Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

சென்னை: ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் காவல்துறையினர் இதை அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இப்படி கூடக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள பிளாட்பாரத்தில் பந்தல் போட்டு பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில்தான் முத்துக்குமாரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ்தமிழ்

உண்மையில் இவர்களை கண்டு நான் வியக்கின்றேன்...நன்றிகள் பல சகோதரிகளே

எந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்பின் சார்பின்றி பெண்கள் மட்டுமே முன்னெடுத்துள்ள இப்போராட்டம்இ போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள் என்ற அடிப்படையில்இ சோனியாவே இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நிச்சயம் இந்த பெண்களின் உண்ணாவிரதம் தமிழ்நாட்டுப் பெண்களிடம் ஒரு விழிப்புணர்சியை கொண்டு செல்லும்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=6882

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக குரல் கொடுக்கும் தமிழ் நாட்டு சகோதரிகளின் இன உணர்வுக்கு தலை வணங்குகிறேன். இம்முறை தமிழரை கொத்து கொத்தாக கொல்லும் காங்கிரஸ் கூட்டணியை மண்கவ்வ வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டை பொறுத்தவரையில் , பெண்களின் கோபம் பொல்லாதது . ( ஒரெயொரு பெண்ணைத்தவிர )

அது நிச்சயம் பலிக்கும் . உங்கள் போராட்டத்திற்கு தலை வணங்குகின்றேன் சகோதரிகளே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் 5வது நாள் உண்ணாவிரதம்- 3 பேர் உடல் நலம் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2009, 12:00

சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சென்னையில் உண்ணாவிரதத்தில் இருந்து வரும் பெண்கள் 5வது நாளாக போராட்டத்தைத் தொடருகின்றனர். அவர்களில் 3 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், அப்பாவித் தமிழர்களை கொல்வதை நிறுத்த வேண்டும், இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பேராசிரியை சரஸ்வதி தலைமையில் சென்னை கொளத்தூரில் நூறு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. ஆனால் இதை போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரத இடத்தை மாற்றி இருந்து வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். நேற்றுடன் நான்கு நாட்கள் ஆனதால், சில பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பலர் சோர்வுடன் காணப்பட்டனர்.

சென்னை கவிதா(30), தேனி சித்ரா(40), காஞ்சீபுரம் சசிகலா(30) ஆகியோரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

உண்ணாவிரதம் மேலும் நீடித்தால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

போராட்டம் நடைபெறும் இடத்தில் கிராமியக் கலைஞர்கள் தாரை, தப்பட்டைகளை வாசித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை வாழ்த்தி பாராட்டினர். முழு ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

உண்ணாவிரத்தில் இருந்து வரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் பாண்டிமாதேவி கூறுகையில், உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த இடத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்தால் மறியல் போராட்டத்தில் குதிப்போம்.

சென்னைக்கு 20-ம் தேதி சோனியா காந்தி வருகிறார். அப்போது அவரைச் சந்தித்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படக் கோரி வலியுறுத்துவோம். எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றார்.

தற்ஸ்தமிழ்

பெண்கள் 5வது நாள் உண்ணாவிரதம்- 3 பேர் உடல் நலம் பாதிப்பு

சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சென்னையில் உண்ணாவிரதத்தில் இருந்து வரும் பெண்கள் 5வது நாளாக போராட்டத்தைத் தொடருகின்றனர். அவர்களில் 3 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கவிதா(30)இ தேனி சித்ரா(40)இ காஞ்சீபுரம் சசிகலா(30) ஆகியோரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை வாழ்த்தி பாராட்டினர். முழு ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

உண்ணாவிரத்தில் இருந்து வரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் பாண்டிமாதேவி கூறுகையில்இ உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த இடத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்தால் மறியல் போராட்டத்தில் குதிப்போம்.

சென்னைக்கு 20-ம் தேதி சோனியா காந்தி வருகிறார். அப்போது அவரைச் சந்தித்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படக் கோரி வலியுறுத்துவோம். எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரத உறவுகளுக்கு என் பாராட்டு .......உங்கள் தியாகம் வீண்போகாது . உறுதியாய் உங்கள் கோரிக்கையை முன்னெடுங்கள் .சகோதரிகளே.

ச‌த்‌தியமூ‌ர்‌த்த‌ி பவனை மு‌ற்றுகை‌யி‌ட்ட ம‌க‌ளி‌ர் அமை‌ப்‌பின‌ர் கைது

இல‌ங்கை‌யி‌ல் உடனடியாக போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய வ‌லியுறு‌த்‌தி த‌‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைமை அலுவலகமான ச‌த்‌தியமூ‌ர்‌த்த‌ி பவனை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற மக‌ளி‌ர் அமை‌ப்‌பினரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். இதனா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

இல‌‌ங்கை‌யி‌ல் உடனடியாக போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ப‌ல்வேறு பெ‌ண்க‌ள் அமை‌ப்புகள் சே‌ர்‌ந்து ''ஈழ‌த் த‌மி‌ழின படுகொலையை எ‌‌தி‌ர்‌க்கு‌ம் பெ‌ண்க‌ள்'' எ‌ன்ற அமை‌ப்பை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த அமை‌ப்‌பின‌ர் கட‌ந்த 13ஆ‌ம் தே‌தி முத‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர். கொள‌த்தூ‌‌ரி‌ல் தொட‌ங்‌கிய இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நே‌ற்று மு‌ன்‌தின‌த்த‌ி‌ல் இரு‌ந்து ம‌.தி.மு.க தலைமை அலுவலகமான தாய‌கத்த‌ி‌ல் நட‌ந்து வரு‌‌கிறது.

20 பெ‌ண்க‌ள் கொ‌ண்ட குழு தொட‌ர்‌ந்து உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க நூ‌ற்று‌க்கண‌க்கான பெ‌‌ண்க‌ள் ‌தி‌ன‌ந்தோறு‌ம் இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்று வரு‌கி‌‌ன்றன‌ர். இ‌ன்று 5வது நாளாக உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்ட‌ம் நடைபெறு‌கிறது

உ‌‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் மக‌ளி‌ர் அமை‌‌‌ப்‌பினரை ச‌ந்‌தி‌த்து பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் டா‌க்ட‌ர் ‌கிரு‌‌ஷ்ணசா‌மி, ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ‌ர் ஆ‌கியோ‌ர் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ன்று இய‌க்குன‌‌ர்க‌ள் பார‌திராஜா, ‌அ‌மீ‌ர், ம‌ணிவ‌ண்ண‌ன், சு‌ந்த‌ர்ராஜ‌ன், மனோபாலா, நடிக‌ர் ச‌த்‌யரா‌ஜ் ம‌ற்று‌ம் ப‌ல்வேறு அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து ஆதரவு தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இத‌ற்‌கிடையே உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த பெ‌‌ண்க‌ளி‌ல் 5 பே‌ர் ‌நிலைமை மோசமானது. அவ‌ர்க‌ளு‌க்கு உடனடியாக மரு‌த்துவமனை‌‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. பி‌ன்ன‌ர் ‌அவ‌ர்க‌ள் மீ‌ண்டு‌ம் உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நாளை மறுநா‌ள் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியாகா‌ந்‌தி த‌மிழக‌ம் வரு‌கிறா‌ர். இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த சோ‌னியா ஒருவரா‌ல் ம‌ட்டுமே முடியு‌ம் எ‌ன்பதா‌ல் அவரை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து வ‌லியுறு‌த்‌து‌ம் வகை‌யி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் போரா‌ட்ட‌‌ம் நடைபெ‌ற்று வரு‌கிறது எ‌ன்று ம‌க‌ளி‌ர் அமை‌ப்‌பின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

திருவ‌ண்ணாமலை‌யி‌ல் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்‌ட‌ம் செ‌ய்த 34 பே‌ரு‌ம், நெ‌ல்லை‌ வாசுதேவந‌ல்லூ‌ரி‌ல் ‌32 பே‌‌‌ர் உ‌ள்பட த‌மிழக‌ம் முழுவது‌ம் நூ‌ற்று‌க்கண‌க்கான ம‌க‌ளி‌ர் அமை‌ப்‌பின‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மாலை பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர் த‌மிழக கா‌ங்‌‌கிர‌ஸ் க‌ட்‌சிய‌ி‌ன் தலைமை அலுவலகமான ச‌த்‌தியமூ‌ர்‌த்த‌ி பவனை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர். அவ‌ர்க‌ள் கா‌ங்‌‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலுவை ச‌ந்த‌ி‌‌க்க வேண‌்‌டு‌ம் எ‌ன்று கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். ஆனா‌ல் அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி‌க்க மறு‌த்து ‌வி‌ட்டன‌ர். ஆனா‌ல் தடையை ‌மீ‌றி செ‌ல்ல முய‌ன்ற அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். இதனா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்‌கிடையே நாளை மதுரை‌யி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய அள‌‌வி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்போவதாக ம‌க‌ளி‌ர் அமை‌ப்‌பின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

http://tamil.webdunia.com/

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையர்களின் பேராட்டத்திற்கு தலை வணங்குகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.