Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாநிலைப் போராட்டத்தில் இருப்பவரில் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறது பிரித்தானிய அரசு: பிரான்சிலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவதர்சன் சிவகுமாரவேல், 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்லரன் ஆகிய இளைஞர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முதல் இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.

கடும் குளிருக்கு மத்தியிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் இவர்கள் இருவரும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று 9 ஆம் நாள் மாலை உண்ணாநிலைப் போராட்ட மேடைக்கு வந்த மைக் டொனால்ட் என்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், உண்ணாநிலை போராட்டத்தில் இருப்பவர்களில் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு அவரை அழைத்துச் சென்று வன்னியில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து ஆராய பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எழுத்து படிவவமும் பயண விவரமும் இன்று பிற்பகல் தொடர்புபட்ட தரப்புக்களிடம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திப்பில் ஏழு உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இலங்கை பிரச்சினை குறித்து சிவதர்சன் சிவகுமாருடன் கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் இருவரையும் பானம் அருந்தியவாறு உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருமாறும் பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இந்த வேண்டுகோளை மேற்படி இருவரும் ஏற்று பானம் அருந்தியவாறு தொடர்ந்தும் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பிரான்சிலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டம்

பிரான்சில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்விலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர்.

பிரான்சின் இன்வலிட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வானது நேற்று முன்நாள் புதன்கிழமை முதல் ஈபிள் கோபுர வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன், அங்கு நடைபெறும் இப்போராட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

அதேநேரம் பரிஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றது.

பிரான்சில் நடைபெறும் இந்த போராட்டங்களில் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் நால்வர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஈபிள் கோபுர வளாகத்தில் ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரே சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

- விடுதலைப் புலிகளை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும்

- வணங்கா மண் பயணத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை பிரான்சு அரசாங்கத்திடம் முன்வைத்து இவர்கள் தமது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதேவேளையில் பரிஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நேற்று தொடக்கம் மேலும் இருவர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரே இங்கு உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதேநேரம் அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி எழுச்சி முழக்கங்களை முழங்கிப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன், தமது போராட்டம் காலவரையறை இல்லாமல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து மக்களையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் உண்ணாவிரதமிருக்கும் இளைஞனை அமெரிக்காவின் ஐ.நா. சபைக்கு அழைத்துச் செல்ல பிரித்தானியா முடிவு

திகதி: 10.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்]

உடனடிப்போர் நிறுத்தம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்கும் இளைஞர்களை சந்தித்தார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனா அம்மையார்.

அதன் போது அம்மையர் கீழ்க்கண்ட விடையங்களை குறிப்பிட்டார்.

1. லண்டனில் சுயாதீனமாக ஆரம்பிக்கப் பட்டு , சட்டபூர்வ அனுமதி ஏதும் இன்றி பாராளுமன்ற சதுக்கத்தை நிரப்பி நிற்கும் மக்கள் போராட்டத்திற்கு சட்ட பூர்வ அங்கீகாரத்தை வழங்குதல் , அதன் மூலம் மாநகரக் காவல் துறையினரின் கெடுபிடிகளை கணிசமான அளவு குறைத்தல்

2. ஏப்பிரல் 15 ,புதன் கிழமையன்று உண்ணா நோன்பாளர்களில் ஒருவரான திரு. சிவதர்சன் சிவகுமார் அவர்களை ஜ.நா சபைக்கு அழைத்துச்செல்லல்

இவற்றை எடுத்துக் கூறிய சிவோன் மக்டோனால்ட் அம்மையார் அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.

london20090410002.jpg

குறைந்த பட்சம் நீராகாரம் அருந்தவேண்டும் , அத்தோடு திரு. சிவதர்சன் சிவகுமார் விமானப் பயணத்திற்காக ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும் இல்லையேல் விமானப்பயணம் சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டார்.

இக் கோரிக்கைகளை நன்கு பரிசீலித்த இளைஞர்கள் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி தாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு மக்கள் அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று நீராகாரம் அருந்துமாறு ஒரே குரலில் கூறினார்கள். அதனால் நீராகாரம் மட்டும் உட்கொண்டு , தமக்கு இறுதித்தீர்வு வரும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உண்ணா நோண்பை நோற்கும் இளைஞர்களின் உடல் நிலை தமக்கு கவலை அளிப்பதாக அவர்களை அவ்வப்போது பரிசோதனைகளுக்கு உட்படுத்திவரும் மருத்துவக் காவல்துறையினர் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

london20090410004.jpg

இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத பிரித்தானிய கொள்கை வகுப்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: இந்த வாரம் தமிழ் மாணவர்களின் தொடர் போராட்டம் சட்டபூர்வ அனுமதி ஏதும் இன்றி ஆரம்பித்து முக்கிய வீதிகளை முடக்கி சகல உடகங்களினதும் கவனத்தினையும் ஈர்த்து, பின் அகிம்சை வழியில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தொடர்வதால் பிரித்தானிய மக்களின் கவனத்தையும் , நன்மதிப்பையும் பெற்றிருக்கும் இவ்வேளையில் ஏற்கனவே திட்டமிட்டப்டி வருகிற சனிக்கிழமை (11/04/2009) கண்டனப்பேரணி முக்கியத்துவமானது, என்றும் இதில் கலந்து கொள்ளும் மக்கள் தொகை பாரிய கொள்கை மாற்ற்ங்களை கொண்டுவரும் என்றார்

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்...பார்த்து கவனமாக! இப்படித்தான் கூறுவினம் அங்கே வரவழைத்து...இங்கே வரவழைத்து உங்களோடு கதைக்கிறோம் என்று. அனால் கடைசியில் எதாவதொரு நொண்டிச்சாட்டை காட்டி இழுத்தடிப்பினம்.

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...பார்த்து கவனமாக! இப்படித்தான் கூறுவினம் அங்கே வரவழைத்து...இங்கே வரவழைத்து உங்களோடு கதைக்கிறோம் என்று. அனால் கடைசியில் எதாவதொரு நொண்டிச்சாட்டை காட்டி இழுத்தடிப்பினம்.

நல்லதே நடக்கும் என்று இருப்போம்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.