Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா எதிர்வரும் ஆண்டுகளில் துண்டாடப்படுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா எதிர்வரும் ஆண்டுகளில் துண்டாடப்படுமா?

”அமெரிக்கர்களது கனவு சிதறிவிட்டது” கூறுவது இகோர் பனாரின் எனும் ரஸ்யாவைச்சேர்ந்த அரசியல் ஆய்வாளர். பிரான்சைச் சேர்ந்த சரித்திரவியல் ஆயவாளராகிய இமானுவல் ரொட் என்பவரும் இதனை ஆமோதிக்கின்றார் ஆனால் சற்றுத் திருத்தங்களுடன்.

நேற்றையதினம் பிலிப்பைன் நாட்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சர்வதேச ரீதியில் பிரபல்யமான இந்த அரசியல் ஆய்வாளர் இதைக் கூறியதும் அதை மற்றவர் ஆமோதித்ததும் உலகளாவியரீதியில் தற்போதைய நிலவரங்களை அவதானித்து வருபவர்கள் கொஞ்சம் என்ன ரெம்பவுமே ஆடித்தான் போயுள்ளார்கள். காரணம் இதைத்தொடர்ந்து அவர் கூறிய விடையங்கள் இன்னமும் ஆச்சரியப்பட வைக்கக் கூடியவை.

உலகளாவிய ரீதியில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் பராக் ஒபாமாவால் இவ்விடையத்தில் ஒரு துரம்பைக்கூட அசைத்துவைக்க முடியாதெனவும். அவர் கடந்தகாலத்தின் ரஸ்யநாட்டு அதிபராகவிருந்து பின்பு செல்லாக்காசாகிப்போன, மிகைல் கோர்ப்பச்சேவ் போன்றே காணப்படுவார் எனவும், அவரது பேச்சு வன்மையால் காரியங்கள் எவையும் சாதிக்க முடியாது எனவும் கூறுகின்றார்.

மேலும் அமெரிக்கர்களது கனவுலக வாழ்கை மிகவும் மோசமான தரத்திற்குக் கீழிறங்கும் எனவும் இதன்காரணமாக எதிர்வரும் வருடம் அமெரிக்கநாட்டில் உள்நாட்டுக்கலவரங்கள் ஏற்பட்டு, இதுவெ அமெரிக்கா பிளவுபட ஏதுவாகவமையும் எனவும் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்நிலை படிப்படியாக இக்கட்டான சூழ்நிலைக்குவந்து,; அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள்ளும், முறையே டெக்சாஸ் மெக்சிக்கோவின் கட்டுப்பாட்டிற்குள்ளும், அற்லான்டா மாநிலத்துடன் சேர்ந்த பகுதிகள் ஐரொப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், வடஅமெரிக்க பகுதிகள் கனடாவின் கட்டுப்பாட்டிற்குள்ளும, தற்போது கனடாவால் தாரைவார்த்து அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்ட அலெஸ்காப்பகுதி ரஸயாவின் கட்டுப்பாட்டிலும், கவாய்த்தீவுக்கூட்டம் சீனா அன்றேல் யப்பான் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள்ளும். வருமெனக் கூறினார்.

இதற்கான முக்கிய காரணம் உள்நாட்டில் ஏற்படப்போகும் கட்டுக்கடங்காத அமைதியின்மையும, கலவரங்களுமேயாகும் எனத்தெரிவித்தார்.

இதனை ஆமோதிப்பது போலவே பேசிய பிரான்ஸ் நட்டின் சரித்திர ஆய்வாளராகிய இம்மானுவல் ரொட் என்பவர், இவை அனைத்தும் உடனேயே நடக்கச் சாத்தியமில்லை எனவும் எதிர்வரும் பத்துவருடங்களில் இது சாத்தியமாகலாம் எனவும், சீனாவும் ரஸ்யாவும் உலக ஒழுங்கினைத் தீர்மானிக்கும் சக்தியாக அமையப்போகின்றனவெனவும், இவை இரண்டும் சேர்ந்து உலகின் புழக்கத்தில் ஓர் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் எனவும் கூறினார்.

இதில் இரண்டாமவராகிய இம்மானுவல் ரொட் என்பவர் ரோம இராட்சியத்திற்கப் பின்பு எனும் நூலில் சோவிலத் யூனியன் துண்டு துண்டாக உடைந்துபோகுமென எதிர்வுகூறியிருந்தவராவர். அதன்பின்பு இவரே, 2002ன் பின்பு ரஸ்யா மீண்டெளும் எனவும் கூறியிருந்தார்.

தற்பேதைய பொருளாதாரச் சீரற்றநிலை உலக உணவுக் கையிருப்பினை இல்லாமற் செய்துவிடும் எனவும் இதன்காரணமாக இரண்டாம் உலகநாடுகளில் வன்முறை பரவி அங்கும் நிலையற்ற தன்மையே காணப்படும் எனவும் தெரிவித்தார்.

எனினும் இவர்கள் இருவரும் இந்தியாவைப்பற்றி எதுவித கருத்தும் கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு முதல் இந்தியா துண்டாடப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் துண்டுகள்

வட இந்தியா

தென் இந்தியா-த.னாடு,ஆந்திரா,கேரளா,கர்னாடகா

காஸ்மீர்

வடமேல் இந்தியா

இலங்கை

தற்போதைக்கு இந்த 5 பிரிபடப்ப்போகும்

ஏற்கனவே

பாகிஸ்தான்

வங்காளதேசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசங்களின் சிறைக்கூடமே இந்தியா. அவை ஒரு நாள் விடுவிக்கப்படும். அது அமெரிக்காவுக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

"எனினும் இவர்கள் இருவரும் இந்தியாவைப்பற்றி எதுவித கருத்தும் கூறவில்லை."

அவர்கள் நாடுகளை பற்றி கருத்து கூறியதால் இந்தியாவை பற்றி ஏதுவுமே கூறாமடியாமல் விட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"அமெரிக்காவில் உள்நாட்டு கலவரங்கள் மோசமடையும்"

அவர்கள் சொல்வதுபோல் எல்லாம் அப்படியே நடந்துவிடாது என்பதே எனது தனிபட்ட கருத்து. ஆனாலும் உள்நாட்டு கலவரங்கள் என்பது சாத்தியமாகலாம். அமெரிக்காவில் ஆயுதவிற்பனை தற்போது சூடுகண்டுள்ளது. அதற்கு பல கரணங்கள் இருந்தாலும். ஆயுதவிற்பனையாளர்களின் உத்திதான் முதற்காரணமும் முழுகாரணமும் எனலாம். ஆதாவது ஜனநாயக கட்சி ஓபாமா தலைமையில் ஆட்சியை பிடித்துள்ளதால் ஆயுதவிரும்பிகளின் விருப்புக்குமாறாக அவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்கி யாரும் ஆயுத்ததை வைத்திருக்கலாம் எனும் சட்டத்தை இல்லாது செய்துவிடுவார்கள் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டு ஆயுதபிரியர்களுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணுவதன் விளைவே அவர்கள் பல ஆயுதங்களை வாங்கி வீடுகளில் தொங்கவிட்டு கொண்டிருக்கிறார்கள். தவிர இந்த ஆயுத விற்பன்னர்கள்தான் ஆயுதபிரியர்களுக்கு உறையும்படியாக சொல்லிவருகிறார்கள் பொருளாதாரம் பெருவீழ்சியை கண்டால் அரசாங்கம் கவுளும் எனவும் அப்படியோரு நிலைவரும்போது உங்களது வீடுகiளுயும் சொத்துக்களையும் உங்களது ஆயுதங்களே பாதுகாக்கும் என்றும். இது உண்மையிலேயே ஒரு தேசத்திற்கு எதிரான பிரச்சாரம். ஆயுதங்களை போதுமான அளவு கையில் வைத்திருப்பவர்களை இப்படியான சிந்தனைகள் சென்றடைவது ஒரு நாடடிற்கு பலத்த பின்னடைவை கொடுக்கும் அத்தோடு அவர்களை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளுமு;போது வன்முறைக்கு துண்டும். இருந்தாலும் அவர்கள் அதை மேடைபோட்டல்லவா சொல்கிறார்கள். அரசியலில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் நாட்டின் விசுவாசிகள் போல் தோற்றம் காட்டும் இவர்களின் உண்மைநிலை பணகொள்ளைதான். ஆனாலும் விசுவாசிகள்; போல் வேடமிட்டு அவர்களே நாட்டுக்கு குந்தகம் பண்ணிகொண்டிரு;பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்தைக் கூறியுள்ள இருவருமே ஓபாமாவுக்கு எதிரான நிறத்துவேசத்தின் அடிப்படையிலேயே இதைக் கூறியுள்ளார்கள்போலத் தெரிகின்றது. இன்றுள்ள நிலையில் முதலில் உடைபடக்கூடியது இந்தியாவே. அங்குதான் மக்கள் இந்துத்துவம் என்னும் கண்ணுக்குத் தெரியாத கடவுளர்களpன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள உணர்வால் மிகவும் போலித்தனமாக மானிலச்சிறைகளில் எவ்வித அதிகாரமுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகாரவர்க்கம் மக்களை ஏமாற்றித் தங்கள் குறுகிய கால சுயநலத்திற்காக ஐக்கியம் பேசுகின்றதேயொழியஇ உண்மையில் சில குடும்பங்களின் கைக்குள் ஆட்சிபோய்விட்ட அவலமே இந்தியாவில் தொடர்கின்றது. அந்த நிலையே வெகுவிரைவில் மாறக்கூடிய சூழ்நிலையுள்ளது.

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.