிங்களத்திற்கெதிரான தனது உக்கிரச் சமரினை முன்னெடுத்துக்கொண்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமண் அதன் நோக்கங்களை சென்றடைய புலம்பெயர் மக்கள் தம்மால் முடிந்த கடமைகளைச் செய்ய வேண்டும். இந்த வரலாற்றுத் திருப்ப முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..!

:D:D:o:huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.