Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்புவேன்: கடலூரில் ஜெயலலிதா உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர்: தமிழர்கள் மீதோ, தமிழக மக்கள் மீதோ கருணாநிதிக்கு அக்கரை இல்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதி கையில் ஆட்சி சிக்கி தவிக்கிறது என ஜெ., குற்றம் சாட்டினார்.

சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி, கடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சிதம்பரம், கடலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்நலம் மிகுந்த குடும்ப ஆட்சி தமிழகத்தில் உள்ளது. அதைக் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் உங்கள் ஓட்டுகளை பெற்று மத்தியில் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்., கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது. இரண்டும் சேர்ந்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன... பொருளாதார சீரழிவு, விவசாயி தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, இவைதான் மத்திய அரசு நாட்டிற்கு அளித்துள்ள பரிசுகள். நிர்வாக திறமையின்மை அலட்சிய போக்குதான் இதற்கு காரணம்.

கடந்த 1989ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தருகிறேன் என்று கூறிவிட்டு கருணாநிதி குறைபாடுகளுடன் விட்டு சென்றார். அந்த குறைபாடுகளை நான் 1991ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நிவர்த்தி செய்தேன். 1996- 2001ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி திவாலாக்கி சென்றதால் கசப்பு மருந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிதிநிலை சீரான போது சலுகைகள் வழங்கினேன். 50 விழுக்காடு அகவிலைப்படி சம்பளத்துடன் கொடுத்தேன். எனது ஆட்சியில் தான் அரசு ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். தற்போது இழி சொல்லுக்கு ஆளாகி உள்ளனர். அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.

தற்போது இலங்கையில் தனி ஈழம் அமைக்க 40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றி தர வேண்டும். அப்போது தான் நான் சொல்வதை மத்திய அரசு கேட்கும். வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை இந்திரா காந்தி எப்படி அனுப்பினாரோ அதேப்போல தனி ஈழம் அமைக்க இந்திய ராணுவத்தை அனுப்புவேன். தமிழக மக்கள்தான் என் குடும்பம், என்னை முதலமைச்சாராக்கி அழகு பார்த்த நீங்கள்தான் எனக்கு முக்கியம். உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை. குடும்ப ஆட்சியை முடிவு கட்டும் சக்தி உங்களிடம் உள்ளது. என்னால் முடியாதது எதுவும் இல்லை. கருணாநிதியை போன்று உங்களை மத்திய அரசிடம் அடகு வைக்க மாட்டேன். மத்திய அரசிடம் போராடி திட்டங்களை பெற்றுத்தருவேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...35&cls=row3

Edited by kuddipaiyan26

தமிழீழத்தில ஏற்கனவே இந்திய இராணுவம் நிற்பதாய் சொல்லப்படுகின்றது. இப்ப அங்க நிற்கிற ஆட்களையும், ஆயுதங்களையும் வெளியில எடுப்பித்தாலே பெரிய புண்ணியமாய் போகும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறீ லங்கா பயங்கரவாத அரசாங்கத்திற்கு இந்தியாவினால் உதவிகள் செய்யப்படுவதை நிறுத்தினாலே.. மிகுதி வேலையை தமிழ்மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா தேர்தலில் வெற்றிகனியடிக்க ஈழத்தவர்களுக்கு ஈழம் என்ற அம்பை எய்திருக்கிறார் ஆனால் அந்த அம்பு இலக்கில் விழ போகுதா அல்லது அது குறி தவற போகுதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

ஒரு குட்டி கதை ஒன்று

ஒரு வீட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பார்கள் என நினைத்துகொள்ளுங்கள் அவசரமாக ஒருவனுக்கு பணம் தேவை அவனோ எவ்வளவு வட்டி கொடுத்தாவது அந்த பணத்தை பெற்றுகொள்ளவேண்டும் என நினைக்கிறான் அதை அந்த வீட்டுக்குகாரார்கள் தாராளமாக வழங்குகிறார்கள் ஆனால் அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை அந்த பிள்ளைகள் என்ன செய்தும் தன்னுடைய் பெற்றோர்களை அடக்க முடியவில்லை அவர்கள் வட்டிக்கு பணத்தை கொடுத்துகொண்டுதான் இருக்கிறார்கள் அதுதான் இன்றைய நிலை இந்தீயாவில் . அந்த பெற்றோர்களை திருத்த முடியவில்லை அவர்களால் ஆனால் அந்த வீட்டில் இருந்தாகவேண்டும் இதுதான் நிலை.

அந்த வீட்டில் உள்ள பெற்றோர்கள் யார் என்பது தெரியும் உங்களுக்கு நாம் அவர்களை வீழ்த்த பார்க்கவேண்டும்

இந்த கலைஞரால்தான் ஒரு சொட்டு அரிசாவது கிடைத்தது அந்த ஈழமக்களுக்கு நாம் நரம்பு இல்லாத நாக்கை அடக்கி வைத்திருக்கவேண்டும் யாருக்கும் திட்டி மீண்டும் மீண்டும் எதிரியாக்க வேண்டாம்

இதே ஜெயலலிதா தான் போர் நடக்கும் போது மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று சொன்னவ

அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் :unsure::unsure:

என்ன முனிவர் நீங்கள் எப்ப கருநாய் நிதியின் கட்சிக்கு மாறின்னீங்கள்? இல்லாட்டிக்கு எப்பவும் திருத்த முடியாத கழுதையில் தான் இருக்கிறீங்களா?

நீங்கள் சொல்வது 100 வீதம் சரிதானுங்கோ. கருநாய் நிதியின் முயற்சியால் தான் ஈழத் தமிழனுக்கு வாய்க்கரிசி கிடைக்சது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனிவர் நீங்கள் எப்ப கருநாய் நிதியின் கட்சிக்கு மாறின்னீங்கள்? இல்லாட்டிக்கு எப்பவும் திருத்த முடியாத கழுதையில் தான் இருக்கிறீங்களா?

நீங்கள் சொல்வது 100 வீதம் சரிதானுங்கோ. கருநாய் நிதியின் முயற்சியால் தான் ஈழத் தமிழனுக்கு வாய்க்கரிசி கிடைக்சது.

எக்கோ நான் ஒன்றும் கருணாநிதி கட்சிக்கு தாவவில்லை பாருங்கோ மத்திய ரசு எடுக்கும் முடிவுகளுக்கு கலைஞரால் எதுவும் செய்ய முடியாதுங்கோ இதே போல் மத்திய அரசுடன் ஜெயல்லிதா கட்சியிருந்திருந்தால் கொஞ்சம் நிலைமையை என்ணி பாருங்கள் இதையும் விட மோசமாக அமைந்திருக்கும் நான் யாருக்கும் ஆதரவானவன் இல்லை நம் மக்கள் இன்னும் மண் குதிரையை வைத்து ஆற்றை கடக்கலாம் என நினைக்கிறாங்கள் .மத்திய அரசுக்கு கலைஞர் வழ்ங்கும் ஆதரவை விலக்கி கொண்டாலும் மத்தியில் ஆழும் வர்க்கம் இதை விட மேலாக ஈழ விடயத்தில் செய்திருக்கும் அது பாரதிய ஜனதாவாக இருந்தாலும் சரி ,காங்கிரசாக இருந்தாலும் சரி

இந்தீய ஆட்சியில் இருக்கும் எவனும் எம்மை காப்பாற்றமாட்டான் நான் கலைஞ்ரை சொன்னது அவரிருக்கும் போது சில உதவிகள் கிடைத்தது அது வெளிப்படையாகவும் ,மறைமுகமாகவும் என்பது உன்மை ஆனால் ஜெயா இருக்கும் போது அங்கு அகதிகளாக் யிருந்த மக்களை கேட்டுப்பார்த்தால் உன்மை உங்களுக்கு புரியும் ,

  • கருத்துக்கள உறவுகள்

அவை வந்தால் அது நடக்கும் இது நடக்கும் என்று விவாதிப்பதைவிட எமது தலைவனையும், இத்தனை துன்பங்களுக்கு முகம் கொடுத்தவாறு வாழும் மக்களையும் நம்புவதும், அவர்தம் கரத்தைப் பலப்படுத்தவதுமே இன்றைய தேவையாகும்.

அத்தோடு எம்மை நாம் நம்பவதும் அவசியமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.