Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TMVPயிடம் சயனைட் உட்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் உறுப்பினர்கள் உள்ளனர் லக்ஷ்மன் கிரியல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TMVPயிடம் சயனைட் உட்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் உறுப்பினர்கள் உள்ளனர் லக்ஷ்மன் கிரியல்ல:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் ஆயுதங்களைக் கையளித்தனர் என பொய்யான கண்காட்சியை நடத்திய போதிலும் அவர்களிடம் சயனைட் உட்கொள்ளும் உறுப்பினர்கள் மாத்திரமல்ல தற்கொலைத் தாக்குதல் நடத்தும் உறுப்பினர்களும் உள்ளனர் என்பது தமது நம்பிக்கை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பிள்ளையானின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடம் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் குழுவொன்றை உருவாக்க உதவுமாறு அரசாங்கம் கோரியதாக தெரிவித்த லக்ஷ்மன் கிரியல்ல, அந்த மாகாண சபை உறுப்பினர் இதனை தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைள குறிப்பிட்டுள்ளார்.கப்பம் பெற்றுக்கொள்வதற்காக 6 வயதான வர்ஷா என்ற சிறுமியை கடத்திச் சென்ற ரி.எம்.வீ.பீயினர் தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்தே அந்தச் சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த கட்சியினர் அரசாங்கத்துடனும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைசாத்திட்டுள்ளவர்கள் எனவும் ராஜபக்ஷவின் கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

மகிந்தவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொண்டவர்களே மகிந்தவின் கொலை ஒப்பந்தங்களை செய்கின்றனர் என தாம் சாட்சியுடன் கூறியதாகவும் இதற்கு ஆளும் கட்சியினர் சிரித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகங்கள் இவற்றை எழுத பயந்தன,காணாமல் போதல், கப்பம் பெறுதல் போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்த போது, அவர்கள் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டனர்.

யுத்தத்தின் போர்வையில் செய்யும் குற்றங்கள் குறித்தே ஐக்கிய தேசிய கட்சியினர் கூறிவந்தனர்.கொலை,ஆட்கடத்தல் என்பன அரசாங்கத்தின் நாகரிகமாக மாறியுள்ளது. சிவில் சமூகம் இவற்றைக் கரகோஷம் செய்து பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது.

குற்றச்செயல்களை கண்டிபிடிப்பதில் காவற்துறையினருக்கு திறமைகள் இருந்த போதிலும் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் செய்ய விடுவதில்லை. இதன் காரணமாகவே அரசியல் அமைப்பு சபையை ஸ்தாபித்து காவற்துறை ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோருகிறது.

வர்ஷா என்ற சிறுமியை கொலை செய்தவர்கள் சட்டத்திற்கு முன்கொண்டு வரப்படுவார்கள் என தான் எண்ணவில்லை எனவும் இந்த சம்பவங்களை பார்க்கும் போது கிழக்கு மாகாண தேர்தலில் என்ன நடந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் எனவும் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை உலகில் முதன்மை இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் கருத்து வெளியிடும் போது அதனை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. எனினும் காகிதத்தை எடுத்து கொண்டு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பிச்சை கேட்பதை மாத்திரம் ஏற்றுக்கொண்டுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=7647&cat=1

"ஒரு பானை சோற்றுக்கு ............." என்பது பழமொழி! அண்மையில் மனிதத்தை தொலைத்த ஒட்டுக்குழு ஒன்றினால் திருமலையில், ஓர் பிஞ்சு புழுக்களுக்கு இரையாக்கப்பட்டிருக்கிறது.

இப்படங்கள் புலம்பெயர் நாடுகளிலும், மனிதத்தை தொலைத்து அலையும் ஒட்டுக்குழுக்களினதும், சிங்கள அடிவருடிகளுக்கும் சமர்பணம்.

trincogirl.jpg

trincogirl1.jpg

trincogir2.jpg

trincogir4.jpg

trincogir5.jpg

trincogir6.jpg

தமிழனே தமிழனுக்கு கொடுமையிழைக்கும்போது மாற்றானிடம் எப்படி கருணையை எதிர்பார்க்க முடியும்.

துரோகிகளை அழித்தாலே போதும். எமக்கு விடுதலை விரைவாக கிடைத்து விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.