Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தது என்ன?

Featured Replies

அடுத்தது என்ன?

எமது உறவுகளே....

பல்வேறு செய்திகள் வந்த வண்ணமுள்ளன..... உண்மைகள் பொய்கள் தெரியாமல் இருந்தாலும்...எது வரினும் நாம் எதிர்கொள்ளனும். திடமாக இருக்கனும் அடுத்து என்ன என்று நிதானமாகவும் மன உறுதியுடனும் நாம் முன்னெடுக்க வேண்டும். எங்கள் தலைவனின் வழிகாட்டலும் இதுவே.

ஆகவே உறவுகளே....

உறுதியாக நிற்போம். எதனையும் எதிர்கொள்வோம். ஆனால் நாம் எம் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் இன்னும் இன்னும் உறுதியோடு நாம் தொடர்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நம்பிக்கையை தளர வைத்து விடுதலை போராட்டத்தை திசை திருப்ப தான் சில வதந்தி முயற்சிகள்...

வன்னியில் நிலத்தை இழந்திருக்கலாம் - ஆனால் சிங்களத்துடன் ஆன எமது போர்க்களம் இன்னும் உண்டு... எமது விடுதலையை நாம் எடுக்கும் வரை அந்த களம் இருக்கும்.

இழப்புகளை கண்டு இலக்கை தவற விட்டால் - வரலாறு மன்னிக்காது நம்மை...

தெளிவான திடமான நோக்குடன், எமது ஈழப் போராட்டத்தை தொடருவோம்...

-----தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது என்ன?

எமது உறவுகளே....

பல்வேறு செய்திகள் வந்த வண்ணமுள்ளன..... உண்மைகள் பொய்கள் தெரியாமல் இருந்தாலும்...எது வரினும் நாம் எதிர்கொள்ளனும். திடமாக இருக்கனும் அடுத்து என்ன என்று நிதானமாகவும் மன உறுதியுடனும் நாம் முன்னெடுக்க வேண்டும். எங்கள் தலைவனின் வழிகாட்டலும் இதுவே.

ஆகவே உறவுகளே....

உறுதியாக நிற்போம். எதனையும் எதிர்கொள்வோம். ஆனால் நாம் எம் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் இன்னும் இன்னும் உறுதியோடு நாம் தொடர்வோம்.

மக்கள் போராட்டத்திற்கு உள்ள அனைத்து வழிகளும் கையாள பட வேண்டும் - முழு முனைப்புடன்....

இதுவரை இல்லாத புது வழிகள், யுக்திகள் - கண்டு எடுக்க படவும் வேண்டும்....

இது பற்றிய எமது புது யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம் இங்கு - ஆனால் ஒரு விடயத்தை கருத்தில் கொண்டு தான் செயல் பட முடியும்... நாலு பேர் கூடி நல்ல யோசனைகளை பரிமாறி கொள்ளும் போது, ஒன்று இரண்டு காட்டெருமைகள் அதை எப்படி குளப்பலாம் என்பதை பற்றியும் சிந்த்தித்து கொண்டு தான் இருப்பார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பது ஆறுதலான செய்தி. ஆனால் போர் முடிந்தது முழு இடத்தையும் சிறி லங்கா கைப்பற்றி வீட்டது என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. புலம் பெயர் தமிழர்களாகிய நாம் மிகவும் காலதாமதமாகவேனும் விழித்து கொண்டு வீதியில் இறங்கினோம், எமது இலக்கு இன்னும் அடையப்படவில்லை.

மீண்டும் நாம் தூங்கிவிடாது சிறி லங்கா மீது போர்குற்ற விசாரணை நடத்தவும், சர்வதேச சமூகம் மறுபடியும் எமது பிரச்சனையை கிடப்பில் போட்டுவிடாமல் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நலனை பேணவும், எமது இலக்கு புலிகளை சிறி லங்கா இல்லாது செய்துவிட்டது என்ற செய்தியுடனும் ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதை தெளிவாக எடுத்துரைப்போமா? புலம் பெயர் மக்களது போராட்டங்கள் தொடருமா?

தொடரவேண்டும் அதன் மூலம் தான் எமது கருத்தை மேலும் தெளிவாக சொல்ல முடியும், எமது தனி நாட்டு கோரிக்கை என்பது புலிகள் இயக்கத்தை அழித்து விடுவதால் தீர்க்கப்படுவதல்ல, எமக்கான உரிமைகள் வழங்குவதன் மூலமே தீர்க்க முடியும் என்பதற்க்காக நாம் தொடர்ந்து போராடியே ஆகா வேண்டும்.

The idea that Tamils in Sri Lanka face annihilation if they do not secure an independent homeland drives many of the most passionate voices in the Tamil diaspora. On the Monday morning edition of the BBC’s Global News podcast, Vinothini Kanapathipillai, who is an editor at the Tamil Guardian, argued that the end of the military campaign would not bring peace to Sri Lanka because, she said, the government has been using the war as a pretext to wipe out the Tamil population. Ms. Kanapathipillai told the BBC’s Fergus Nichol: “It seems to me that the conditions that created the L.T.T.E. have not changed and therefore, Is this the end for the Tamil resistance against what we see as genocide and oppression? I would argue not.”

http://thelede.blogs.nytimes.com/2009/05/1...nder/?ref=world

Edited by yarlpaadi

அடுத்து என்ன?

சிங்களவன் எமது போராட்டத்தை பின்தள்ளவில்லை முதலில் சிங்களவனுடன் சேர்ந்த இந்தியா அடுத்து ஏனைய போட்டி நாடுகள். இந்தியா மற்றும் போட்டிபோடும் நாடுகள் உதவிகள் இன்றி இந்த போரில் முன்னேற்றத்தை சிங்களம் கற்பனை கூட செய்ய முடியாது. எனவே புறநிலையில் சிங்களத்துடன் கைகோர்த்துள்ள ஒவ்வொரு கைகளாக ஒடிக்க வேண்டும்.

சிங்கள இராணுவம் பல்லாயிரம்வரை இறந்ததுக்கு அடிப்படைக்காரணம் இந்தியா என்பதை ஒவ்வொரு சிங்கள குடிமகனும் உணரவேண்டும். இலங்கையில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்தியா. இந்தியா இனியும் இலங்கையை சீரளிக்க முயலும் என்ற உண்மை; எடுத்துரைக்கப்பட வேண்டும். இன்று இலங்கை அரசின் ஆட்சியின் கீழ் தமிழ்மக்கள் வாழ்வதென்று ஒரு முடிவு வந்திருக்கின்றது. இனி தமிழர் சிங்களவர் அனைவரும் இலங்கையர்கள். இந்த இலங்கையர்களில் தமிழர்கள் இந்தியாவின் நயவஞ்சகத்தால் வாழ்வை சீரளித்த இலங்கையர்கள். இந்த இலங்கையர்கள் இந்தியா இலங்கை அரசுடன் நெருங்குவதற்கு எப்போதும் தடையாக இருக்க வேண்டும். இதே இந்தியாவின் பாதிப்பு ஒவ்வொரு இறந்த சிங்கள இராணுவக் குடும்பங்களையும் உணரும்படி செய்தல் வேண்டும். இந்தியாவுக்கு விரோதமான சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். இந்தியாவின் நயவஞ்சகத்தை ஒவ்வொரு அடுத்த தலைமுறைக்கும் எடுத்துரைக்க வேண்டும். தியாகி திலீபன் மற்றும் அன்னை பூபதியின் தியாகங்கள் எழுச்சியுடன் உலகெங்கும் வாழும் புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படவேண்டும். எமது தலைமுறைகள் என்றைக்கும் இந்தியாவின் நயவஞ்சகத்தை மறக்கக் கூடாது.

இன்றய யுத்தம் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பல நன்மைகளையும் செய்துள்ளது. குறிப்பாக எமது இளைய சமுதாயம் தாங்கள் வாழும் மேற்கு நாடுகள் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை ஆழ உணர வழிசெய்துள்ளது. அவர்களது உணர்வுகளுக்கு எவ்வகையான மதிப்பு என்பதை உணரச்செய்துள்ளது. ஒரு தாய்நாட்டின் அவசியத்தை இது இளைய தலைமுறைக்கு உணரச்செய்துள்ளது.

பிரிந்திருந்த காலங்களாக கடந்த கால போராட்டம் நிகழ்ந்தது. இனி சிங்களவனுடன் கூட இருந்து குழி பறிக்கவேண்டிய புதிய சந்தர்ப்பங்கள் தாயக மக்களுக்கு வந்துள்ளது. முதல்குழி பறிப்பு இலங்கை இந்திய நட்புறவை குறிவைத்திருக்கவேண்டும். இந்திய என்ற நயவஞ்சக நாடு எங்கு சென்றாலும் அதனால் அந்த நாட்டுக்க விமோசனம் கிடையாது. இது உண்மை. இதை நாம் நன்கு உணர்ந்து விட்டோம் இலைங்கையர்களாக எல்லோரும் இதை உணரும் வகை செய்தல் வேண்டும். தன் நாட்டிலேயே பல மில்லியன் சொந்த மக்களை இந்த நூற்றாண்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி நசுக்கும் இந்திய அதிகார வர்க்கம் என்னுமொருவனுக்கு எப்படி நன்மை செய்யும். இதுவரை காலமும் இந்தியா பறித்த குழிகளில் தமிழச்சாதியின் பிணங்கள் நிறைந்து விட்டது. இனி காலம் மாற வேண்டும். இந்திய அதிகாரவர்க்கம் எதிர்பார்க்கும் இலங்கையுடனான நட்புறவுக்கு குழிதோண்டுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.