Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ம.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்ற கனிமொழி உண்ணாவிரதம் இருக்கும் பெண்களுக்கு கண்ணீர் மல்க ஆறுதல்

Featured Replies

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் ம.தி.மு.க. அலுவலகத்தில் சாகும் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான 'தாயகம்' வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. தொடர்ந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்து வருவதால் அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டார்கள். 11 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில். நேற்று மாலை 6.30 மணியளவில் தி.மு.க. எம்.பி. கவிஞர் கனிமொழி கருணாநிதி திடீரென்று ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வந்தார்.

அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களை சந்தித்து அவர்களின் உடல்நலனை அக்கறையோடு விசாரித்தார். தரையில் உட்கார்ந்தவாறே துயரத்தோடு அவர்கள் கூறியதை கண்ணீர் மல்க கேட்டார்.

இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும்போது எங்கள் 20 பேரின் உயிர் ஒரு பொருட்டே அல்ல என்று அவர்கள் கண்ணீருடன் சொன்னபோது, கனிமொழியின் கண்களிலும் கண்ணீர் பொங்கியது.

அவர்களிடம் தொடர்ந்து அவர் பேசுகையில், "இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை யாருமே நியாயப்படுத்தவில்லை. போர் நிறுத்தம் ஏற்பட முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உங்கள் கோரிக்கையை சோனியா காந்தி கவனத்திற்கு கொண்டுசெல்வேன். உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் நலமாக இருந்தால்தானே இலங்கை தமிழர்களுக்காக போராட முடியும். எனவேஇ தயவு செய்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவர்களை பார்த்துவிட்டு வெளியே வந்த கனிமொழி நிருபர்களிடம் கூறும்போது, "இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த பெண்களுக்கு தி.மு.க. சார்பில் அனுதாபம் தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். எங்களுக்கும் வலியும் வேதனையும் உண்டு. போர் நிறுத்தம் ஏற்பட சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களின் கோரிக்கையை சோனியாவிடம் எடுத்துச் சொல்வேன்' என்று தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழ் மக்களை பாதுகாக்கவும் கோரி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கறுப்புத்துணியால் வாயை மூடியவாறு மாலை 6 மணியளவில் உண்ணாவிரதம் இடத்தில் இருந்து திடீரென ஊர்வலமாக புறப்பட்டார்கள். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கூட்டமாக செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துவிட்டார்கள். எனவே, ஒவ்வொருவராக தனித்தனியே ஊர்வலமாக சென்றார்கள். இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

நன்றி : தமிழ்வின்

அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்குது

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் நலமாக இருந்தால்தானே இலங்கை தமிழர்களுக்காக போராட முடியும். எனவேஇ தயவு செய்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

அச்சுப் பிழை போலக் கிடக்குது. "நீங்கள் உயிரோடு இருந்தால் தானே எங்கள் போன்ற முடிச்சவிக்கியளுக்கு தொடர்ந்து ஓட்டுப் போட்டு டெல்லிக்கனுப்பலாம்" எண்டு தான் சொல்லியிருப்பா. தமிழ் வின் திருத்திப் போட வேணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா நடிப்பு இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு

கண்ணீர் சில சமயம் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என் பயத்தால் வந்திருக்கும்.

சீரியல் பார்த்தே சனங்கள் விம்மி விம்மி அழுதுகள். உதுகளைப்பார்த்தும் கண்ணீர் வராட்டிக்கு அது என்ன பிறப்பு?

நரிக்குப் பிறந்தது நரியாகத்தானே இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய செய்திப்படி போலீசாரை குவித்து உண்ணாநிலைப் போராட்டம் செய்யும் பெண்களை கைது செய்ய இருக்கிறார்கள். இதற்க்கு தான் அந்த 'கண்ணீர் ஆறுதல்' நாடகம்.

எல்லாம் அரசியல் விளையாட்டுக்கள்.

(அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா :icon_idea::mellow::blink: )

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா என்ன அன்பு என்ன பாசம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.