Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இருவர் இன்று சுட்டுக்கொலை

Featured Replies

திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில் அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்றுடன் சந்தேக நபர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை வெளியில் தெரிய விடாமல் கொல்லப்பட்டு விட்டார்கள். ஒட்டுக்குழுவினால் தான் இவ் ஈனச்செயல் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைச்சம்பவங்கள் அரச பயங்கரவாதிகளின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றதாக அறியப்படுகின்றது.

இந்த வழக்கு இத்துடன் முடிந்ததாகவே கருதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை வெளியில் தெரிய விடாமல் கொல்லப்பட்டு விட்டார்கள். ஒட்டுக்குழுவினால் தான் இவ் ஈனச்செயல் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலைச்சம்பவங்கள் அரச பயங்கரவாதிகளின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றதாக அறியப்படுகின்றது.

இந்த வழக்கு இத்துடன் முடிந்ததாகவே கருதலாம்.

உலகத்தின் கண்கள் இறுகமூடியநிலையில்.............

தமிழின அழிப்பின் ஒரு பகுதிதான் இதுவும்.......

  • கருத்துக்கள உறவுகள்

முதற் தடவை சந்தேக நபர்கள் சுடப்பட்டபோது அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டபோதுதான் சுடப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இம்முறையும் கைதிகள் அனைவருமே சுடப்பட்டு இறப்பதானது சிறுமி வர்ஸா கொலை தொடர்பாக மேலும் சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது. சந்தேக நபர்கள் அல்லது கைதிகள் தப்பிச்செல்ல முயன்றால் அவர்களின் தப்பிச்செல்லும் வாய்ப்பினை தடுப்பதற்காக அவர்கள் காயப்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதுதான் காவலாளிகளின் கடமை. இப்போது புலிகளுடன் ஏற்பட்ட சண்டையில் சந்தேகநபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறி சிறுமி வர்ஸா கொலை மற்றும் கப்பம் கேட்ட விவகாரத்தில் அப்பட்டமாக புலிகளை இழுத்துவிட்டு வேண்டுமென்றே கதை சோடிப்பது போன்ற தோரணையும் இங்கே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்

ஆனால் இது ராஐபக்ச குடும்பவிபகாரம் என்பதால் யாரும் வாய்திறக்கமாட்டார்கள்

அதுசரி

ஐனநாயகம்

மக்களாட்சி

ஒற்றையாட்சி

குடியுரிமை

சமஉரிமை................

என்றால் என்ன????

  • தொடங்கியவர்

சில நாட்களில் இச்செய்தியும் மறக்கப்்பட்டுவிடும்.

அன்று கிருசாந்தி

இன்று வர்சா

நாளை ?

இடையில் எத்தனையோ ஆயிரம் ஆயிரம்.

தமிழருக்குத்தான் புதிதுபுதிதாக எத்தனையோ அவலங்கள். ஒன்றை பார்த்து கண்ணீர் விடுவதற்குள் மற்றொன்று.

எத்தனை கொடுமைகள் எத்தனை அவலங்கள் கேட்பதற்கு நாதியற்று அழிக்கப்படுகிறதே எமதினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.