Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் உள்ள சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவில நோர்வே தூதரகத்தை அடித்தார்களே சிங்களவர்கள். அதற்கு பிறகுதான் நோர்வே சிறீலங்காவுக்கு வேகப்படகுகள் பரிசாகக் கொடுத்தார்கள்;! இப்ப எங்களுக்கு சிறீலங்கா பரிசு தரவேணும்!

நிழலி உங்கள் கருத்தை பார்க்க எனக்கு உங்களை அப்பாவியாக கற்பனை செய்ய வருகிறது!!

நிழலி உங்கள் கருத்தை பார்க்க எனக்கு உங்களை அப்பாவியாக கற்பனை செய்ய வருகிறது!!

"ஜனநாயக ஞானிகள் "அப்படித்தான் சொல்லுவார்கள் .

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நடைபெற்ற அச்சம்பவத்திற்காக சிறீலங்கா அரசிற்கு வருத்தம் தெரிவித்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்.

இந்தக கடும் குளிரிலும் ஓய்வு, ஒழிச்சலின்றி எம்முறவுகள் இங்கு(நோர்வேயில்) போராட்டம் நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை ஏமாற்றுவதற்கான போலி வாக்குறுதிகளை வழங்குவதையும், வெறுமனே சரி நாங்கள் பார்க்கின்றோம், நீங்கள் கலைந்து போங்கள் என்ற ரீதியிலும் தான் எமக்கான இவர்களது "வாக்குறுதிகள்??" உள்ளன.

சிறீலங்கா இனவெறி அரசின் கொலைவெறிக்கெதிராக நோர்வே நாடாளுமன்ற முன்றலில் தமிழ் இளையோர்களின் உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக…!

சிறீலங்கா இனவெறி அரசால் வன்னியில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுவருவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்து, நோர்வேவாழ் தமிழ் இளையோர்களாலும், உணர்வாளர்களாலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது..

நோர்வே நாடாளுமன்ற முன்றலில் நேற்று முன்தினம்முதல் இரவுபகலாக தொடர்ச்சியாக நடைபெறும் இச்சுழற்சி முறையிலான போராட்டத்தில் இன்று மேலும் பல நூற்றுக்கணக்கான உணர்வாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். மதியப்பொழுதில், நாடாளுமன்றத்தை அண்டியுள்ள வீதிகள் வழியாக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தோர் ஊர்வலமாக சென்றிருந்தனர். இவ்வூர்வலம், நாடாளுமன்றத்திற்கு அண்மையில் சிறீலங்காவின் தூதரகம் அமைந்திருக்கும் வீதியூடாக சென்றவேளையில், மிகுந்த உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த போராட்டக்காரர்களால் சிறீலங்கா தூதரகம் அடித்து நொருக்கப்பட்டது. அவ்வேளையில் காவல்துறையினரின் பிரசன்னம் அங்கு இல்லாதிருந்தபோதிலும் பின்னர் அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதுவிடயம் தொடர்பாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தபோது, ஊர்வலம் சிறீலங்காவின் தூதரகத்தை அண்மித்தபோது உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருந்த போராட்டக்காரர்கள் உணர்வுகளை அடக்கமுடியாமல் தூதரகத்தை தாக்குவதற்கு ஓடியபொழுது அங்கு நின்ற உணர்வாளர்கள் பலர் அதை தடுத்து நிறுத்துவதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்தபோதிலும் சுமார் ஆயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பிற்கு முன்னால் யாராலும் அவர்களை எதுவும் செய்துவிட முடியவில்லை என தெரிவித்தனர்.

சிறீலங்காவின் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பில் தனது வருத்தத்தை வெளியிட்டிருக்கும் நோர்வே வெளியுறவு அமைச்சர் துழயௌ புயாச ளுவøசந, தூதரகம் தாக்கப்பட்டமையானது நோர்வேயின் சட்டதிட்டங்களை மீறுவதாக இருக்கிறதெனவும், நோர்வேயில் உள்ள வேற்றுநாடுகளின் தூதரகங்களை பாதுகாக்கும் பொறுப்பு நோர்வே அரசுக்கு இருப்பதால் சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி காவல்துறையினரை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஒஸ்லோ காவல்துறையினர் தெரிவித்தபோது, இதுவரையிலும் தமிழர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறைகளோ அல்லது அசம்பாவிதங்களோ குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை என்றும், ஆனால் இன்றைய தினம் துரதிர்ஷ்டவசமாக சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்டிருப்பது தமக்கு வருத்தத்தை அளிக்கின்றது என்றும், தூதரகம் தாக்கப்பட்ட நேரத்தில் அவ்விடத்தில் காவல்துறையினர் நின்றிருந்தாலும்கூட உணர்ச்சிப்பிழம்புகளாக நின்றிருந்த போராட்டக்காரர்களை தம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்திருந்ததோடு, இனிவருங்காலங்களில் இவ்வாறான போராட்டங்களையும், ஊர்வலங்களையும் ஏற்பாடுசெய்பவர்கள் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் முன்னேற்பாடுகளை செய்வது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தனர்.

தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நோர்வேக்கான சிறீலங்கா தூதுவர், தனது தூதரகத்தை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து நோர்வே காவல்துறை தவறிவிட்டது என்றும், தூதரகத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக நோர்வே அரசிடம் நட்டஈடு கோரப்போவதாகவும் தெரிவித்ததோடு, தனது தூதரகம் போர்க்களம்போல் காட்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், தனது தூதரகத்தின் கண்ணாடிக்கதவுகளும், அலுவலக பாவனைப்பொருட்களும் உடைந்திருப்பதை பார்த்து போர்க்களம்என்று வர்ணிக்கும் தூதுவர், வன்னியில் தமிழ் மக்கள்மீது அவரது அரசாங்கம் மேற்கொள்ளும் உயிரழிப்புக்களையும், உடைமைகள் அழிப்புக்களையும் நேரில் சென்று பார்த்தால் என்ன கூறுவார் என கேள்வியெழுப்பினார்கள்.

சிறீலங்கா தூதரகம் அடித்து நொருக்கப்பட்டதன்பின் மீண்டும் நாடாளுமன்ற முன்றலை வந்தடைந்த போராட்டக்காரர்கள் பின்னர் இரவு ஒன்பது மணியளவில் அமைதியான முறையில் தீப்பந்த ஊர்வலமொன்றையும் காவல்துறையினரின் அனுமதியோடு நடாத்தியிருந்தனர். இத்தீப்பந்த ஊர்வலமானது தொடர்போராட்டம் நடைபெறும் இடமான நாடாளுமன்ற முன்றலிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் ”புனித ஊலாவ்” தேவாலயம் வரை நடைபெற்றது. அமைதியாக இடம்பெற்ற இத்தீப்பந்த ஊர்வலம் தேவாலய முன்றலை அடைந்ததும் அங்கு மதகுருமாரின் உரையோடு முற்றுப்பெற்றது. இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் அனைத்து இளையோர்களும், உணர்வாளர்களும் மீண்டும் நாடாளுமன்ற முன்றலை அடைந்து தமது சுழற்சி முறையிலான போராட்டத்தை தொடர்கின்றனர். இன்றைய தொடர் போராட்டத்திலும், தீப்பந்த ஊர்வலத்திலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமையும், இன்றைய போராட்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நோர்வேயின் பிரதான செய்திப்பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Edited by விதுரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் காப்பாற்கிறார்களோ..........

இதுவரை எப்படிப்பார்த்தார்கள்?

அப்படி கேளுங்கோ பனங்காய் :)

"நோர்வேயில் உள்ள சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல்!"

இந்தத்தாக்குதலை தமிழர்தான் நடத்தினார்களா? 40-42வினாடிகளை பார்க்கவும்... ஓருவர் கையில் சிறிலங்கா கொடியுடன் முகத்தை காட்டிக்கொள்ளாமல் மறைந்து பின்வாங்குகிறார். மானமுள்ள தமிழன் அந்த இனத்துவஷம் பிடித்த கொடியை கையில் எடுப்பானா??

தமிழரை சாட்டி சிங்களவர் செய்த வேலையோ என்று கூட நினைக்கத்தோன்றுகிறது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணோளியை வெளியிட்டதில் எனக்கு நிறையவே வருத்தமுண்டு. எதிரி தமிழனின் மீது படுகொலைகளை ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து செய்கின்றான். அவனின் நோக்கத்தை செய்கின்றான். அவனுக்குப் பீத்திக் கொள்ள எதுவும் தேவைப்படவில்லை. இந்த இலட்சணத்தில் எமக்கு ஆதாரம் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி மிரரில் , இன்னும் சிறிது விரிவாகவும் , நேரடியாக தமிழில் கதைக்கும் ஒலியுடனும் ஓளிப்பதிவு காட்சி இணைத்துள்ளார்கள்.

ஒலியை நீக்கியதற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.