Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடியலில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை

Featured Replies

இன சுத்திகரிப்பை இலங்கை இன்று விடியலில் துவங்கி இதுவரை 1000க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டொரோண்டோ 360 யூனிவர்சிட்டி அவன்யூ தற்சமயம் அங்கு போராட்டத்தை நடத்தும் மக்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை பார்க்கும் இந்நகர தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து அங்கு குழுமவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

google map

TTC Map with Google

Please use Osgoode and St.Patric subways

நிதர்சன் கூறும் விடயங்கள் முக்கியமானவை:

இப் போராட்டம் நேற்று மாலை 7 மணி முதல் மாற்றம் பெற்று சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பெருந்திரலான மக்கள் இங்கு அணிதிரண்ட வண்ணமிருக்கின்றனர். உணர்வின் விளிம்பில் இளைஞர்களின் கோபக்கணல்கள் வீசிக்கொண்டிருக்கின்றது. ரொரன் காவல்த்துறையினரும் கலகமடக்கும் சிறப்பு காவல்துறையினரும் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரவு பகல் பாராது நடைபெறும் இப்போராட்டத்தில் தற்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியின் நடுவே அமர்ந்திருந்து தமது போராட்டத்தை நடாத்துகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் நிலக்கீழ் தொடரூந்தில் பயணிக்கும் பட்சத்தில் போராட்டத்தின் மையப் பகுதியில் உள்ள சென்.பற்றிக்ஸ் தொடரூந்து நிலையத்தில் இறங்கலாம். அதே நேரம் வாகனங்களில் செல்வோர் தரிப்பிடங்களுக்கு குறிப்பிட்டளவு பணம் செலுத்த வேண்டி வரும்.

அதே நேரம், போராட்டத்தில் பங்கு பற்றுவொருக்கான உணவுகள், தேனீர், என்பன தன்னார்வ தொண்டர்களாலும், ஒழுங்கமைப்பாளர்களாலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பல நூற்றுக்கணக்கானோர், ரிம்கோட்டனின் வரிசையாய் நிற்பதைக்காணக்கூடியதாக இருந்தது.

கழிப்பற வசதிகள் பற்றி விபரங்கள தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள், பலர் நகரில் பல மையில் தொலைவுக்கு நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இரவில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் இருக்கின்றது. தற்காலிக வசதிகளை ஏற்ப்டத்த முடிந்தால் ஏற்பாட்டாளர்கள் ஏற்ப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம், வானகங்களின் சொந்த காரர்கள் தங்கள் வாகனங்களின் மூலம் போராட்டத்தை நடாத்த முடியும், ஆனால் எது வரினும் தளராத துணிவோடு நின்று போராட வேண்டும். அந்த உறுதி எம்மவர்களுக்கு கண்டிப்பாக தேவை!

பணிகளுக்கு பரீட்சைகளுக்கு செல்பவர்கள், சூழற்சி முறையிலாவது வந்து கலந்து கொள்ளுங்கள், உங்கள் வருகை வரலாற்றை திருப்பி எழுதும்!

நேசமுடன் நிதர்சன்

வன்னித்தென்றல் இணையம்

நன்றி: நிதர்சன்

Edited by Sniper

அங்கு போய்டுதான் வாரன் திரும்ப உடனே போரன்,முதலில் ஒரு பக்கம் ரோட்டினை தடுத்தார்கள் பின் சனம்5000- 10000 தாண்டியதும் மற்றபக்கமும் மறித்தாச்சு.,இப்ப 15000- 25000 சனம் இருக்கும் இன்னும் வருகின்ரார்கள்.

  • தொடங்கியவர்

நல்லது உறவுகளே! நீங்கள் செல்லும் போது ஆங்கில தொலைக் காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் உங்களிடம் செவ்வி எடுக்கவரலாம் எனவே அதற்கும் தயாராகி நில்லுங்கள். எம்மக்கள் மீது ஏவப்பட்டுள்ள அவலத்தை தெளிவாக எடுத்துக்கூறுங்கள். 3 மாத காலமாக தெருக்களில் இறங்கி போராடியும் பாரளுமன்றம் முன்பு உண்ணாநோன்பு இருந்தும் 33000 மக்கள் கூடி நின்று வேண்டிய வேண்டுகோளுக்கு செவி சாய்க்காததாலும் இவ்விடத்தை விட்டு அகலா போராட்டம் செய்கின்றோம் என்பதை தெளிவாக கூறுங்கள். எம் மக்களின் உணவையும் மருந்தையும் இலங்கை அரசு ஆயுதமாக பயன் படுத்துகிறது இதை உலக நாடுகளோ அய்நாவோ, கனடாவோ, அமெரிக்காவோ தடுத்து நிறுத்தாது எம் வேதனையை மென் மேலும் கூட்டியதால் இங்கு தீர்வு கிட்டும் வரைஇவ்விடத்தை விட்டு அகலா போராட்டம் செய்கின்றோம் என்பதை தெளிவாக கூறுங்கள்

  • தொடங்கியவர்

முக்கியமான விவரங்களை கூறியுள்ளோம் அங்கு செல்லும் உறவுகளுக்கு நிச்சயம் பயன் தரும்.

  • தொடங்கியவர்

தற்சமயம் இங்கு ஆட்கள் குறைவடைந்துள்ளதால் காவல் துறை ஒரு வழி பாதையை திறக்க செய்ய முயல்வதாக தெரிகிறது. உறவுகளே விரைவாக செல்லுங்கள், வாகனங்கள் எடுத்து சென்று அவதியுறாதீர்கள்.

நானும் இப்போ தான் வந்தேன் இந்த ஒருவழிபாதையை கட்டாயம் திறக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்,இதைதான் முன்பும் ஒட்டாவாவில் செய்தோம்.காரணம் முற்றாக அடைத்தால் யாரும் அவ்விடத்துக்கு வரமாட்டார்கள்.திறந்துவிட்டா

  • தொடங்கியவர்
நானும் இப்போ தான் வந்தேன் இந்த ஒருவழிபாதையை கட்டாயம் திறக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்,இதைதான் முன்பும் ஒட்டாவாவில் செய்தோம்.காரணம் முற்றாக அடைத்தால் யாரும் அவ்விடத்துக்கு வரமாட்டார்கள்.திறந்துவிட்டா

அந்த வீதியில் சிக் கிட்ஸ் உட்பட 4 வைத்தியசாலைகள் உள்ளன அதனால்தான் ஒருபக்க வீதியை அவர்கள் திறக்க முயற்சிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நிலையை ஒரு நிமிடத்தில் வேண்டுமானாலும் கனேடிய அரசு முடிவுக்கு கொண்டுவரலாம். எங்களிடம் மல்லுக்கட்ட நினைக்கும் காவல்த்துறை அரசாங்கத்துடனும் அரசியல் வாதிகளுடனும் பேச வேண்டும். ஒரு பாதையை விட்டுக்கொடுத்தால் போராட்டம் நடாத்துவதன், பலன் என்ன?

மக்களுக்கு காட்சிப்படுத்த இங்கு போராட்டம் அல்ல. அரசியல் வாதிகள் கீழிறங்கி வரவேண்டும். அவர்கள் வாசலில் ஒட்டாவாவில் நின்ற போது வராதவர்கள் ரொரன்ரோ வந்து பேசட்டும். அவர்கள் பேசினால் பின் நாங்கள் ஏன் வீதியை மறித்து நிற்க்க போகின்றோம்.?

அதே நேரம் வைத்திய சாலைக்குசெல்ல மாற்று வழிகள் உண்டு. அவை சற்று தூரமானை சுற்றுப்பாதைகளை கொண்டவை. ஆனால் பெரியளவில் நேரமாகாது.

இன்று பலரும் ஒரு பாதை திறப்பதை பற்றி பேசினார்கள். ஆனால் அப்படி திறப்பதற்க்கு ஏற்ப்பாட்டாளர்கள் என்ற பெயரில் "பெரிசு"கள் சம்பதித்தால் அது இளைஞர்களின் உணர்வுகளுக்கு விழுந்த சவுக்கடியாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கனேடிய அரசு எமக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏன் எனில் நாம் இன்றும் இப்போதும் மிகவும் பொறுமையாகவும், சட்டத்தை மதித்துமே செயற்ப்படுகின்றோம்.!

Edited by Nitharsan

  • தொடங்கியவர்

சரிதான்.

இது எவராலும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்களின் வழியிலேயே போராட்டம் செல்லும். பல இளைஞர்கள் காவல்துறையிடம் அடிவாங்கினாலும் சரி அந்த இடத்தை விட்டு அசைவதில்லை என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள். மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் ஒரு அழுத்தத்தை நிச்சயமாக கனேடிய அரசாங்கத்திற்கு கொடுக்கும்.

  • தொடங்கியவர்

இது எவராலும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்களின் வழியிலேயே போராட்டம் செல்லும். பல இளைஞர்கள் காவல்துறையிடம் அடிவாங்கினாலும் சரி அந்த இடத்தை விட்டு அசைவதில்லை என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள். மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் ஒரு அழுத்தத்தை நிச்சயமாக கனேடிய அரசாங்கத்திற்கு கொடுக்கும்.

உண்மைதான் மேலும் காவல்துறை இதுவரை போராட்ட முடிவு குறித்து அறியாததால் கவலைபடவும் இல்லை....ஆனால் யாராவது விஷமிகள் நுழைந்தால் தூக்குவதற்கு தயாராக உள்ளனர்.

நம் மீது எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் காக்கின்றனர்.

போராட்ட மையத்திற்குள் கண்காணிப்பு பணியும் செய்கின்றனர், மக்களிடம் நட்புடன் இருக்கின்றனர்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோரன்ரோவில் மக்கள் கொஞ்சம் அதிகம் தூங்கி விட்டார்கள் போல இருக்கின்றது. அல்லது போராடி களைத்து விட்டாhக்ளே தெரியவில்லை.மக்களின் தொகை அதிகரிக்க வேண்டும். போராட்டம் இன்னும் பல செய்திகளை கனேடிய அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் சொல்ல வேண்டும். ஆனாலும் இன்று வருகை தந்த மக்கள் தொகை காணாது. இப்படியே போனால் நாம் இந்த போராட்டத்தில் தோல்வியடைவோம். நாம் இங்கே தோல்வியடைவது தாயகத்தில் உயிரை கையில் பிடித்து வண்ணம் நெடு நாட்களாக உயிர்வாழும் கனவோடு வாழும் எம் உறவுகளும் தோற்றவர்களாகி செத்தவர்களாகி விடுவார்கள்.

எனவே உறவுகளே,

எனக்கவோ, யாருக்காகவோ நீங்கள் வரவேண்டாம், உங்களின் உறவுகளுக்காக வாருங்கள். சுழற்ச்சி முறையில் வந்து இருந்து விட்டுப்போங்கள். இது சட்டத்துக்கு முரணான போராட்டம் அல்ல. எங்களது கனேடிய சட்டத்துக்கு அமைவாக, நடக்கும் ஒரு போராட்டம். எங்களின் சிறப்புரிமைகளில் ஒன்றான ஒன்று கூடும் சுததந்திரத்தை பயன்படுத்துகின்றோம்.

எனவே அச்சம் களைந்து வீறு கொண்டு வாருங்கள்!

  • தொடங்கியவர்

ஏனய்யா ஒரு செத்தவீடென்றாலே 25 ஆட்கள் நிக்கிறீங்க கோயமுத்தூர் என் ஊர் நான் ஏன் இதற்கு போகனும்னு நினைப்பது தமிழுக்கு தமிழ் மக்களுக்கு மனிதநேயத்திற்கு செய்யும் பெரும் துரோகம் என நான் எண்ணும் போது தமிழீழத்தில்இருந்து வந்த நீங்கள் வன்னியில் படும் அவலங்களுக்கு தெருவில் இறங்கி சொல் அம்புகளால் சிங்களவனை துளைக்கவேண்டாமா? அப்படி செய்யலைன்னா உங்களுக்கும் கருணாக்கும் என்ன வேற்றுமை? இல்ல அந்த சண்டாளர்கள் மகிந்தவினருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

  • தொடங்கியவர்

பரமேஸ்வரன் உடல் நிலை மோசம்

இதை எல்லாம் அறிந்துமா நீங்கள் மௌனியாக இருக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

எது என்னவோ இன்றிரவு முதல் அனைவரும் தயவு செய்து கூடிட துவங்குங்கள் காவல்துறை நம்மை கலைக்காமல் காத்து நில்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.